Monday, December 10, 2018

*அழகிய வினாக்கள்; அற்புதமான பதில்கள்*


ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.

📝 *01) நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?*

👉         நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

📝 *02) மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?*

👉         தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

Thursday, November 15, 2018

சூஃபி ஞானிகளான இறைநேசர்களை

சூஃபி ஞானிகளான இறைநேசர்களை தவறாக நினைப்பவர்களும், நேசிப்பவர்களும், அவர்களின் மூலமாக நிறையப் பெறக்கூடிய வர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும். சூஃபி ஞானிகளின் வாழ்க்கையை உற்று நோக்க தவறி விடுகிறார்கள்.

 இறைநேசர்கள்.ஞானம் பெற்றுவதற்காக அவர்கள் அடைத்துக் கொண்ட வலி உங்களுக்கு தெரியுமா ? . அப்படியொரு மறுபக்கத்தை தான் நீங்கள் பார்க்க, அறிய, உணர முயற்சி செய்து இருக்கிறீர்களா?. அவர்களைப் பற்றி கேட்டதெல்லாம், படித்ததெல்லாம், கூறியதெல்லாம், உங்களுக்கு சாதகமாகவும்,  காப்பாற்ற கூடியவராகவும் காராமாத் அற்புதம் செய்யக்கூடியவறாகவும் மட்டுமே தவிர வேறு ஒன்றுமில்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

Monday, November 12, 2018

எந்த நிலையில் இருந்தாலும் லைக் கொள்ள வேண்டும்.

ஒரு சின்ன கதை சூதாடி தனது மனைவியிடம் கெஞ்சினான் இதுதான் எனது கடைசி முயற்சி ஏனொன்றால் நான் என்னிடம் உள்ள அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டேன். இப்போது என்னிடம் ஒரேயொரு ரூபாய்தான் இருக்கிறது இதை வைத்து சூதாடி முயற்ச்சிக்கிறேன் இதற்கு பிறகு என்னால் சூதாட முடியாது ஏனென்றால் இதன் பிறகு என்னிடம் எதுவும் இல்லை என்று கூறி சூதாட சென்றான். மனைவிக்கு ஒரு சியதான சந்தோஷம் இதன் பிறகு கணவர் சூதாட மாட்டார் என்று.

அந்த சூதாடி கடைசியாக இருந்த ஒரு ரூபாய் வைத்து பல லட்சம் கிடைத்தது ஆனால் அதனுடன் திரும்பி வராமல் அந்த பல லட்சத்தையும் வைத்து சூதாடினான் கடைசியில் அனைத்தையும் தொற்றான்.

Wednesday, November 7, 2018

காது மிஷின் கதை...!

காது மிஷின்  கதை...!

நேற்றைய தினம் கவிஞர் தா.காசிமைப் பற்றி ஒரு செய்தி வெளிட்டிருந்தேன்.
அதன் பின்னூட்டத்தில் நண்பர் கலுங்கு யாஸின் ஒரு செய்தி குறிப்பிட்டிருந்தார்.

கவிஞர் காதில் செவிட்டு மிஷின் மாட்டியிருப்பார் என்பதுதான் அது. அதுவும் மேடையில் அப்படிக் காட்சி தந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கு இது ஆச்சரியச் செய்தி.
கவிஞருக்கு ஒரு செவிட்டு மிஷின் கிடைத்தது உண்மைதான்.
அதை அவர் மாட்டியது குறிப்பிட்ட எங்களைத் தவிர வெளியார் எவரும் பார்த்திருக்கவே  முடியாது.

அந்தக் காது மிஷினில் ஒரு சரித்திரம் மறைந்திருந்தது.

காயிதெ மில்லத் தம்பியார் K.T.M.அஹமது இப்றாஹீம் சாஹிப் காது மிஷின் மாட்டி இருப்பார்கள்.

Thursday, November 1, 2018

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின...

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின...: அவர்கள்(ஸஹாபாக்கள்) இஸ்லாம் மார்க்கத்தை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டுவதில் மட்டற்ற ஆர்வம் கொண்டிருந்தார்கள்.அவர்கள் காட்டிய ஆர்வம்,அல...

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின்...

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின்...: திருத்தோழர்கள் ஏவாத நன்மையும் இல்லை;தடுக்காத தீமையும் இல்லை. தமக்கே பாதகம் ஏற்பட்ட நிலைகளில் கூடத் தம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, மனசாட்...

Wednesday, October 31, 2018

சகிப்புத் தன்மை, உரை : மௌலவி Ansar Hussain Firdousi

உங்கள் உடலில் தினமும் நடக்கும் சூட்சும நிகழ்வு.

 الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ‏
அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:3)

எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள வேண்டும். எப்படியென்றால் நீங்கள் இறை திக்ரு தியானத்தின் மூலம் உங்கள் உள்ளொளி யாக சென்று ஆழ்மனதை அடைந்து ஆழ்மனதை பயன்படுத்தி நீங்கள் இறை சக்தியுடனும், பிரபஞ்சத்துடனும் இணைந்து தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி தொடர்பு கொள்ளும் உங்கள் ஆழ்மனம் உங்களுக்கு தூரத்தில் இருக்கின்ற இன்னோரு வரின் ஆழ்மனதுடன் தொடர்பு கொள்ள முடியும்.

உங்கள் உடல், உங்கள் உடலிலுள்ள சூட்சும சக்திகளால் தான் இயங்குகிறது. அந்த சக்திகளை கிரகித்துக் கொள்ள உடலில் ஏழ சக்கரங்கள் சுழல்கிறது. அந்த சக்கரம் இயற்கையாகவே தனது உடலுக்கு தேவையான சக்திகளை பிரபஞ்ச சக்திகளில் இருந்து  தனது சுழற்சி மூலம் எடுத்துக் கொள்ளும். அந்த சக்கரத்தின் சுழற்சி குறைந்தால் உடலில் நோய், பிரச்சனைகள்  ஏற்படும். இது உங்கள் உடலில் தினமும் நடக்கும் சூட்சும நிகழ்வு. 

Thursday, October 18, 2018

அத்தியின் மீதாணை!

அத்தியின் மீதாணை!
(மூலம்: அல் குர்ஆன் / சூரா 95 : அத்தீன்)

இனிக்கும் இயல்பும் இயற்கை மணமும்
கனிந்தப் பழத்துள் கனிம ஊட்டமும்
வாய்க்குச் சுவையும் நோய்க்குப் பகையும்
விதைத்துப் படைத்த அத்தியின் மீதாணை!

உவர்ப்பும் கசப்பும் ருசிக்கும் பதத்தில்
கருப்பும் பழுப்பும் காய்க்கும் விதத்தில்
உழைக்கும் உடலுக் குகந்த ஆற்றல்
மிகைக்கப் பொதிந்த ஒலிவம் மீதாணை!

Friday, October 12, 2018

உடல் முதுமை ஆன்மாவின் அனுபவம்.

ஏழு வயதில் சிறுவனாக இருந்த நான் இப்போது தும் இருக்கிறேன். ஆனால் ஏழு வயது சிறுவனாக இருந்த நான். இப்போழுது இருக்கின்ற நாற்பத்தி மூன்று வயது நான். ஏழு வயது சிறுவனாக இருந்த நான் இல்லை. புரியவில்லை இல்லையா ?.

நீங்கள் ஒவ்வொரு நாளும் நிலக் கண்ணாடியில் உங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் பரவாயில்லை முன்னைய விட இப்போழுது நான் அழகாகவே இருக்கிறேன் என்று பார்த்து பெருமிதம் அடைகிறீகள் ஆனால் பல வருடங்களாக பார்க்காத உங்கள் நன்பர் அல்லது உறவினர்கள் உங்களை சந்திக்கிறபோது அவர்களைப் பார்த்து அல்லது அவர்கள் உங்களைப் பார்த்து செல்லக்கூடிய முதல் வார்த்தை என்ன முடியெல்லாம் நரைத்து விட்டது உடல் கூட தளர்ந்து விட்டதே என்று அப்படியா இருக்கேன் ?. அப்போதுதான் உங்களுக்கு தெரிய வருகிறது நமக்கு முடி நரைத்து விட்டது, உடல் தளர்ந்து விட்டது, முந்தைய இருந்த உடல் இப்போழுது இல்லை. உடனே முதுமை பற்றிய பயமும், மரண பயமும் உங்கள் உள்ளத்திலும் உடலிலும் படர ஆரம்பிக்கிறது.

Monday, September 3, 2018

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் வெற்றி கிடைக்கும்.

وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۙ‏
நாமே உங்களுடைய நித்திரையை (உங்களுக்குச்) சிரம பரிகாரமாக்கினோம்.
(அல்குர்ஆன் : 78:9)

நீங்கள் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழும்போது உடனை நீங்கள் எழுந்திருக்கக்கூடாது படுக்கையில் சில நிமிடங்கள் அப்படியே படுத்து கடந்து பிறகு மெல்ல எழுந்து உட்கார்ந்து கண்களை விழிக்காமல் கண்களை மூடிக் கொண்டு அங்கும் இங்கும் அசையாமல் இருந்து உங்கள் இறைவனிடத்திலும் உங்கள் ஆழ்மனதிலும் சொல்லுங்கள்

Sunday, July 15, 2018

சென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா

சென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா




சென்னை : சென்னை, மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மஃமூர் வளாகத்தில் 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் அமானத் அறக்கட்டளை வெளியிடும் O.M. அப்துல் காதிர் பாகவி ஹஸ்ரத் அவர்கள் எழுதிய திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

இந்த விழாவுக்கு மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமாம் மௌலவி ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ் காஸிமி தலைமை வகிக்கிறார். திருச்சி காதர் மஸ்ஜித் இமாம் மௌலவி எஸ். முஹம்மது மீரான் மிஸ்பாஹி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

Monday, June 18, 2018

துபாயில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இலவச பயிற்சி பட்டறை


துபாய் : இந்தியாவின் தலைசிறந்த பயிற்சி மையமாக திகழ்ந்து வருவது ரெசனொன்ஸ் ( Resonance ) ஆகும்.  இந்த பயிற்சி மையம் துபாயில் உள்ள ஸ்ட்ரீ கல்வி நிலையம் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்து வரும் இந்திய மாணவர்களுக்கு  உந்துவியல் ஒர்க்‌ஷாப் ( Photonics Workshop) மற்றும் வேத கணித முறை (  Vedic Mathematics ) ஒர்க்‌ஷாப் ஆகிய பயிற்சிகள் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

Sunday, May 27, 2018

*ரமழான் ஹதியாவை மனமுவர்ந்து வழங்குவோம்*

அன்பான இஸ்லாமிய உறவுகளே...

உங்களது முஹல்லாவில் உங்களது தீனுடைய காரியங்களுக்காக உங்களுக்காகவே  அயறாது உழைத்துக் கொண்டிருக்கும்  தியாகிகளான உங்களது பள்ளிவாயல் இமாம்கள், முஅத்தின்களுக்காக ரமழான் மாதத்திலாவது  உங்களால் வழங்கப்படும் ஹதியாக்கள் உரிய முறையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் உங்களிடம் இருவேறு கருத்துக்கள் இல்லையென்றே  நினைக்கின்றோம்.

என்றாலும் (சில) பள்ளிவாயல் நிருவாகிகள் அவ்வாறு அவர்களுக்காகவே  சேரும் ஹதியாக்களை பள்ளிவாயல் பைதுல்மாலில் சேர்த்து விடுகின்ற பல வேடிக்கையான/கவலையான/கசப்பான/தந்திரமான  நிகழ்வுகளும் சமகாலத்தில் சிற்சில இடங்களில்  நடைபெறாமலில்லை!!!

Sunday, May 20, 2018

நாம் நோன்பு காலத்தில் செய்யும் மாபெரும் தவறுகள்...



நோன்பு வைப்பதே  நம் உள் உறுப்புகளின் ஓய்வுக்காக

11 மாதங்கள் இடைவிடாது வேலை செய்தவைகள் ஒரு மாதம் ஓய்வுபெறவே இம் மாதம் கடமையாகியது 

ஆனால்நாமோ..
வழக்கமாக.3 வேலை 
சாப்பிட்டு வரும் ..
உணவை நோன்பு வைக்கிறேன் என்று

ஸஹரில்..கறி.. கோழி..மீன்.

தயிர்....பழம்... என ஒரு கட்டு கட்டி...
புளித்த ஏப்பம் கொள்ள வைத்து  இப்தார் ..என்ற பெயரில்..பிரியாணி 
எண்ணையில் பொறித்த 
உள்ளே கறி வகைகள் வைத்த சமோசா...வடை..பஜ்ஜி..
வாடா போண்டா
என்ற ...அத்தனை வகைகளையும்..
ஒரு வெட்டு வெட்டி விட்டு...
பற்றா குறைக்கு கூல் ட்ரிங்க்ஸ் என்ற பெயரில்
உடலை குளிர வைக்க தேவையான 

Thursday, April 19, 2018

துபாய் ஈமான் கலாச்சார மையம் நடத்தும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நாள்: 20-04-2018, வெள்ளிக் கிழமை
நேரம்: மாலை  6 மணி
இடம்: சலாமியா டவர், தேரா கிளாக் டவர் அருகில், துபாய்.

சிறப்புரை:
லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் கொடுத்த இளம் கல்வியாளர்

பேரா. முகம்மது ரபிக் MCA., MBA.,
(ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை)

தலைப்பு : இந்தியாவில் உள்ளஉயர் கல்வி படிப்புகள், கல்வி உதவித் தொகைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல்

Monday, April 16, 2018

பிரபஞ்சத்திடம் எதையும் பெறக்கூடிய சக்தி உங்கள் ஆழ்மனதிற்கு உண்டு.

இந்த பிரபஞ்சம் மிகப் பெரியது அது விரிவடையச் கூடியது. அதுபோல உங்கள் ஆழ்மனம் மிகப்பெரியது விரிவடையச் கூடியது அதுமட்டுமல்ல பிரபஞ்சத்திடம் எதையும் பெறக்கூடிய சக்தி உங்கள் ஆழ்மனதிற்கு உண்டு.

இந்த பிரபஞ்சத்திடத்தில்  உங்கள் ஆழ்மனம் எதுகேட்டாலும் உங்களுக்கு கொடுக்கும் அது நல்லது கெட்டது என்று அது பார்க்காது. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை வைத்து புரிந்து கொள்ளுங்கள் உங்கள் ஆழ்மனதில் எப்படி வாழ்ந்து வருகிறீர்கள் அந்த வாழ்க்கை மூலம் எதைக் கேட்டு பெற்று இருக்கிறீர்கள் என்று.

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ‏ 
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டுகொள்வார்.

وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏ 
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்குக்) கண்டுகொள்வான்.
(அல்குர்ஆன் : 99:7,8)

Sunday, April 1, 2018

முபாஹலா

முபாஹலா என்றால் என்ன? முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் “முபாஹலா” செய்யலாமா? முபாஹலா,வை நியாயப்படுத்துகிறவர்கள் அல்குர்ஆன் 3:61 இறைவாக்கை ஆதாரமாகத் தருகின்றனர். அந்த இறைவாக்கு வருமாறு:

(நபியே!) இது பற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும், எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால், வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று கூடி) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று சாபமிட்டுக் கொள்வோம், என நீர் கூறும். (3:61)

இந்த வசனம் இறங்கிய வரலாற்றைப் பற்றி வரலாற்று நூல்களில் எழுதப்பட்டுள்ள விபரம் வருமாறு:

Monday, March 26, 2018

மனிதனுடைய மன நிலைகளை இறைவனை விட யாரால் இத்தனை தெளிவாக சொல்ல முடியும்..!?

சிந்திப்பவர்களுக்கு நிறைய தெளிவுகள் இதில் இருக்கிறது..
"திண்ணமாக நாம் மனிதனை விந்திலிருந்து படைத்திருக்கின்றோம் என்பதை அவன் பார்க்கவில்லையா என்ன? ஆனால் அவ்வாறிருந்தும் (நம்மை எதிர்த்து) வெளிப்படையாக தர்க்கம் புரிபவனாகிவிட்டான்".(36:77)
"மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவனுக்கு நாம் நம்முடைய அருட்பேற்றைச் சுவைக்கச் செய்தால் அதன்
பேரில் அவன் பூரிப்படைகின்றான்.
மேலும், அவனுடைய கைகள் செய்த தீவினையின் காரணத்தினால், ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டுவிட்டால், அவன் மிகவும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்."(42:48)
"நன்மையை வேண்டுவதில் மனிதன் எப்போதும் சோர்வுறுவதில்லை. ஏதேனும் துன்பம் அவனைத் தொட்டு விட்டால், நம்பிக்கை இழந்தவனாகவும் மனம் நொந்தவனாகவும் ஆகிவிடுகின்றான்".(41:49)
"மனிதனுக்கு நாம் அருட்பேறுகளை வழங்கும்போது அவன் புறக்கணிக்கின்றான்.

Sunday, March 18, 2018

உங்கள் பிள்ளைகளின் ஆற்றல்களை கூட்ட உதவிட முடியும்


ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ்வொரு விதமான குணமும் திறமையும் அனுபவமும் இருக்கும். அந்த குணத்தையும் திறமையும் அனுபவத்தையும் நீங்களோ அல்லது உங்கள் பிள்ளைகளோ விளங்கிக் கொள்ளாமல் இருக்கலாம் எப்படியென்றால் ஒருவருக்கு நல்ல படித்ததை, கேட்டதை விளங்கிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும் ஆனால் அதை விளங்கி கூற, எழுத ஆற்றல் இருக்காது. மற்றவருக்கு விளக்கும் அதாவது கற்றதை விளக்கம் கொடுக்கும் ஆற்றல் இருக்கும் ஆனால் விளங்கும் ஆற்றல் மிக குறைவாக இருக்கும் இதற்கு காரணம் தனது சிந்தனைகளை மறுபக்கம் செலுத்துவது.

இப்படிப்பட்ட ஒருவர் அல்லது உங்கள் பிள்ளைகளுக்கு அவர்களுக்கு மிக குறைவாக இருக்கும் ஆற்றல்களுக்கு நீங்களோ அல்லது அவர்களோ பின்புறமாக இருந்து அவர்களின் ஆற்றல்களை கூட்ட முடியும். எப்படியென்றால்

அதுதான். "" உங்களின் துஆ அதாவது பிரார்த்தனை, திக்ரு""

Wednesday, March 14, 2018

மானிட சேவையே இறைவனுக்கான சேவை

மானிட சேவையே இறைவனுக்கான சேவை (இறைவன் தேவைகளற்றவனாதலால் அவனுக்கு யாரும் சேவை செய்ய முடியாது) என்பதை உணர்த்தும் ஒரு அழகான நபிமொழி. நான் சமீபத்தில் முழுமையாகப் படித்து முடித்த ஆதாரப்பூர்வமான நபிமொழித்தொகுப்பான ஸஹீஹ் முஸ்லிம் என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது (ரஹ்மத் அறக்கட்டளை வெளியீடு, மின் நூல்).

நபிமொழி எண் 5021
அறிவிப்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் அபூ ஹுரைரா அவர்கள் (இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக)

Tuesday, March 13, 2018

காலத்தின் மீதாணையாக!


(மூலம்: சூரா அல்-அஸ்ர் 103: அல் குர் ஆன்)
இன்னும் விடியாத
இருள் சூழ்ந்தப் பொழுதல்ல;
இனிதாய் உதித்துவிட்ட
இளங்காலை நேரமுமல்ல;
உலகே விழித்துக்கொள்ள
உருவானச் சமயமல்ல;
உச்சியில் கதிரவனின்
உஷ்ணமான காலமுமல்ல;
மதியம் சாயங்காலமாகும்
காலத்தின்மீ தாணையாக
மனிதன் என்றென்றும்
நஷ்டத்தில்தான் இருக்கிறான்...

Wednesday, March 7, 2018

முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும் தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும் அரசியல் / பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது

முன்னாள் துணை குடியரசுத் தலைவருக்கும் தகவல் உரிமைப் போராளி அருணா ராய்க்கும்  அரசியல் / பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது

காந்தியடிகளின் பேரர் கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார்.






2018-ம் ஆண்டுக்கான ‘அரசியல் / பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருதை’  முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு முஹம்மது அன்சாரிக்கும் சமூக ஊழியர் அருணா ராய் அவர்களுக்கும் காந்தியடிகளின் பேரரும் முன்னாள் மே.வங்க ஆளுநரும் ஆன மாண்புமிகு கோபால கிருஷ்ண காந்தி சனிக்கிழமையன்று (பிப்ரவரி 24) காலையில் சென்னையின் தாம்பரம் அருகில் மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரியில்  நடைபெற்ற விழாவில் வழங்கினார்.  

Thursday, March 1, 2018

சிரியா வழிச் சிந்தனைகள்

முஸ்லிமே
முஸ்லிமைக் கொல்லும்
முஸ்லிம் அவலமா?

உன்னிடம்
அஸ்ஸலாமு அலைக்கும்
(அன்பும் அமைதியும் நிறைக)
அழிந்து போனதா?

Sunday, February 25, 2018

இறைவனின் வாக்கு பொய்க்குமா என்ன..!?

                       இறைவனின் வாக்கு பொய்க்குமா என்ன..!?
Saif Saif
நடக்கும் நிகழ்வுகள் அவனது நாட்டமின்றி வேறென்ன..!?
இன்றைய உலக,
நாட்டு நடப்புக்கெல்லாம் மனதில் எழும் கேள்விக்கெல்லாம்
இறைவன் எத்தனை தெளிவான
பதிலையும்,
தீர்வையும் சொல்லி வைத்திருக்கிறான்..!
"மேலும் இதேபோன்று ஒவ்வோர் ஊரிலும் அங்குள்ள பெரும் குற்றவாளிகளை
நாம் விட்டு வைத்திருக்கிறோம்.
தங்களுடைய ஏமாற்று வலையை அங்கு அவர்கள் விரித்து வைக்கட்டும் என்பதற்காக!உண்மையில் அவர்களே தங்களின் ஏமாற்று வலையில் சிக்கிக் கொள்கின்றார்கள்.
ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை."
(6:123)

Tuesday, February 13, 2018

குஞ்ஞு முஹம்மது!


கட்டுரை ஆசிரியர் அபூபிலால் கத்தரில் வசிப்பவர். தம்மைச் சுற்றி வாழும் மனிதர்களை வாசிப்பவர். அவ்வாறு அவர் வாசித்தவர்களுள் ஒருவரான ‘ஹாஜிக்கா’வைப் பற்றி நமது சத்தியமார்க்கம் தளத்தில் இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இப்போது இன்னொருவர். பெயர் குஞ்ஞு முஹம்மது!
குஞ்ஞு முஹம்மது சாஹிபின் பூர்வீகம் கோழிக்கோடு. கத்தரின் எண்ணெய்க் கம்பெனி ஒன்றின் இயந்திரவியல் பிரிவில் ஒரு மேலாளருக்குச் செயலாளராகச் சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் தொடர் பணியாற்றல். அறுபதாவது வயதில், சுமார் முப்பத்துச் சொச்சம் ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின், ஆறு குழந்தைகளுள் இரு மகள்களை மருத்துவர்களாகவும் ஒரு மகனைப் பொறியாளராகவும் உருவாக்கிவிட்ட உள நிறைவோடு ஓய்வுபெற்றுக் குடும்பத்துடன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தாகிவிட்டது.

Friday, February 9, 2018

ஜனாஸா அடக்க நிகழ்சியில்

 *உண்மைசம்பவம்*
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

நாம் பலமுறை ஜனாஸா அடக்க நிகழ்சியில் கலந்து கொள்கிறோம்.

ஒரு சில நேரங்களில்  ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் போது நடக்கும்.

சில நல்ல  அடையாளங்களை வைத்து நல்ல ஜனாஸா என்று நாம் அடையாளம் கண்டும் உணர்ந்தும். கொள்கிறோம்.


அதே வேலையில் ஒரு சில ஜனாஸாக்களை அடக்கம் செய்யும்போதும்.

எப்போதாவது யாராவது ஏதாவது ஒரு சில தீய  நிகழ்வுகளையும் பார்த்தும் இருப்போம்.

அந்த வரிசையில்
என் கண்ணெதிரே நடந்த ஒரு ஜனாஸாவின் நிலையை பற்றிய ஒரு கட்டுரை.


கடந்த சில வருடங்களுக்குமுன் தில்லியில் நடந்த சம்பவம்.

Thursday, February 8, 2018

பேராசிரியர்_நசீமாபானு



பேராசிரியர்_நசீமாபானு ...
எனது அருமை நண்பர் 
பேராசிரியர்_சாயிபு_மரைக்காயர் அவர்களின் துணைவியார்.
இவருக்கும் குமரி மாவட்டத்திற்கும்
நெருக்கமான உறவிருக்கிறது .
இவர் ...
#கவிமணி_தேசிக_விநாயகம்_பிள்ளை
அவர்களின் உறவுமுறை பேத்தி.
காரைக்கால் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.
இஸ்லாத்தால் ஈர்க்கப்பட்டு
#முஸ்லிமானார்.
சாயிபு மரைக்காயர்
காதல் மணமும் செய்து கொண்டார்.
இஸ்லாத்தின் மாண்புகளை
செவி இனிக்கப் பேசும்
ஆற்றல் பெற்றவர்.

Tuesday, February 6, 2018

கொஞ்சம் கவலைப்படுங்கள் தமிழக ஆலிம்களின் ஹாபிஸ்களின் நிலமையை கொஞ்சம் யோசித்து

Thanks Kamaludeen +9198400-02828

Hassane Marecan
அன்பான. கண்ணியமான தமிழக பள்ளிவாசலின் நிர்வாகிகளே
அன்பான வேண்டுகோள் வட மாநிலத்திலிருந்து வரும் ஓதிய மாணவர்களை
மோதினார் பற்றாக்குறை என்ற பெயரில் பள்ளிவாசல் பணி அமர்த்துகிறீர்கள் குறைவான சம்பளம் சாப்பாடு பிரச்சினை இல்லை என்று எண்ணி சேர்க்கிறீர்கள்
பரவாயில்லை மோதினாராக சேர்க்கும் அவர்களை தராவிஹ் தொழ வைக்கவும் இமாமத் செய்ய சொல்வதின் பின் விளைவை சிந்தித்ததுண்டா
மிக கவலையுடன் சொல்லக்கூடிய செய்தி தமிழகத்தில் எத்தனை ஆலிம்களை ஹாபிழ்களைஉருவாக்கும் மதரஸாக்கள் உள்ளது கிட்டத்தட்ட நூறை தொடும்
வருட வருடம் பல ஆலிம்கள் ஹாபிஸ்கள் வெளி வருகிறார்கள்
அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் ஏற்கனவே நிறைய உலமாக்கள்

Thursday, February 1, 2018

அமைதியை நோக்கி நிகழ்ச்சி ஏன்? ஏதற்கு?

ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று ஏற்க இவ்வுலகு!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்கள் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.



      தமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல்.

      அகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.

      இல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அனைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.

Friday, January 12, 2018

சீன இஸ்லாமிய கழகம்

Aashiq Ahamed




படத்திற்கு நன்றி: தைவான் நியுஸ் ஊடகம்.
சீன இஸ்லாமிய கழகம், தன்னுடைய 80-ஆம் ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி ஒரு வித்தியாசமான நிகழ்வை, தைவானின் தைபே நகரில் இருDecember 23, 2017 தினங்களுக்கு முன்பாக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை தைபே நகர சுற்றுலா கழகமும் இணைத்து நடத்துகிறது. இந்நிகழ்வுக்கு பெயர் "இஸ்லாமிய மார்கெட்". இஸ்லாமிய மார்க்கம் வேகமாக பரவியதற்கான காரணம், உலகின் பல்வேறு கலாச்சாரங்களையும் எளிதில் அது அரவணைத்துக் கொண்டதே ஆகும். இதனை பறைச்சாற்றும் விதமாகவே இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails