Friday, May 6, 2016

ஜனநாயக கடமையை ஒவ்வொருவரும் ஆற்றவேண்டும்


இந்தியர் என்பதில் பெருமைக்கொள்வோம்...
இன்று ஜும்ஆ தொழுகைக்கு சென்ற பொழுது நமதூர்
(நீடூர்-நெய்வாசல் JMH அரபிக் கல்லூரி) மதரஸாவில் பயிலும் கேரளத்தினை சேர்ந்த மாணவர்களிடம் உரையாட நேர்ந்தது . அவர்களிடம் ஓட்டு போட செல்வீர்களா? என கேட்டேன்.
ஆம் எனவும் வாக்களிக்கும் ஜனநாயக கடமையை  ஒவ்வொருவரும் ஆற்றவேண்டும் என்பதற்காக பரீட்சையினை கூட இரண்டு தினங்கள் முன்பாகவே முடித்துக்கொள்ள நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாகவும்,
22ந்தேதி பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொள்ள மீண்டும் வர இருப்பதாகவும் சொன்னார்கள்.

இது  போன்று வெளியூரில் இருக்கும் வாக்களிக்க தகுதியானவர் அனைவரும் அவரவரின் சொந்த தொகுதிக்கு (ஊருக்கு) சென்று மறவாமல் நல்லவர்களுக்கு வாக்களித்து இந்தியராகிய நாம் நமது கடமையை செய்தால் நாடு நலம் பெறும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
ஜனநாயக கடமையை தவறாமல் செய்ய இருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்
 நல்லாட்சி அமைய வாழ்த்துக்கள். ..!!

Mohamed Marzuk

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails