Wednesday, September 21, 2016

எனக்குள் காணும் நான்....!

நினைவுகளை கழைந்து
நிர்மல நிதர்சனத்தை தரிசித்ததில்
என்னில் நான் பளிச்சென தெரிந்தேன்.
இறைவன் தந்த கூடு
அதில் எத்தனை எத்தனை கோடு
கடந்துவந்த பாதை
காட்டியது முயற்சியை
வெற்றியும் தோல்வியும்
விகிதாச் சாரத்தில்
சிறு சிறு வித்தியாசங்கள்
சாரமில்லை

ஆசைகளின் அனர்த்தங்கள்
வெளியில் சொல்லாத அர்த்தங்கள்
எல்லாம் வெட்டவெளிச்சமாகவே தெரிகிறது
பேசாத மௌனங்கள்
சந்தித்த சதிகள்
வெட்டி சாய்த்த வீண்கள்
சதிராடிய சாதுரியங்கள்
தட்டிவிட்ட வாய்ப்புகள்
வெட்டிவிட்ட தப்பிதங்கள்
அப்பப்பா .....
அத்தனையும் அத்துப்படி
அவ்வப்போது
நினைவுகளை களைந்து
நிதர்சனத்தை
எனக்குள் காணும் நான்.


ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails