Thursday, August 18, 2016

உலக வழமையும் என்றாகிப் போன இப்பூவுலகு......


Raheemullah Mohamed Vavar
எங்கும் வெளிச்சக் கற்றை,
ஆசைதீர இழுத்துப் பிடித்து அளவின்றி சுவாசிக்கும் அன்லிமிடெட் ஆக்ஸிஜன்,
எல்லா சப்தங்களும் எங்கோ ஒரு புள்ளியில் கலந்து எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் உலக இயக்கத்தின் பேரிரிச்சல்,
கட்டுப்பாடுகளும் கடமைகளும் இருந்தாலும்
எப்போதுமே தடையின்றி தொடரும்
கட்டுப்பாடற்ற மனப்போக்கும்
மடமைகளை கைகொள்ளும் ஈஸி லைஃப்
உலக வழமையும் என்றாகிப் போன இப்பூவுலகு......

அடர் இருட்டு,
ஒற்றை ஒரு சுவாசத்திற்கு கூட காற்றில்லாத மண் கூடு,
வழிந்துருகும் வியர்வை புழுக்கம்,
சப்தமே இல்லாத மரண நிசப்தம்,
தானே தனக்குதவி செய்து கொள்ள முடியாத கையறு நிலை,
அதில் வந்து ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைக்கும் இரு வானவர்......

எப்பப்பா, யா அல்லாஹ்,
மரணத்திற்கு பயப்படுவோர் யாருமில்லை எனக் கூறிவிடலாம்தான்,
ஆனால்...
ஆனால்.....
இவைகளை எல்லாம் கொஞ்சமாக எண்ணிப்பார்ர்தால் பஞ்சத்திற்கு கூட தூக்கம் வராமல்தான் போய்விடுகிறது !

 Raheemullah Mohamed Vavar

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails