Wednesday, January 4, 2017

இறைவா!

இறைவா!
இயலாமையிலிருந்தும்
சோம்பலிலிருந்தும்
கோழைத்தனத்திலிருந்தும்
கருமித்தனத்திலிருந்தும்
தள்ளாமையிலிருந்தும்
மண்ணறையின் வேதனையிலிருந்தும்
உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.
இறைவா!
உள்ளத்தில் உன்னைப்பற்றிய அச்சத்தைஏற்படுத்தி,
அதைத் தூய்மைப்படுத்துவாயாக!
அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன்.
நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன்.

இறைவா!
பயனளிக்காத கல்வியிலிருந்தும்
உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும்
திருப்தியடையாத மனத்திலிருந்தும்
ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும்
உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பது வழக்கம் என அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் - ஸஹீஹ் முஸ்லிம் 5266.
(அரபியில் : அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. அல்லா ஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.)
Ref:
http://www.tamililquran.com/muslimsearch.php…

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails