Monday, February 8, 2016

கருணை செய்வாய் யா அல்லாஹ்!

பழுதுப்பட்ட என் உள்ளத்தை
பக்குவப்படுத்து யா அல்லாஹ்;
அழுதுக்கொண்டு கேட்கிறேன்
அரவணைப்பாய் யா அல்லாஹ்;

உனையன்றி உதவி செய்ய
ஒருவருமில்லை யா அல்லாஹ்;
என் பலவீனத்தை முறையிட
உன்னிடமே கரைகிறேன் யா அல்லாஹ்;


மண்ணறை வேதனைக்கு
அச்சம்கொள்கிறேன் யா அல்லாஹ்;
நிரந்தர உலகில் நரகத்தின் வேதனைக்கு
கண்ணீர் சிந்துகிறேன் யா அல்லாஹ்;

கரம்யேந்திய கண்ணீரோடு
புலம்புகிறேன் யா அல்லாஹ்;
நேரான பாதைக்கு எங்களின் மீது
கருணை செய்வாய் யா அல்லாஹ்!

Yasar Arafat

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails