Thursday, March 24, 2016

அன்பின் மொழி! சகோதரத்துவத்தின் அறிக்கை !!


Yembal Thajammul Mohammad

சிறகை விரித்து உயரப் பறந்து
வானத்துக்கு வெளிச்சம் வழங்கியோர்
பூமியிடம் கூறுகின்றனர்: ---
”பூமியுடன் பிணைத்துக் கொண்ட
இந்தப் படைப்புகள் யாவும்
மிக்க உறுதியை ,
மேம்பட்ட உயிரோட்டத்தை,
மேலான பேரொளியை
வெளிப்படுத்த வேண்டும்”
ஈமான் (என்னும்
இறைநம்பிக்கை) கொண்டவர்கள்
இந்த உலகில்
சூரியனைப்போல் வாழ வேண்டும்;
(அதை விடுத்து)

இங்கே மூழ்குகின்றனர், அங்கே மேலெழுகின்றனர்;
அங்கே மூழ்குகின்றனர்,இங்கே மேலெழுகின்றனர்….!
தனிமனிதனின் உறுதிப்பாடுதான்
சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் முதலீடு;
இதுவே சமுதாயத்தின்
நல்விதியை
இழுத்து வரும் ஈர்ப்புவிசையும் ஆகும்!
நீ படைப்பின் ரகசியம்;
உன் கண்களால்
உன்னையே நீ பார்த்துக் கொள்;
உன்னுடைய சொந்த ரகசியத்தைப்
பகிர்ந்துகொள்வதன் மூலம்
இறைவனின் பிரதிநிதியாய் இலங்கு...!
பேராசை
மனிதகுலத்தைத் துண்டு துண்டாய்ப்
பிளந்துவிட்டது;
அன்பின் மொழியாகவும்
சகோதரத்துவத்தின் அறிக்கையாகவும்
நீ வெளிப்படு...!
--- அல்லாமா இக்பால்
(உர்தூ கவிதை- ஆங்கில வழி மொழிபெயர்ப்பு- ஏம்பல் தஜம்முல் முகம்மது)


Yembal Thajammul Mohammad

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails