Tuesday, March 15, 2016

சுமை ….!

கல்வியும் ஒரு சுமைதான்
பணத்திற்காக விற்கப்படும் போது
வேலையும் ஒரு சுமைதான்
விருப்பம் இல்லாது செய்யும்போது

வாழ்வும் ஒரு சுமைதான்
இலக்கின்றி வழி நடக்கும்போது
பயணமும் ஒரு சுமைதான்
சேருமிடம் தெரியாதபோது

உணவும் ஒரு சுமைதான்
பசி இல்லாத போது
செல்வமும் ஒரு சுமைதான்
ஈகை குணம் இல்லாத போது

உடலும் ஒரு சுமைதான்
ஆரோக்கியம் இல்லாத போது
உயிரும் ஒரு சுமைதான்
ஏகன் இறையோனை வணங்காதபோது.

  ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails