Wednesday, August 23, 2017

ஆதியந்த முமில்லாது ஆளும் இறையோனே!

ஆதியந்த முமில்லாது
ஆளும் இறையோனே!
நாளை மறுமையிலே
நாதியிலாது நான் தவிக்கும் வேளையிலே!
மேதினியில் உதவுதற்க்கு யாருமிலையே!
நின் கருணை என்மேலும் உலகுவாழ் உயினங்கள் அனைத்தின் மீதும்
பொழிய வைப்பாய் கருணாகரனே!!
செய்த பழி பாவங்கள் அனைத்திற்கும் கணக்கு கேட்டால் கைசேதமே!
கருணையின் திருவுருவே!
சத்தியமாய் நிரந்தரமாய் வாழும் சர்வேஸ்வரா!!
சாந்தமான பார்வையினை எம்மீதும் உலகோர் மீதும் செலுத்திடுவாய்
ரஹ்மானே! ரப்புல் ஆலமீனே!!

ரகசியங்கள் அனைத்தையும் அறிந்தவனே! ஆதிமூலமே!!
ரமலானின் பாக்கியத்தால் கையேந்திக் கேட்கின்றோம்!
கையறு நிலையினிலே
கதறியழுதுக் கேட்கின்றோம்!
பாக்கியம் நிறைந்த லைலத்துல் கத்ர் இரவு
கைதூக்கி விட்டேனே!
மதநல்லிணக்கம் மலர்ந்தோங்க..
மனிதநேயம் செழித்தோங்க..
யாதும் ஊரே.. யாவரும் கேளிர் என்ற உயர்ந்த சிந்தை தழைத்தோங்க..
மனிதத்தின் புனிதம் மானிடரின் மனதிலெல்லாம் மறுபடியும் மலர்ச்சி பெற...
அருள்புரிவாய் அருளாளா!
அல்ஹம்துலில்லாஹ்!
இறையடிமை


#இனியஹாஜி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails