Saturday, May 21, 2016

குழந்தைகளின் பிரார்த்தனை..!!

நிஷா மன்சூர்
பிரார்த்தனை ஆகி என் உதட்டில் வருகிறது
என் ஆர்வம், என் ஏக்கம்.
என் இறைவா! என் வாழ்க்கை
ஒரு மெழுகுவத்தி போல் ஆகட்டும்.
என் மூச்சில் என் தாய்நாடு
பொலிவு பெறட்டும்
பூவைக் கொண்டு ஒரு
பூங்கா பொலிவது போல்.
என் ரட்சகனே! என் வாழ்க்கை
ஒரு விட்டில் பூச்சி போல் ஆகட்டும்.

அறிவு எனும் விளக்கின் மீது
எனக்கு நேசம் உண்டாகட்டும்.
ஏழைகளின் சேவையே என் பணி ஆகட்டும்
வேதனைப் படுவோரையும்
வலிமை இழந்தோரையும்
அது நேசிப்பதாகட்டும்.
என் அல்லாஹ்வே!
தீமைகளை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக..!
நேர்வழி எதுவோ
அவ்வழியில் என்னை நடத்துவாயாக.!
‪#‎மகாகவி‬ அல்லாமா இக்பால்


நிஷா மன்சூர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails