Wednesday, September 27, 2017

எத்தனை மாற்றங்கள் இந்த மண்ணில்..!!!

சில மணி நேரங்கள் விழுந்த மழைத்துளிகளால் எத்தனை மாற்றங்கள் இந்த மண்ணில்..!!!
செம்மறியை ஒத்த சாரீரத்தில் குரல் எழுப்பி துணை தேடும் தவளைகள்! எங்கள் ராகதேவன் இளையாராஜாவுக்கு இசை சொல்லி இவைகள் தந்ததோ என எண்ணும் வகையில் வகை வகையாய் ரீங்காரமிடும் கிரிட்டிப்பூச்சிகள்! ஏழு சுவரங்களை தாண்டிய வகையில் எத்தனை அழகான இசைக்கச்சேரி! ஜதி சேர்ந்ததா அல்லது சுதி கூடியதா தெரியவில்லை! அந்த சாரீரம் இந்த சரீரத்தையும் அசைத்துப்பார்க்கிறது!

அசைவில்லா சுழற்சி ....!


தொடர் சுழற்சியின்
அசைவுகள் உணரப்படாமலே
ஆணி வேர் ஆளம்தொட்டு
நிலைத்து நிற்பதாக
எண்ணத்தில் மமதைகொண்டு
மனக்கோட்டை பலவும்
அந்தரத்தில் கட்டிக்கொண்டு
அடுத்தவரை குறைசொல்லி
தூரவிலக்கி தூக்கியெறிந்து
அவகாசம் கொடுக்காமல்
தான்மட்டும் சரியென
சுடுசொல் உமிழ்ந்து
அமைதிப்பட்டு விட்டதாக
இறுமாப்பு கொள்கிறான்

Friday, September 22, 2017

என்னத்தில் இருப்பதைத் தான் கவிதையாக வடித்தேன்...பாடினேன் ..

என்னத்தில் இருப்பதைத் தான் கவிதையாக  வடித்தேன்...
இறைவனைப் புகழ்ந்து இசை படித்தேன்..!
அமைதியை விரும்பும் அனைவரும் கேட்டு கருத்துப் பிழை இருந்தால்
comment please.!


Haja Maideen

https://www.facebook.com/

Thursday, September 21, 2017

இஸ்லாமிய புத்தாண்டு ஹிஜ்ரி 1439 ....

அப்துல் கபூர்

இதயத் தளங்களில்
கனிய வைத்து
மணம் பரப்புகிற
இனிய வாழ்த்துக்களை
உரித்தாக்கி மகிழ்கிறேன் ....
புதிய வருடமதில்
வல்லோன் அல்லாஹ்
பணிக்கிற கட்டளைக்கு
பயணிக்கிற நாட்கள்
நலமாய் அமையட்டும் ....

Sunday, September 17, 2017

ரப்பே!இந்த காலை வேளையில் ...

அல்லாஹ்வே உனக்கே எல்லாபுகழும்,நன்றியும்
யா அல்லாஹ்! இன்றைய நாளை எங்களின் நெருக்கடியிலிருந்து விடுபடும் நாளாக ஆக்குவாயாக!
எங்களின் தேவைகள் நிறைவேறும் நாளாக ஆக்குவாயாக!
எங்களின் துஆக் கள்
ஏற்றுக் கொள்ளப் படும்
நாளாக ஆக்குவாயாக

Saturday, September 16, 2017

ஏகாந்த_மனிதன்

அன்றாடம் விடிந்தாலும்
அதிகாலை விடியலொன்றில்
கண்டெழுந்த கனவில்
உடுத்தியிருந்த
பட்டும் பீதாம்பரமும்
அணிந்திருந்த
பொன்னில் பதித்த
வைடூர்ய அணிகலனும்

தியானம் செய்யும்போது தடைகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம். உதாரணமாக ஜெனிடிக் இன்ஜினியரிங்கில் ஜீன்களில் உள்ள விவரங்களை, நோய்க்குறிப்பை மாற்றியமைத்து நோயை நீக்கிக்கொள்ளலாம் . ஆயுள் விவரத்தை மாற்றியமைத்து ஆயுளை அதிகரித்துக்கொள்ளலாம். ஆனால் இத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டுமென்றால் சில காலங்கள் எடுக்கும். அதுபோல செலவே இல்லாமல் மன எண்ணத்தாலேயே , ஆர்.என்.ஏ, டி.என்.ஏ பதிவுகளை மாற்றியமைத்து நமது சுபாவங்களையும் , ஆயுளையும் , ஆரோக்கியத்தையும் , அற்புத ஆற்றல்களையும் பெறுவதற்கு பெரிதும் உதவுகிறது தியான பயிற்சி .

Friday, September 15, 2017

புறம்.......பேசாதீர்கள்

அன்புடன் அமானுல்லா மரைக்கார்

முஸ்லிம்களைப் புறம் பேசுவதும் அவர்களின் கண்ணியத்திற்கும் மான மரியாதைக்கும் இழுக்காகப் பேசுவதும் பெரும்பாலான சபைகளுக்கு சர்க்கரைப் பொங்கலாக ஆகிவிட்டது. புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். அதை விட்டும் தன் அடியார்களை விலகியிருக்கச் செய்திருக்கிறான். மனித உள்ளங்கள் அருவருப்பாகக் கருதுகின்ற விதத்தில் அதற்கு ஓர் உவமானம் கூறியுள்ளான்: “உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட தன் சகோதரரின் இறைச்சியை உண்ண விரும்புவாரா? அதை நீங்கள் வெறுகின்றீர்கள்” (49:12)

Thursday, September 14, 2017

ஹைதர் அலி செய்த உதவி

வேலுநாச்சியாருக்கு ஹைதர் அலி செய்த உதவிகளில்.. ஆங்கிலேயரை எதிர்க்க வேலுநாச்சியாருக்கு உதவிட.. ஹைதர் அலி.. தன் மகன் திப்புவையே படைத்தளபதியாக்கி அனுப்பி வைத்தார்.

வேலுநாச்சியாரின் கணவரின் படுகொலைக்குப் பின் அவருக்கு அடைக்கலம் அளித்தது.. மைசூர் அரசு.

Wednesday, September 13, 2017

வாரும் நபியே நீர் வாரும் நபியே


(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்-குர்ஆன் 21: 107)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்-குர்ஆன் 33:21)

(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(அல்-குர்ஆன் 68:4)
---------------------------------------


வாரும் நபியே நீர் வாரும் நபியே – எம்
வள்ளல் இரசூல் நபியே நூருன் நபியே
ஆளும் நபியே எமை ஆளும் நபியே – அகம்
ஆனந்தமே அள்ளித் தரவாரும் நபியே
வழிமீது விழிவைத்து வரும் வேளை நோக்குகிறோம்
வாரும் நபியே முகம்பாரும் நபியே – எங்கள்
வாஞ்சை மன ஏக்கமதை தீரும் நபியே

அவ்வலும் நீரே ஆகிரும் நீரே
ஆதியில் நூராய் வந்த ஜோதி நபியே
அகமதும் நீரே முகமதும் நீரே
அல்லாஹ்வின் தூதாய் வந்த நீதி நபியே – எங்கள்
இன்பதுன்பம் அனைத்திலும் எங்கள் துணையே – உங்கள்
அன்பு நெஞ்சம் பாவி தஞ்சம் புகும் மனையே – நீர்
இல்லாமல் வாழ்வில்லை உண்மையே - இதை
சொல்லாமல் வாழ்ந்தென்ன நன்மையே
உடலோடு உடலாக உயிரோடு உயிராக
வாழும் நபியே எம்மில் வாழும் நபியே – உம்
வாஞ்சை முகம் காண வேண்டும் வாரும் நபியே
வாரும் நபியே நீர்வாரும் நபியே – வந்த
வாசல் ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

கோடான கோடி கல்புகள் நாடி
கோவென்று போற்றிக் கொண்டாடும் நபியே
பாமாலை சூடி பொழுதெல்லாம் கூடி
பாசத்தை கொட்ட மனம் நாடும் நபியே – உயர்
மஞ்சத்திலே வீற்றிருக்கும் மன்னர் நபியே – எம்
நெஞ்சத்திலும் வீற்றிருக்க வாரும் நபியே – உமை
காணாமல் ஒளி இல்லை கண்ணிலே – மொழி
கேளாமல் சுகமில்லை நெஞ்சிலே
பேரின்ப காதல் மனம் பாவி எங்கள் நெஞ்சுக்குள்ளே
வீச நபியே நீர் வாரும் நபியே – வரும்
பாதைமலர் தூவுகின்றோம் வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

கஸ்தூரி வாசம் வீசும் மெய் தேகம்
கருமேகம் குடை இடும் காமில் நபியே
மெய்யவன் நேசம் வாரியே வீசும்
மிஃராஜு ராஜர் எங்கள் மேன்மை நபியே – வழி
தோரணங்கள் கட்டிவைப்போம் வாரும் நபியே – சுப
சோபனங்கள் பாடிநிற்போம் வாரும் நபியே – உமை
கொண்டாடும் உள்ளங்கள் தவிக்குது – தினம்
மன்றாடி கண்ணீரில் மிதக்குது
மதீனாவின் திசைநோக்கி ஸலவாத்தை இசையாக்கி
பாடிநிற்கின்றோம் முகம் தேடி நிற்கின்றோம் - எங்கள்
மன்னர் உங்கள் வரவையே நாடி நிற்கின்றோம்
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

லட்சிய கீதம் லட்சத்தில் ஓதும்
முத்திரையிடப்பட்ட சொர்க்க நபியே
உச்சத்தின் உச்சம் உம்மத்தின் நேசம்
உள்ளத்தில் கொண்ட உயர்வர்க்க நபியே
உடல் நாளம் போடும் தாளம் உங்கள் காதல் இசையே
எங்கள் காலம் ஓடும் காதல் நபி காலடியிலே
இந்த இகவாழ்வில் எமை காக்கும் நாயகம்
நீர் மறுவாழ்வில் கரைசேர்க்கும் தாயகம்
கலிமாவின் பொருள் சொல்ல வலிமார்கள் வழிவந்து
வாழும் நபியே எமை காரும் நபியே
உங்கள் காதல் மொழி காதில் விழ வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

மக்கத்தில் நீரும் துயர் கண்ட நேரம்
பக்கத்தில் இல்லை நாங்கள் பண்பு நபியே
மதீனத்து வீதி மகிழ்ந்தாடும் நேரம்
மகிழ்ந்தாட இல்லை நாங்கள் மாண்பு நபியே – தாங்கள்
தாயிஃபிலே பட்ட துயர் கொஞ்ச நஞ்சமா – உயர்
தாயின் மனம் கொண்ட உம்மில் அருள் பஞ்சமா – நீர்
தரவேண்டும் திருக்காட்சி கண்ணிலே – உடன்
வரவேண்டும் அடிமைகள் முன்னிலே
குருநாதர் உருவாக திருஞானம் தருவோரே
வாரும் நபியே துயர் தீரும் நபியே – கவி
பாடும் எமின் ஏக்கம் தீர வாரும் நபியே
வாரும் நபியே நீர் வாரும் நபியே – வந்த
வாச ஸ்தலம் வாசம் வீசும் வேந்தர் நபியே

இறைவா ....

இறைவா ....
நீ
ஆதத்தை சந்தோஷப்படுத்த
ஹவ்வாவைப் படைத்து
சொர்க்கத்தைக் கொடுத்தாய்
அவரோ
ஹவ்வாவை
சந்தோஷப்படுத்த
கனியைப் புசித்து
பூமிக்கு வந்தார்
நீ
வேதங்களைத் தந்து
வழியைத் தந்தாய்
நாங்கள்
பேதங்களை வகுத்து
விழிகளை இழந்தோம்

Saturday, September 9, 2017

நிழல்கள் நிறம் மாறுவதில்லை ....!

நிஜமென கொக்கரித்து
நிஜத்தை விழுங்கிவிட
எத்தனித்த நிழல்
நிதர்சனம் தன்னிலையில்
பிறழாமல் ஒரேநிலையில் நிற்க
ஒளிவிழும் தன்மைக்கேற்பவும்
நிற்கும் மேடு பள்ளத்தின்

LinkWithin

Related Posts with Thumbnails