Thursday, November 30, 2017

தியானித்துக் காணவேண்டும்


",உடம்பில் உயிர்
அடங்கி நிற்பது
உடம்பின் உள்ளேயா
உடம்பின் வெளியிலா
என்பதை என்னிடம்
மெள்ள வந்து
அருகில் வந்து
சொல்லவேண்டும்
என்று கேட்கின்றீர்கள்,

உடம்பின் உள்ளேயும்
வெளியேயும் ஒத்து
ஒட்டியும் ஒட்டாமலும்
ஒரே பொருளில்
அடங்கியே உயிர்
நின்று கொண்டுள்ளது,
உட்சுவாசத்தையும்
வெளிசுவாசத்தையும்
இணைந்து வாசியாக்கி
நாதமாகிய அகாரத்தில்
சேர்த்து நம் உடம்பிலேயே இறைவன் குடியிருக்கும்
கள்ள வாசல் என்னும்
பத்தாம் வாசலை
யோக ஞானத்தால்
திறந்து அதிலேயே நின்று தியானித்துக்
காணவேண்டும்
மனிதர்களே ",!!!!!
-------------
வாட்சப் வரவு

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails