Saturday, September 16, 2017

ஏகாந்த_மனிதன்

அன்றாடம் விடிந்தாலும்
அதிகாலை விடியலொன்றில்
கண்டெழுந்த கனவில்
உடுத்தியிருந்த
பட்டும் பீதாம்பரமும்
அணிந்திருந்த
பொன்னில் பதித்த
வைடூர்ய அணிகலனும்

தரித்திருந்த மணிமுடியும்
பிடித்திருந்த செங்கோலும்
அறிவாளிகளும் சேனாதிபதிகளும்
அமர்ந்திருந்த ராஜசபையும்
ஆட்சியையும் அதிகாரமும்
அப்படியே காட்சியாய் இருந்தது
ஆனால் அவன் மட்டும்
நிதர்சனத்தில்
அவை ஏதும் இல்லாத
இந்நாட்டு மன்னனாய்
ஆளப்பட்டுக் கொண்டிருந்தான்
ஆம் என்பதற்கும்
இம் என்பதற்கும்
வண்டி வண்டியாய்
வரிகள் செலுத்தி
ஒடுக்கப்பட்டு இருந்தான்.

ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails