Sunday, September 18, 2016

அன்பின் அரவணைப்பு....!

ராஜா வாவுபிள்ளை


வழியும் வியர்வை
உழைப்பின் வலியை
சொல்லும் ...

கனியும் பார்வை
கருணையின் உறவை
சொல்லும்....

நிமிர்ந்த நன்னடை
உள்ளத்தின் தெளிவை
சொல்லும்....

அகத்தின் அழகை
முகத்தின் பொலிவு
சொல்லும்....

கற்றதின் ஆயபயனை
அதற்குப்பின் நிற்பது
சொல்லும் ......

பணியின் பாங்கை
செயலின் செம்மை
சொல்லும்....

உறவின் ஒழுங்கை
குடும்பத்தின் ஒற்றுமை
சொல்லும்....

செல்வத்தின் சிறப்பை
ஈகையின் பகிர்தல்
சொல்லும்....

மனிதத்தின் மாண்பை
அன்பின் அரவணைப்பு
சொல்லும்....

புனிதத்தின் புரிதலை
இறைவணக்க வழிமுறை
சொல்லும் .....

ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails