Saturday, December 31, 2016

புதியப் பக்கம் புலப்படுகிறது...!

புதியப் பக்கம்
புலப்படுகிறது...!
நல்லவையோ... கெட்டவையோ...
நம்மைக் கடந்து போய் விட்டன...!
இந்தக் கணிதம்
எத்தனையோ ஆண்டுகளாய்
இடைவெளி இன்றி நடக்கின்றன...!
நல்லதைத்தான் நாடுகிறோம்
அதுவும்
நம் கைவசம் வந்து சேரலாம்...!

Friday, December 30, 2016

இறைநம்பிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் இனிய நாளாகவே விடிகிறது.

Abu Haashima

உறங்கி விழிப்பதே நமக்குக் கிடைக்கிற
முதல் பரிசு.
இறைவன் இன்னும் நம்மை
உயிரோடு விட்டு வைத்திருக்கிறான் என்று நிரூபிக்கிற பெரிய சந்தோஷம் அது.
அடுத்து ...
அதிகாலைத் தொழுகை .!
அதை தொழுதவனுக்கு நாளெல்லாம் நல்லநாள்தான்.
காலை ஊன்றி நடக்க முடிந்தால்
கைகளை நீட்டி மடக்க முடிந்தால்
நீரோ ஆகாரமோ உண்ண முடிந்தால்
பேச முடிந்தால்
நுகர முடிந்தால்
நாம்
எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என நினைத்து அல்லாஹ்வை சுகூர் செய்யலாம்.
பணம் முடங்கி விட்டது
பொருளாதாரம் முடங்கி விட்டது என்று
நாம் புலம்புவதில் அர்த்தமில்லை.
நம்மை முடங்காமல் வைத்திருக்கிறானே
மாபெரும் கருணையாளன் அல்லாஹ் ...
அதுவே பெரும் பாக்கியம்.
அரசும்
அதன் அடக்கு முறைகளும்
அதன் ஆட்சி அதிகாரங்களும்
செயற்கையானவை.
மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை.
அவைகளின் ஆயுள் அற்பமானது.
விரைவில் அழியக் கூடியது.
இறைவனின் அருளே
அழிவில்லாதது.

Thursday, December 29, 2016

Manithanin aasai - மனிதனின் ஆசை - Islamic short flim

மக்கள் அல்லாஹ்வின் அருளை குறைத்து மதிப்பிட வேண்டாம்
அல்லாஹ்வின் அருள அளவிடமுடியாதது

படைத்தவன் ஒருவனுண்டு ....!

ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு
ஒவ்வொன்றிலும் இவ்வுலகில்
இணையாய் இணையாய்
படைத்தவன் ஒருவனுண்டு
ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு
ஈரேழு உலகைப் படைத்தது
பாரபட்சமின்றி பரிபாலிக்கும்
படைத்தவன் ஒருவனுண்டு
ஒன்றுண்டு ஒன்றே ஒன்றுண்டு

Sunday, December 25, 2016

பாலஸ்தீனுக்கு ஆதரவாக இருந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்...)

70 ஆண்டுகால வரலாறு மாறியது - ஐநாவில் வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்மானம் அல்லாஹ்வின் அருளால் நிறைவேறியது......!!
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் யூத பயங்கரவாதிகள் பாலஸ்தீனை 90 சதவீதம் ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற புதிய நாட்டை உருவாக்கினர். இப்பிரச்சினை 70 ஆண்டுகளாக முடிவுக்கு வராத பிரச்சினையாக இருந்து வந்தது.
70 ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு பக்க பலமாக அமெரிக்கா திகழ்ந்து வந்தது.
இந்நிலையில் பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எகிப்து கொண்டு வந்தது.
உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Wednesday, December 21, 2016

இறையறிந்த ரகசியங்கள் ...

அலைகள் நடனமாடும்
கடல் நீரில்
உப்பு கரிப்பு
இறையறிந்த ரகசியம் ....
மேகங்கள் கறுத்து
ஆகாயம் பொழிந்திடும்
மழை முத்துக்கள்
இறையறிந்த ரகசியம் ....

Tuesday, December 13, 2016

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருகையினால் வைய்யகம் பெற்ற பயன்

மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி

ஆசிரியர் - அல் அஸ்ரார் மாத இதழ்

அகில உலகத்தின் அருட்கொடையாய், முழு உலக முன்மாதிரியாய், பாருலக பேரொளியாய், ஈருலக இரட்சகராய், பாவிகளுக்கும் பரிந்து பேசும் பரிந்துரையாளராய், அகில உலகில் அவதரித்தவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
அவர்களின் வருகையால் இவ்வுலகம் இருள் நீங்கி விடிவு கண்டது, அறியாமை அகன்றது, மடமைகள் மறைந்தன. கல்லாமை இல்லாமல் ஆனது, கண்மூடித்தனங்கள் மண்மூடிப் போயின.

Thursday, December 1, 2016

ஏகனே இறையோனே ....!

பெருமையுடன் தலைக்கனம் பிடித்தவருக்கு
===== சிறுமையே வருமென்பதை கிஞ்சித்தும்
அறியாமல் தனக்கெல்லாம் தெரியுமென
===== தற்பெருமையுடன் இப்புவிதனை மிதித்தே
நடந்திடும் மாந்தர்க்கு புத்திபுகட்டிடுவாயே
===== எல்லாமிருந்தும் தேவைகளின்றி நிறைவாய்
நித்தமும் அடியார்க்கெல்லாம் அருள்பொழியும்
===== பெருமைக்குரியவனே ஏகனே இறையோனே
படைப்பினங்கள் பலவற்றையும் மாண்புடனே
===== படைத்து இவ்வுலகினில் படைத்தோனை
தப்பாது வணங்கிடவே பணிப்பித்தோனே
===== படைப்பினில் சிறப்பாய் மாந்தரை
படைத்து தீதும்நன்றும் பகுத்தறிந்தே
===== இம்மைதனில் இயல்பாய் வாழ்ந்துகாட்டி

எந்தத் தாயும் பெற முடியாத அழகானக் குழந்தை !


Abu Haashima
எந்தத் தாயும் பெற முடியாத 
அழகானக் குழந்தை !
**************
அண்ணலே யா ரசூலல்லாஹ் ...
உங்கள் கண்களை விட 
அழகான கண்கள் 
யாருக்கும் இல்லை !
எந்தத் தாயும் 
தங்களை விட 
அழகானக் குழந்தையை 
பெற்றதேயில்லை !
தாங்கள் 
குறையே இல்லாமல் 
படைக்கப்பட்டீர்கள் ...
தாங்கள் 
எப்படிப் படைக்கப்பட வேண்டும் 
என்று விரும்புவீர்களோ 
அப்படி !
பெருமானே 
எங்கள் நாயகமே...

Sunday, November 27, 2016

இல்லையென்பது இல்லை....!

இன்பம் இல்லையென்றால்
இன்னல்களை நேரிட வேண்டியதில்லை!
இருப்பது இல்லைஎன்றால்
இழப்பதற்கு என்று எதுவுமில்லை!!
உறவுகள் இல்லையென்றால்
பிரிவெனும் கடும் துயரிருபதில்லை! 
வாழ்க்கை இல்லையென்றால்
சுமைகளை சுமக்க வேண்டியதில்லை!!
இளமை இல்லையென்றால்

Saturday, November 26, 2016

பணத்தாள் நீக்கம் – ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி

பணத்தாள் நீக்கம் – ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி
(ஸ்க்ரோல்-இன் கட்டுரையின் தமிழாக்கம்scroll.in/)
பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது ரொக்கப் பணம் தேவைப்படாத நிலை வரும் என்பதைப் பற்றியே பேசுகிறது. இரண்டும் நடந்தால் நல்லது என்பது அதன் உள்ளடங்கிய அர்த்தம். ஆனால், பொருளாதாரத்தின்மீது ஒட்டுமொத்தமாக என்ன தாக்கம் ஏற்பட்டாலும் சரி, வளங்களின் பகிர்வின்மீது மிகப்பெரும் தாக்கம் ஏற்படும் என்பதைப் புறக்கணிக்கிறது. டீமானிடைசேஷன் என்பது பெரியதொரு வெற்றிடம் – சொல்லப்படுவதற்கு நேர் மாறாக - வலிமையற்றவர்களிடம் இருக்கும் வளங்களை செல்வாக்கு மிக்கவர்களுக்குச் சென்றடையுமாறு உறிஞ்சுகிற வெற்றிடம். குறிப்பாக, இந்த மாற்றம் நிரந்தரமானது.

தமிழர் பண்பாடு

                                                       சிராஜுல் மில்லத்
தமிழரின் பண்பாடு மிகச் சிறந்த பண்பாடு !  நினைவில் போற்றத்தக்க பண்பாடு.

2,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க சமுதாயத்தினர் என்று சொல்ல வேண்டுமானால், சீனர்கள் இருந்தார்கள். கிரேக்கர்கள், ரோமர்கள், அரபு மக்கள் இருந்தார்கள். நம்முடைய மக்களும் இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் தங்களை எப்படிக் கருதினார்கள். பிறநாட்டினரைப் பற்றி எந்த அளவுக்கு மதிப்பிட்டிருந்தார்கள் என்பதைப் பார்த்தால் தமிழனுடைய சிறப்பு பட்டெனத் தெரியும்.

Friday, November 25, 2016

மனவளர்ச்சி குறைபாடு (Mental retardation)

குழந்தைகள் தொடர்பான சில பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை பெற சில ஆலோசனைகள்

மனவளர்ச்சி குறைபாட்டுக் குழந்தைகளை இனங்காண்பது எப்படி? அவர்களுடன் நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?

By M.N.Lukmanul Hakeem

MSW (medi and psy) M.phil (psw) Dip.in counseling , Dip in NLP. Psychotherapy Psychotherapist, psychiatric Social Worker and Psychological Counselor Certified Neuro Linguistic Practitioner Phd Scholar

http://www.islamkalvi.com

Monday, November 21, 2016

பெற்றோர்களே பிள்ளைகளை கண்காணிக்கிறீர்களா?



பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கண்காணித்து கணினியில் எதைப்படிக்கிறார்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எதனைப் பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் கவனமாக கவனித்துக்கொண்டே வரவேண்டும். அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்பதையும் கவனிப்பதுடன் பிள்ளைகளுடன் சேர்ந்து உட்கார்து உறையாடி அவர்களின் நன்பர்களைப் பற்றியும் பள்ளி முடிந்ததும் வேறு எங்கும் செல்கிறார்களா என்பதையும் கண்கானிக்க வேண்டும்.

அவர்கள் படிக்கும்  நிலையில் அவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாமலிருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிவதுடன் அவர்கள் தீய நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனரா தீய இடங்களுக்கு செல்கின்றனரா புகை பிடித்தல் பழக்கம் உள்ளனவா என அவர்கள் அறியாத வண்ணம் கண்கானித்து பிள்ளைகளிடம் மென்மையான முறையில் தீய பழக்கத்தின் கெடுதிகளை உணர்த்தி நேர் வழியின் பக்கம் கொண்டு வரவேண்டும்.

Tuesday, November 15, 2016

சமுத்திர ஆழங்களில் மண்டிக்கிடக்கும் மையிருள்


أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ

    அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால்  அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. 24:40 سورة النور

    கடல் ஆழங்களில் மண்டிகிடக்கும் மையிருட்டை நவீன கருவி சாதனங்களால் தான் விஞ்ஞானிகளால் உறுதி செய்திட முடிந்தது என ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கலகத்தில் பணியாற்றிய பேராசிரியர் துர்கா ராவ் கூறினார். எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல் 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள்ளே மூழ்குவது இயலாத காரியமாகும். அதேப்போன்று 200 மீட்டருக்கும் அப்பாற்பட்ட ஆழத்தில் கடல் பகுதிகளில் மனிதன் உயிர் வாழ்ந்திட முடியாது.

Friday, November 11, 2016

கிபுலி மலையும் அதன் நினைவுகளும் ....!

ராஜா வாவுபிள்ளை 



பண்டொருநாள்
எனதுபார்வையில்
அவ்விடம்
ஆள் அரவமில்லா
அதிகப்பயனில்லாத
ஒருசில வாகனங்களே பயணிக்கும்
பாதையாய் இருந்தது
பக்கத்திலொரு சிறுகால்வாயும்
சுத்தமான மழைநீரை சுமந்து
பெருமேரியில் கலந்திட
சலசலத்து ஓடியது
கால்வாயின் கரையோரம்
புகைவண்டி நிலையம்
ஆங்கிலேயனால் வடிவமைக்கப்பட்டு
இந்தியக்கூலிகளால் கட்டப்பட்டது

Saturday, November 5, 2016

நாற்பது வயதில் புரியும்..

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
மனிதன் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென, நாம் உபதேசித்தோம். அவனை அவனது தாய் சிரமத்துடனே சுமந்து, சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுத்தாள். அவனை(க் கர்ப்பத்தில்) சுமப்பதும், அவனுக்குப் பால் குடியை மறக்கடிக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும் போது, ‘என் இரட்சகனே! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடை களுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும் எனக்கு அருள்பாலிப்பாயாக! எனக்கு என் சந்ததியைச் சீர்படுத்துவாயாக! நிச்சயமாக நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டேன். நிச்சயமாக நான் முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களில் உள்ளவனாவேன் என்று (பிரார்த்தித்துக்) கூறுவான்.’ (46:15)

உலகில் உள்ள பெற்றோர்கள் அனை வரும் தியாகிகளாவர். ஆனால், பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் துரோகிகளாகவே நடந்து கொள்கின்றனர்.

Friday, November 4, 2016

இனிக்கும் இஸ்லாம் ... !

ஒரு அழகான கல்யாணம்
எப்படி இருக்க வேண்டும் என்பதை
மனித சமூகத்திற்கு வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.
அதில் ...
அழகு
காதல்
பொருளாதாரம்
மார்க்கம்
தியாகம்
எல்லாமே அழகியலுடன் கலந்திருந்தது.

Monday, October 31, 2016

நேற்று நடந்தது ....

தற்போது இங்கே கத்தரில் சூடு மறைந்து சாயங்காலம் இதமான காற்றும் நல்ல சுகமான சீதோஷண நிலையுமிருப்பதால் நான் 5.30 மணி தொழுகையான மஃரிப் தொழுதுட்டு இரண்டு மணி நேரம் ஆபீஸூக்கு வெளியே சேர் போட்டு அமர்ந்து வருவது வழக்கம் ..அப்படி அமர்ந்திருக்கையில் நேற்று தொழுகை முடிந்த பிறகு எத்தியோப்பியா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச்சேர்ந்த சிலர் என்னை சந்திக்க வந்தார்கள் .............வந்தவர்கள்
தாங்கள் மாதம் இருமுறை விஷேஷ பிறார்த்தனை செய்வதாகவும் அதற்கு மைக் வெளியே உபயோகப்படுத்த நீங்கள் அனுமதிக்க வேண்டுமெனவும் கேட்டார்கள்

இறைவன் என்பவன் ...


ஆக்க ஒரு தெய்வம்
அழிக்க ஒரு தேவன்
காக்க ஒரு கடவுள்
கண்காணிக்க ஒன்று
படைக்க ஒரு பரம்பொருள்
பரிபாலிக்க பரமன் என
பகிர்ந்தெடுத்துப் பணிசெய்ய
பலகீனனல்லன் இறைவன்
வானங்களைப் படைத்தவன்
வணக்கத்திற்குரியவன்
அவன் என்று சொல் - அவன்
ஒருவன் என்று கொள்

Friday, October 28, 2016

உழைப்பெனும் வழிபாடு ....!

குத்துக்கல்லு போல
வாடாத இருப்பிருந்து
வாழ்வின்
வெம்மையையும் வளமையையும்
ஒருபொருட்டாய் கொண்டு
ஓடியாடி உழைத்திருந்தும்
சிறு மீனோ உறுமீனோ
வந்ததை வரவில் வைத்து
நில்லாமல்

Sunday, October 23, 2016

தனி ஒருவன்

மரம்தான்...அவன்
தனிகட்டைதான்!.
துறந்தான் குடும்பம்...
அவன் சவம்தான்!

இணைந்த கைகள்
ஓசைதரும் என்பது

THE LOSS IS THE GAIN / Vavar F Habibullah

பேரிழப்புகளில் தான் வெகுமதி அடங்கி இருக்கிறது என்பது தான் அப்பட்டமான உண்மையாகும்.
மரணங்களை அநுதினமும் சந்திக்கும் மனிதனே வாழ்க்கை சுகங்களை தேடி
அலைகிறான். தோல்விகளின் வலிகளை சுமந்து கொண்டே வெற்றியின் படிகளில் காலடி
எடுத்து வைக்க துடிக்கிறான்.
உலக பற்றில்லாத வாழ்க்கை சுகம் தருமா?
சூபித்துறவிகள் அவையில் நடந்த ஒரு உரை யாடல் நம்மையும் சிலிர்க்க வைக்கிறது.

ஒய்வு - உற்சாகம் - உழைப்பு ....! /ராஜா வாவுபிள்ளை

ஓடியோடி உழைப்பதில்
கிடைக்கும் உற்சாகம்
கொஞ்சம் சாய்ந்து கொண்டால்
கிடைக்கும் ஒய்வு
உறங்காது உழைப்பதில்
கொள்ளும் உற்சாகம்

இறையச்சம் .../ அப்துல் கபூர்





இன்பமூட்டும் செல்வத்தின்
வாழ்மைப் படிகளிலும்
துன்பமூட்டும் வறுமையின்
ஏழ்மைப் படிகளிலும்
இறைவனை துதிப்பதும்
திருமுறை அறிவுறுத்தும்
கொள்கைகளை மதிப்பதும்
ஆத்மார்த்தமான இறையச்சம் ...

Saturday, October 22, 2016

முதிர்ந்த ஆன்மிக நிலை என்பதென்ன?


1). மற்றவர்களைத் திருத்த முனைவதற்கு முன் உங்களைத் திருத்த முயல்வதே ஆன்மிக முதிர்ச்சி ஆகும்.

2). மற்றவர்களை (அவர்தம் குறைநிறைகளுடன்) இயல்புமாறாமல் ஏற்பது ஆன்மிக முதிர்ச்சி ஆகும்.

3). ஆன்மிக முதிர்ச்சி என்பது, அவரவர் கோணத்தில் அவரவர் சரி என்பதைப் புரிந்துகொள்வதாகும்.

4). ஆன்மிக முதிர்ச்சி என்பது "போகட்டும்" என்று விட கற்றுக் கொள்வதாகும்.

5). ஆன்மிக முதிர்வு நிலை என்பது, உறவுகளிடமிருந்து எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதும், அதே சமயம் கொடுக்கும் இன்பத்திற்காக கொடுத்துக் கொண்டிருப்பதும் ஆகும்.

Friday, October 21, 2016

திருமணம் என்பது

Abu Haashima
திருமணம் என்பது
ஒரு ஒப்பந்தம்தான்.
உனக்கு நான்
எனக்கு நீ
துணையாக இருப்போம்.
அப்படிங்கிறதுதான் ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து.
இருவரும் பிணக்கின்றி
ஒருவரை ஒருவர் புரிந்து
அனுசரித்து இயைந்து வாழும் வரை
நோ ப்ராப்ளம்.
இருவரின் குணங்களும் ஒத்துப் போகாமல்
பிரச்சினைகளே வந்து கொண்டிருந்தால்
ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.
அதிலேயும் இருவருக்கும் சம உரிமை இருக்கிறது.
பின்னே ...

ஆயுதம் ஒழிப்போம் ....!

ஆதிமனிதன் ஆயுதம் செய்தான் உணவுக்கு வேட்டையாடவும், பயிர்செய்ய ஏரும் கலப்பையும் ஆயுதமாக செய்தான் காலம் காலமாக மனிதம் தழைத்தோங்கியது. நதிக்கரைகள் ஓரம் நாகரீகம் வேருன்றியது. கலையும் இலக்கியமும் மிளிர்ந்தன. சமயங்களும் மார்க்கமும் மனிதனை நேர்வழிப்படுத்த வந்தன.
மக்கள் தொகை பெருகத் துவங்கியது. வணிகம் வளரத்துவங்கியது. போக்குவரத்தும் பயணிக்கும் பாதைகளும் பலவழியாக கடல், ஆகாய, இருப்புப்பாதை மற்றும் பாரம்பரிய தரைவழியாக வும் மக்களுக்கும் பொருட்களுக்கும் திறக்கத் தொடங்கியது.

Tuesday, October 11, 2016

திருச்சி ஜமால் முகம்மது கல்லூாி, தமிழாய்வுத்துறையும் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்ம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 திருச்சி ஜமால் முகம்மது கல்லூாி, தமிழாய்வுத்துறையு சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையும் இணைந்து பன்னாட்டுக் கருத்தரங்கை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவாி மாத முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
 இவ் அறிவிப்பு மடலை உலகறியச் செய்ய வேண்டுமாய் நான்  கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
முனைவர் க. சிராஜுதீன்
உதவிப்பேராசிாியர்
தமிழாய்வுத்துறை
ஜமால் முகம்மது கல்லூாி
திருச்சிராப்பள்ளி - 20
9865721142

From: kamarudeen sirajudeen <<jmctins2015@gmail.com>
திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம்





திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ் இலக்கியங்களில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் பொருளில்  பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்துகின்றது. பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கலாம்.

Monday, October 10, 2016

மரணத்தின்போது யார் யார் அழுவார்கள்

அப்துல் கையூம்

என் மரணத்தின்போது
யார் யார் அழுவார்கள் என்று
அனுமானித்து விட்டேன் !
இதோ
பட்டியலும் தயார்..!
அந்த பட்டியலில்
நண்பர்கள் சிலரின் பெயர் கிடையாது.
விரோதிகள் பலரும் உண்டு !
அன்பாக நடித்தவர்களின்
அரிதாரம் கலைவதைப் பார்த்து
அன்று நான் அதிர்ந்து சிரிப்பேன்..
அது யார் கண்ணுக்கும் புலப்படாது !
அதோ...

Tuesday, October 4, 2016

‘ஹிஜ்ரத்’ என்றால் என்ன?

அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
47   ‘ஹிஜ்ரத்’ என்றால் என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்று ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆகி இருந்தன. முஸ்லிம்களுக்குக் குரைஷிகள் அளித்த தொல்லைகள் எல்லை மீறி போவதை நபிகளார் உணர்ந்தார்கள்.
எந்த நிலையிலும் அவர்கள் இஸ்லாத்தைக் கைவிட மாட்டார்கள் என்றபோதிலும், அவர்கள் படும் இன்னல்கள் குறித்து நபிகளார் பெரிதும் கவலை கொண்டார்கள்.
இதனால் இன்னல்களுக்கு ஆளான முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்குச் செல்லட்டும் என்று நபிகளார் முடிவு செய்தார்கள். இதன்படி பன்னிரண்டு ஆண்களும், நான்கு பெண்களும் அபிசீனியா சென்றனர். இதுவே இஸ்லாத்தின் முதல் ‘ஹிஜ்ரத்’ ஆகும்.

Tuesday, September 27, 2016

சொந்தமாகட்டும் சொர்க்கம் ! - அபு ஹாஷிமா

அண்ணலே யா ரசூலல்லாஹ் !
உங்களை
உவக்கும்போதுதானே
உயிர் பெறுகிறது
எங்கள் உள்ளம் !
உங்கள் முஹப்பத்தை
முத்தமிடும் போதுதானே
மணம் வீசுகிறது
எங்கள் மூச்சு !

Wednesday, September 21, 2016

எனக்குள் காணும் நான்....!

நினைவுகளை கழைந்து
நிர்மல நிதர்சனத்தை தரிசித்ததில்
என்னில் நான் பளிச்சென தெரிந்தேன்.
இறைவன் தந்த கூடு
அதில் எத்தனை எத்தனை கோடு
கடந்துவந்த பாதை
காட்டியது முயற்சியை
வெற்றியும் தோல்வியும்
விகிதாச் சாரத்தில்
சிறு சிறு வித்தியாசங்கள்
சாரமில்லை

Tuesday, September 20, 2016

தொழுகையின் மாண்பை அறிந்து கொள்வோம்!



ரமலான் காலத்தில் தொழுகையை மேலும் மேலும் அதிகப்படுத்துங்கள். தொழுகையின் மாண்பு குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் கருத்துக்கள் அளப்பரியன :-

* நீங்கள் அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தா செய்யுங்கள் (தொழுங்கள்), நிச்சயமாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஸஜ்தாவைக் கொண்டும் உங்களுக்கு ஒரு பதவியை அல்லாஹ் உயர்த்துகிறான். உங்களை விட்டும் ஒரு பாவத்தை அழித்துவிடுகிறான்.

* மனிதன் தான் தொழுத பிறகு, அவனுக்காக தொழுகையின் பத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப்படுகிறது. சிலருக்கு ஒன்பதில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு ஏழில் ஒரு பங்கு, சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு ஐந்தில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு.. இவ்வாறு பதிவு செய்யப்படுகிறது. நாம் தொழும் தொழுகைக்கு பல ஆயிரத்தில் ஒரு பங்கென்ன... பல லட்சத்தில் ஒரு பங்கும் பதிவு செய்ப்படுமேயானால்... அதுவும் அல்லாஹ்வின் கிருபையாகும்.

Sunday, September 18, 2016

அன்பின் அரவணைப்பு....!

ராஜா வாவுபிள்ளை


வழியும் வியர்வை
உழைப்பின் வலியை
சொல்லும் ...

கனியும் பார்வை
கருணையின் உறவை
சொல்லும்....

நிமிர்ந்த நன்னடை
உள்ளத்தின் தெளிவை
சொல்லும்....

Saturday, September 10, 2016

பிஸ்மி சொல்லி வாயில வெச்சிக்கோடீ .... ....

J Banu Haroon

நான் ரொம்ப சின்னவள் அப்போ .....

என் பாட்டி பாப்பாத்தியம்மா ( ஜூபைதா பேகம் )
கடல்வழி மார்க்கமாக கப்பலில் பிரயாணித்து புனித '' மக்கா '' விற்கு சென்றுவிட்டு பலமாதங்கள் கழித்து ஜனத்திரளுடன் தக்பீர் சொல்லிக்கொண்டு களைப்புடன் கலர் புர்கா அணிந்தவராய் வீடு வந்து இறங்கின நினைவு வருகிறது .....

பெட்டிகளும் வந்திறங்கின .

அப்பா ,சித்தப்பாக்கள் சிங்கப்பூரிலிருந்து கப்பலில் சிலநாட்கள் பயணித்து வந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்கி இருப்பார்கள் . இங்கிருந்து அழைக்கப்போன காரில் வீட்டு ஆண்களுடன் வந்து அமைதியாக வெளியில் தெரியாமல் பெட்டி ,பார்சல்களுடன் இன் பண்ணின சட்டையும்,கழுத்தில் இறுக்கி கட்டின டையும் ,பேண்ட்டும் ,கருப்பு சாக்ஸும் ,ஷூக்களும் அணிந்து ....ஜம்மென்று வாசனை திரவியங்கள் மணக்க வந்திறங்குவார்கள் .வந்தவர்களை வேற்று கிரகவாசியை போல் மற்றவர்களுடன் சேர்ந்து நானும் வேடிக்கை பார்த்திருக்கிறேன் ..இழுத்துப்பிடித்து இறுக அணைத்துக்கொண்டு முத்தமிடுவார்கள் .அச்சத்துடன் திமிறிக்கொண்டு ஓடுவேன் ....

Sunday, September 4, 2016

சகன் சாப்பாடு ...


ஏகன் உணர்த்தும்
ஒற்றுமையின் மகிமையினை
கூட்டாய் பிரதிபலிப்பது
சகன் சாப்பாடு ...

ஏற்றத்தாழ்வு களைந்திட
முன்னோர்கள் உருவாக்கியது
தலைமுறைகளின் சுழற்சியில்
பின்னோர்கள் உருமாற்றியது ..

Saturday, September 3, 2016

நற்செயல்

இஸ்லாமின் வழிகாட்டுதலால் வளர்க்கப்பட்டு அதன் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் நன்கறிந்த முஸ்லிம், சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் பலனளிப்பவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த வகையிலும் துன்பமிழைத்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    சத்தியத்தையும் நன்மையையும் அடிப்படையாகக் கொண்டு அவர் வளர்க்கப்பட்டதால் மக்களுக்கு பலனளிப்பது என்பது இயல்பாகும். மக்களுக்குப் பயனளிப்பதற்கான வாய்ப்பு ஏதேனும் கிட்டினால் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். ஏனெனில் அது வெற்றியின்பால் அழைத்துச் செல்லும் என்பதை அவர் அறிவார்.

    விசுவாசிகளே! நீங்கள் குனிந்து சிரம்பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றி அடையலாம். (அல்குர்ஆன் 22:77)

Friday, September 2, 2016

ஹஜ் புனிதக் கடமையினை தன்னகத்தே கொண்ட துல்ஹஜ்ஜு மாதம்....

மூன்று பெரும் மதங்களின் மூலவரான இறைத்தூதர் இபுறாஹீம் (அலை) அவர்களை நினைவுகூரும், ஹஜ் புனிதக் கடமையினை தன்னகத்தே கொண்ட துல்ஹஜ்ஜு மாதம் இனிதே தொடங்குகிறது.

இறையோ இதுவோ இப்பிறையோ?
இல்லை இல்லை தேய்ந்திடுதே!
முறையாய் பெரிய கதிர்கூட
முழுதாய் மறையுது அந்தியிலே
நிறைந்த சிந்தை இபுறாஹீம்
நெஞ்சில் பூத்த தேடலிலே
இறையின் மார்க்கம் விளங்கியதே

Thursday, September 1, 2016

அருள்வாயே ஏகனே இறையோனே


மனிதம் பேணிட
மூத்தோரை மதித்திட
சிறாரை ஊக்குவித்திட
அருள்வாயே ஏகனே இறையோனே

நல்லோரோடு சேர்ந்திட
நாணயமாய் வாழ்ந்திட
எளியோரை அரவணைத்திட
அருள்வாயே ஏகனே இறையோனே

Wednesday, August 31, 2016

அறிவோம் இஸ்லாம் : விருந்தோம்பல்

பாத்திமா மைந்தன்

இஸ்லாம் கூறும் விருந்தோம்பல் கருத்துகள், எல்லோராலும் விரும்பக் கூடியவை என்பது மட்டுமல்ல; விழுமிய கருத்துகளாகும்.
'அல்லாஹ் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தினரை நன்றாக உபசரித்துக் கொள்ளட்டும்' என்பது நபிமொழியாகும்.
விருந்தினரை உபசரித்தல் என்பது பல பரந்த அர்த்தங்களைக் கொண்டது. விருந்தினர்களுக்கு உணவளிப்பது மட்டுமல்ல; அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதும் உபசரிப்பில் அடங்கும்.
உங்கள் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் முதலில் அவருக்கு 'ஸலாம்' கூறி வரவேற்று அவருக்காக இறைவனிடம் பிரார்த்தித்து, நலம் விசாரித்துக் கொள்ளுங்கள்.

Monday, August 29, 2016

நால்வகை ஹதீதுகள்

நால்வகை ஹதீதுகள்
ஒரு ஹதீதை ஏற்கலாமா ஏற்கக்கூடாதா என்ற பரிசீலனையில் ஹதீதுகள் இஸ்லாமிய அறிஞர்களால் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன.

1. ஆதாரப்பூர்வமானவை - ஸஹீஹ்
2. இட்டுக்கட்டப்பட்டது - மவ்ளூவு
3. விடப்படுவதற்கு ஏற்றது - மத்ரூக்
4. பலவீனமானது - ளயீப்

முதல் வகை ஹதீதுகளை மட்டுமே முஸ்லிம்கள் ஏற்று நடக்க வேண்டும். மற்ற மூன்று வகை ஹதீதுகளையும் விட்டுவிடவேண்டும்.

Thursday, August 25, 2016

ஸ்காட்லாண்ட் காவல்துறையின் அங்கீகரிக்கப்பட்ட சீருடையில் ஒன்றாக “ஹிஜாப்” அறிவிப்பு!

By Abdul Gafoor

லண்டன்.

25.08.2016.

ஸ்காட்லாண்ட் நாட்டின் காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்ட சீருடையில் ஒன்றாக ஹிஜாப் உள்ளதாக அந்நாட்டின் காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறையில் பணி புரியும் பெண்கள் ஹிஜாப் அணிந்து வேலைக்கு செல்வது வழக்கமாக இருந்து வந்த நிலையில், தற்போது ஹிஜாபை ஒரு சீருடையாக அறிவித்துள்ளது ஸ்காட்லாண்ட் காவல்துறை.

இது குறித்து ஸ்காட்லாண்ட் காவல்துறையின் தலைமை அதிகாரி பில் கோர்ம்லி கூறுகையில், “எங்கள் காவல்துறையால் ஹிஜாப் ஒரு சீருடையாக அறிவிப்பதை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். முஸ்லீம் மற்றும் அனைத்து மதத்தினரின் பங்கு ஸ்காட்லாண்ட் காவல்துறைக்கு மிகவும் அவசியம். மக்களுக்காக சேவை செய்யவதில் அனைத்து தரப்பு மக்களும் பங்கு கொள்ள வேண்டும். எங்களுடைய காவல்துறைக்கு முஸ்லீம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Wednesday, August 24, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவுற்றது ... ஒன்பதாம் பாகம் .../ அப்துல் கபூர்


இல்லம் நுழைந்தேன் ...
நினைவு நார்களில் ஞாபகப் பூக்களை தொடுக்கிறேன் ....

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
குமரி மாவட்ட திசையினை அடைந்து விசையினை குறைத்து ஓசையினை அமைதியாக்கிய ரயில் எம்மை இறக்கிடும் ஆசையினை உரைத்தது ...
குறைந்த பட்ச பரபரப்பு நிலவிய நாகர்கோயில் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி நாங்கள் செல்லுமிடம் புதுத்தெரு என்று கூறி மகிழ்வுந்தில் ஏறி அமர்ந்தோம் ....
விடலை பருவத்தில் சுற்றித் திரிந்த அழகிய இடலை ஊரின் சுகமான தென்றல் எனது உடலை தழுவி நலம் விசாரித்தது ....
வீட்டில் கால்கள் பதித்ததும் எனது வாழ்க்கை ஏட்டில் திருப்பங்களும் விருப்பங்களும் நிறைந்த புதிய அத்தியாயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் இறைவனின் அருட் பேனா தெளிவாய் எழுதப் போகிறது என்பதை சற்றும் அறியாதவனாய் ....
நானும் எனது நேசத்திற்குரிய தாய் மாமா மர்ஹூம் AVM சின்னப்பா அவர்களும் எங்களது இல்லத்தில் நுழைகிறோம் ....
முற்றும் ...

Monday, August 22, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவுற்றது .. எட்டாம் பாகம் ../ அப்துல் கபூர்

ரயில் பயணம் ...

எனது நினைவுத் தொட்டிலில் ஞாபகக் குழந்தையை தாலாட்டுகிறேன் ...

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு
26 ஆண்டுகள் நிறைவுற்றது .. எட்டாம் பாகம் ..

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

ஏழு நாட்கள் பயணித்த கப்பல் அனுபவம் எனது மனத் திரையினை அலங்கரிக்க கடலின் கரையினை தொட்ட கப்பலிலிருந்து இறங்கியதும் எனது கால்கள் தரையினை தொட்டு நடக்கத் துவங்கியது .....

தாயகத்தோடு தங்க வந்த எங்களை துறைமுக சுங்க அதிகாரிகள் சோதனையிட்டு அகதிகளாய் நோக்கிய பார்வை எங்களின் மீது சகதிகளாய் விழுந்தது ....

நாங்கள் இனி எந்த நாட்டுக்கு சென்றாலும் இந்திய அரசாங்கத்திற்கு 10,000 ₹ செலுத்த வேண்டும் என்கிற Bond பத்திர முத்திரையினை பத்திரமாக எங்களது கடவுச் சீட்டுகளில் பதித்தனர்....

கேரளாவில் ஒரு வித்தியாச மணமகள்: திருமண 'மகரா'க புத்தகங்களை பெற்றார்!

பொதுவாக இஸ்லாமிய மக்களின் திருமணத்தின் போது மணமகளுக்கு, மணமகன் 'மகர்' எனப்படும் திருமணக்கொடை வழங்குவது வழக்கம். அது தங்கமாக இருக்கலாம் அல்லது பொருளாக இருக்கலாம். அன்பின் அடையாளமாக இது கருதப்படுகிறது. ஆனால் மகராக புத்தகங்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் , கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர்.  

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தை ஷாக்லா, ஹைதராபாத் பல்கலையில் 'பொலிட்டிக்கல் சயின்ஸ்' படித்தவர்.  இவருக்கும் ஆனீஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஷாக்லா, தனது வருங்கால கணவரிடம், மகராக தங்க நகையோ பணமோ கேட்கவில்லை. மாறாக 50 புத்தகங்களை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். 'இஸ்லாமிய பெண்ணிய இலக்கியம், இலக்கிய புத்தகங்கள், அறிவியல் மற்றும் அரசியல் சார்ந்த புத்தகங்கள் தேவை' என அனீஷிடம், லிஸ்டையும் எழுதியும் கொடுத்து விட்டார்.

Sunday, August 21, 2016

* * * முஸ்லிம் தீவிரவாதிகள் * * *


1.6 பில்லியன் முஸ்லிம் உலகில் வாழ்கிறார்கள். இவர்களுள் எத்தனை பேர் தீவிரவாதிகள்? விரல்விட்டு எண்ணிவிடலாம். சரி ஒரு கணக்குக்குள் கொண்டுவர முயல்வோம்.

ஒரு (1600) ஆயிரத்து அறுநூறு?

சரி போகட்டும் ஒரு (16,000) பதினாறு ஆயிரம் பேர்?

சரி அதுவும்போகட்டும் மிக மிக அதிகப்படியாக ஒரு (160,000) லட்சத்து அறுபதினாயிரம் பேர்?

1.6 பில்லியனில் 160,000 என்பது எத்தனை விழுக்காடு தெரியுமா?

0.01 % விழுக்காடு.

அதாவது பத்தாயிரம் பேருக்கு ஒருவன்.

Saturday, August 20, 2016

மதரஸாக்களின் வீழ்ச்சி! அவமானங்களை சுமக்கத் தயாராகும் முஸ்லிம்கள்!!


மதரஸாக்களின் வீழ்ச்சி! அவமானங்களை சுமக்கத் தயாராகும் முஸ்லிம்கள்!!

     CNM Saleem    

[  மார்க்கத்தின் வளர்ச்சியே எங்களின் உயிர் மூச்சு என்று வாழ்ந்த அன்றைய முதிர்ந்த உலமாக்களின் தியாகம் இவை அனைத்தையும் இன்றைய முஸ்லிம் சமூகம் வீணடித்து அவமானப்படுத்தி வருகிறது.

உயிர் வாழும் வரை வளர்த்தெடுக்க வேண்டியதும் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றப்பட வேண்டியதுமான இந்த அரபு கலாசாலைகளை முஸ்லிம்கள் தங்களின் அலட்சியத்தாலும், அறியாமையாலும், குறுகிய மனப்பான்மையினாலும் படிப்படியாக மூடு விழா நடத்தும் அநியாயத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

முஸ்லிம் சமூகம் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டு வருகிறது.

மன்னிக்க முடியாத இந்த வரலாற்றுப் பிழைக்கு பல உலமாக்களும் சமூக ஆர்வலர்களும், மாநில உலமா சபையயும் சாட்சியாக இருக்கின்றனர்.]

மதரஸாக்களின் வீழ்ச்சி! அவமானங்களை சுமக்கத் தயாராகும் முஸ்லிம்கள்!!

இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் இந்த 21ஆம் நூற்றாண்டு ஒரு முக்கியமான காலகட்டம். இன்றைய முஸ்லிம்களின் வாழ்வு குறித்து வரலாற்று ஏடுகள் மிகவும் வித்தியாசமாகவும் விகாரமாகவும் பதிவாக்கும் என்று தெரிகிறது.

Friday, August 19, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவுற்றது ...ஏழாம் பாகம் ...

 Abdul Gafoor
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....

கப்பல் பயணம் ....

அனுபவ ஆற்றில் நினைவுத் தூண்டில்களை இடுகிறேன் ....

இஸ்லாமிய சரித்திரங்களில் இடம் பெற்ற ஈராக்கின் பாக்தாத் நகருக்கு முந்தைய கடல் நகரத்தை எங்களது பேருந்துகள் நெருங்குகிறது ....

அசரா வண்ணம் அலை எழுப்பும் பசரா துறைமுக நுழைவு வாயிலில் சோகத்தின் உறைமுக பயணிகளாகிய நாங்கள் மெதுவாய் இறங்குகிறோம் ....

முகலாய சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளில் ஒருவரின் பெயரை தாங்கும் அக்பர் கப்பல் எங்களை தாங்கும் ஏற்பாடுகளில் பரபரப்பாய் நிற்கிறது ...

ராணுவ தேசத்தின் கடலில் நங்கூரமிட்டு கம்பீரமாக அக்பர் கப்பல் மிதக்க ...
எனது மனக் கடலில் ஏழு ஆண்டு கால (10.10.1983 - 23.10.1990) அனுபவக் கப்பல் ஞாபக நங்கூரமிட்டு மிதக்க துவங்குகிறது ....

Thursday, August 18, 2016

உலக வழமையும் என்றாகிப் போன இப்பூவுலகு......


Raheemullah Mohamed Vavar
எங்கும் வெளிச்சக் கற்றை,
ஆசைதீர இழுத்துப் பிடித்து அளவின்றி சுவாசிக்கும் அன்லிமிடெட் ஆக்ஸிஜன்,
எல்லா சப்தங்களும் எங்கோ ஒரு புள்ளியில் கலந்து எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும் உலக இயக்கத்தின் பேரிரிச்சல்,
கட்டுப்பாடுகளும் கடமைகளும் இருந்தாலும்
எப்போதுமே தடையின்றி தொடரும்
கட்டுப்பாடற்ற மனப்போக்கும்
மடமைகளை கைகொள்ளும் ஈஸி லைஃப்
உலக வழமையும் என்றாகிப் போன இப்பூவுலகு......

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவுற்றது ...ஆறாம் பாகம் ../ விடை பெற்ற தருணங்கள் ... நினைவு அருவிகளில் நனைகிறேன் ....

Abdul Gafoor

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் ....
குவைத்தை ஆக்கிரமித்த ஈராக்கின் அக்கிரமத்தை பன்னாடுகள் கண்டனம் தெரிவித்தும் படைகளை விலக்க இயலாது என ஆக்ரோஷமாய் கர்ஜித்த சதாம் உசைனின் பிடிவாதம் எஞ்சிய எங்களை அஞ்சிய சூழலுக்கு தள்ளி மிஞ்சிய நம்பிக்கையை மங்கச் செய்தது ....
குவைத் பொது மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணையும் சாலைகளில் சதாமின் சுவரொட்டிகளை கிழித்த குவைத்திகளையும் ராணுவத் துப்பாக்கிகள் துளைத்த செய்திகள் எமது காதுகளை துளைத்தது ....
மூன்று தடவைகள் சதாம் உசைனைப் போல் வேடமிட்ட மூவர் குவைத் ராணுவ முகாம்களை வட்டமிட்ட செய்திகளும் அதில் ஒருவர் அசல் சதாம் என்கிற தகவலும் அவ்வப்போது வானொலிகள் வாயிலாக எங்களுக்கு கிட்டியது ...

Wednesday, August 17, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நினைவு ...ஐந்தாம் பாகம் .../ ஜோர்டானில் அவதி நினைவுக் காற்றை சுவாசிக்கிறேன் ...


Abdul Gafoor

ஜோர்டானில் அவதி
நினைவுக் காற்றை சுவாசிக்கிறேன் ...
--------------------------

இனியவர்களே 
அஸ்ஸலாமு அலைக்கும் ...
எங்கள் வீட்டு மதிலேறி குதித்த ராணுவ வீரர்கள் இருவரும் என்னை நெருங்கினர் ...
ஈராக்கின் மரபு சுமந்து அரபு மொழியில் என்னிடம் உரத்த குரலில் நீ எந்த நாட்டுக்காரன் என்று கேட்டதும் நான் இந்தியன் என்றேன் ...
உங்கள் வீட்டினுள் குவைத்தியர்களை ஒளித்து வைத்திருக்கிறாயா அவர்களை நாங்கள் சுட வேண்டுமென்று என்னிடம் கேள்விகள் கேட்டு என்னை குடைந்த நிலையில் நானும் உடைந்த அரபியில் இல்லை இங்கே யாருமில்லை என்றேன் ...
உறுதியான தேகம் கொண்ட வீரர்களுக்கு என் பதில் சந்தேகம் எழுப்ப எங்கள் வளாகத்தின் பூட்டப்பட்டிருந்த அரபி வீட்டின் மதில் மீதேறி குதித்து தேடினர் அங்கு யாருமில்லாததால் எங்கள் அறைக்குள் நுழைந்து கட்டில்களுக்கு அடியில் எட்டிப் பார்த்து அங்கும் யாருமில்லை என்பதால் என்னை முறைத்துப் பார்த்து சமையலறைக்குள் நுழைந்து குளிர் சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தனர் ....

ஒரு கிராமவாசியின் கேள்விகளும் நபிபெருமானாரின் பதில்களும்


ஒரு கிராமவாசியின் கேள்விகளும் நபிபெருமானாரின் பதில்களும்

*

நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்காரராகிவிடுவீர்கள்.

*

நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன?


ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

*

Tuesday, August 16, 2016

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவு ...நான்காம் பாகம் .'../ திடுக்கிட வைத்த சம்பவம் நினைவு நாற்காலியில் அமருகிறேன் ...

Abdul Gafoor

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் ...

ஈராக்கின் மற்றுமொரு நட்பு நாடான ஜோர்டானிலிருந்து கனரக வாகனங்களில் பதப்படுத்தி குளிரூட்டப்பட்ட இறைச்சிகளும் கோழிகளும் காய்காற்களும் தரை மார்க்கமாக ஈராக் வழியாக குவைத்தின் பாலைவனப் பகுதியின் கரை இறங்கி விற்பனைக்கு விரிக்கப்பட்டிருக்கும் ....

எனது மாமா AVM சின்னப்பா அவர்களின் நட்பு வட்டத்தில் இருக்கைகளிட்டு அமர்ந்திருக்கும் நண்பர்களோடு நமதூர் பவானி வீட்டு யூசுப் அண்ணனும் இடம் பிடித்திருந்தவர் ....
இவர் வைத்திருந்த சிறிய காரில் இவரோடு நாங்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் சால்மியா என்னும் ஊருக்கு உணவுப் பொருட்கள் வாங்க பயணிப்போம் ...

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவு ..../ ராணுவ ஆக்கிரமிப்பு மூன்றாம் பாகம் ....

Abdul Gafoor
 
இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....

எனது நினைவுச் சக்கரங்கள் சுழல்கிறது ...

குவைத் தேசத்தை தனது மடியினில் அமர்த்தி உச்சி முகர்ந்து முத்தமிடும் நட்பு தேசமான சவுதி அரேபியாவையும் ஆக்கிரமிக்க தமது படைகளுக்கு கனத்த குரலில் சதாம் உசைன் உத்தரவு பிறப்பித்து சவுதி மன்னரின் தூக்கத்தை கலைத்து துக்கத்தை தருகிறார் ....

பஹாஹீல் நகரத்தில் நுழைந்த ராணுவத்தை காண நாங்கள் வசிக்கும் எங்கள் வீட்டிலிருந்து 50 மீட்டர் தூரமிருக்கும் முக்கிய சாலைக்கு சென்றதும் பீரங்கி வண்டிகளில் ராணுவப் படைகள் ஆணவ நடைகள் போட்டு சவுதிக்கு செல்லும் சாலைகளில் அணிவகுக்கும் காட்சிகள் எங்களை பிரமிக்க வைத்தது ....

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டுகள் நிறைவு .... இரண்டாம் பாகம்

Abdul Gafoor


இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

என்னை தீண்டும் நினைவுகளோடு மீண்டும்
உங்களோடு கைகுலுக்கி அமருகிறேன் ....

வைராக்கிய குணமுள்ள ஈராக்கிய அதிபர் சதாம் உசைன் அவர்களின் உருளும் கரு விழிகள் பாய்ச்சும் கம்பீரப் பார்வையால் நாவினில் தவழ்ந்து உதடுகளில் சுருளும் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு ஈராக் ராணுவம் ஆக்ரோஷமாக செயல்படத் துவங்கியது ....

குவைத் மன்னரின் அரண்மனை ... பாராளுமன்றம் .... தபால் துறை .... தகவல் தொடர்பு இலாகா ....தேசிய வங்கிகள் .... தொலைக் காட்சி நிலையம் .... அரசு மருத்துவமனைகள் .... அரசு பள்ளிக்கூடங்கள் .... மத்திய சிறைச்சாலை போன்ற அரசு நிர்வாகங்கள் ஒவ்வொன்றாக முற்றுகையிட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் இயங்க வைத்தது ....

பத்தாண்டுகளுக்கு மேலாக ஈரான் ஈராக் போரில் தொழில் வளங்களையும் பொருளாதரத்தையும் இழந்து தவிக்கும் ஈராக்கில் வறுமையும் பஞ்சமும் ஜமுக்காளங்களை விரிந்து அசையாமல் அமர்ந்து கொண்டது ....

குவைத் மண்ணில் ஈராக் படையெடுப்பு 26 ஆண்டு நிறைவு ....

Abdul Gafoor

  நான் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்திட உங்களோடு கைகுலுக்கி அமருகிறேன் ....

இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ....

இறைவன் பொருத்திய சிறகுகளை நிரந்தரமாய் விரித்து மகிழ்வோடு சிரித்து சோகமாய் அழுது இன்பத்தையும் துன்பத்தையும் சுமந்து சுதந்தரமாய் பறந்து கொண்டிருக்கும் காலமெனும் ராட்சசப் பறவை நான் இதயத்தில் கட்டி வைத்திருக்கும் நினைவு ஊஞ்சலை மெதுவாய் ஆட்டிச் செல்கிறது ....

குவைத் தேசத்தின் இரண்டாவது பெரு நகரமான பஹாஹீல் எனும் வர்த்தக நகரத்தில் ஸெனஹியா என்கிற ஊரில் நானும் நேசத்திற்குரிய எனது தாய் மாமா மர்ஹூம் AVM சின்னப்பா அவர்களும் (குவைத் மின்சாரம் மற்றும் குடிநீர் அரசுத் துறையில் பணிபுரிந்தவர்) மற்றோரும் சுகமாய் வசித்து வருகிறோம் .....

Friday, August 12, 2016

பகுத்தறிவு தீர்ப்பளிக்கிறது

                                                  
நாம் வாழும் இந்த பூமியில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்ந்து மடிந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. இவர்களிடையே நிறத்தால், குணத்தால், அறிவால், மொழியால், உடல் அமைப்பால் இப்படி எத்தனையோ வித்தியாசங்கள் காணப்படுகின்றன. எவ்வளவுதான் வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் மனிதர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்டாலும் இவர்கள் எல்லோருடைய மூலப்பொருளும் ஒன்று தான். அந்த மூலப்பொருளான இந்திரியத்தில் எந்தவித வேறுபாட்டையும் காணமுடியாது. எல்லோருடைய இரத்தமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. மனிதன் என்ற வட்டத்திற்குள் தான் எல்லோரும் இருக்கிறார்கள்.


மனிதன் தோன்றிய வரலாற்றை தலைமுறை தலைமுறையாக ஆராய்ந்து பார்த்தால் கடைசியாக ஒரே ஒரு மனிதனைத்தான் போய் அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த அடிப்படையில் பார்க்கும் போது அகில உலகத்திலுள்ள அத்தனை மனிதர்களும் ஒரே ஒரு தாய் தந்தையிலிருந்து வந்தவர்கள் தான் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் உணர முடியும்.

Thursday, August 4, 2016

சாப்பிட்ட பின்னர் பல்லுக்குள் உணவுப் பொருள் மாட்டிக் கொண்டால் ...

                                                   படஉதவிsource
பல்லுக்கு இடையே உணவுப் பொருள் மாட்டிக் கொண்டால் அதனை எடுக்க பல் குச்சியினை பயன்படுத்தக் கூடாது -- டாக்டர் சிராஜுதீன்
சாப்பிட்ட பின்னர் பல்லுக்குள் உணவுப் பொருள் மாட்டிக் கொண்டால் அதனை எடுக்க பல்குச்சியினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : டாக்டர் சிராஜுதீன்

டாக்டர் சிராஜுதீன், திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது சார்ஜா ரோலா பகுதியில் உள்ள அல் சுரூக் கிளினிக்கில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த கிளினிக் சார்ஜா ரோலாவில் இருந்து துபாய் செல்லும் சாலையில் ஓரியண்ட் டிராவல்ஸ் மேல் முதல் தளத்தில் அமைந்துள்ளது.

இவர் சென்னை பாரத் பல்கலைக்கழகத்தில் பி.டி.எஸ். பட்டத்தை கடந்த 20009-ஆம் ஆண்டு முடித்தார். அதனைத் தொடர்ந்து அவர் சார்ஜாவில் உள்ள மருத்துவ நிலையத்தில் 2013-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

அவரை முதுகுளத்தூர்.காம் இணையத்தள ஆசிரியர் முதுவை ஹிதாயத் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

பல்லில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க அடிக்கடி டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பல்லில் சொத்தை ஏற்படும் போது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனே டாக்டரிடம் சென்று காண்பிக்க வேண்டும். இல்லையெனில் அந்த பிரச்சனை பெரிதாகி பல்லை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக நேரிடும்.

இறைவன் உன்னை பொருத்திக்கொள்ளட்டும் ..

  துபாயில் தரையிரங்கும்போது விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர் காயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

“விமானம் விபத்துகுள்ளாகும் போது பயணிகளை காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்ட இளம் தீயணைப்பு வீரர் தனது உயிரை இழந்துள்ளார். அவரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம்” என துபாய் பிரதமர் முகமது பின் ரஷித் அல் மக்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்பூர்வமாக பதிவிட்டுள்ளார். 

Source

துபாய் விமான விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் மரணம்

 ------------------------------------------------------------------------

 பிறர் உயிர் காக்க
தன்னுயிர் ஈந்த தலைமகனே
பல குடும்பங்கள் தளிர்க்க
தன் குடும்பம் மறந்த குலமகனே

அறியாத உன்னை அறிகிறோம்
யாவரும்
உன் சேவையை பற்றியே பேசுகிறோம்
யாவரும்

விமானம் கொண்டது உயிர் பறிக்கும்
நெருப்பது
உன் மனம் கொண்டது அவ்வுயிர் காக்கும்
நெருப்பது

Sunday, July 31, 2016

திருமண (நிக்காஹ்)வாழ்த்துரை ....

Abdul Gafoor
 
 இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

இன்முக உறவுகளின்
பன்முக சங்கமத்திலும்
திரண்டு பொழிந்த
பேரிறைவனின் பேரருளாலும்
இரண்டு மனங்கள்
சுகமாய் இணைகிற
பாக்கியத்தினை பெற்று
இல்லற வாழ்க்கையில்
ஐக்கியத்தினை நாடினர் ....

இறை மறையாம்
குர்ஆன் எடுத்தியம்பும்
பாடங்களை முறையாக்கி
முகம்மது நபிகள் (ஸல்)
போதித்த அறிவுரைகளை
வாழ்க்கையதில் நிறையாக்கி
சாதித்த மணமக்களாய் ....

Thursday, July 28, 2016

அருள் மழை பொழிவாய் ரஹ்மானே !

Raheemullah Mohamed Vavar

வாழ்வில் எத்தனைதான் கடந்தாலும்
இன்னமும்தான்.....
பயணத்தின் படிப்பினையாய்
பதிந்த காட்சிகளின் போதனையாய்
பட்டென சொல்வதென்றால்
மரணம் மாத்திரமே பிரிவு
துரோகம் மாத்திரமே தீது
தர்மம் மாத்திரமே புண்ணியம்
வணக்கம் மாத்திரமே நிம்மதி !

நறுக்கென்று நான்கை சொன்னாலும்
இன்னமும்தான்.....
வாழ்வினருள் நிறைகளென்று
வாழ்பவரும் மனமுணற
வீட்டின் அறைக்கதவு திறந்து
அசையும் காட்சிகளை
அவர்தம் கண்ணசைவில் காண வைத்தால்
அங்கே இல்லாளே இறைகொடை
நோயில்லாமையே பெருநிறை
எளிமையே நிறைவரம்
இருப்பதில் நிறைதலே இன்பசுகம் !

Thursday, July 21, 2016

இன்னும் இரண்டே நாட்கள்.. விரைந்திடுவீர்....


வீடு வளம் பெற -  நாடு நலம் பெற - சமுதாயம் மேம்பட
      ​                                     ​  விழி!  எழு!  வெற்றி கொள்!

​                            ​UPSC :  IAS / IPS / IFS / IRS / IES
​                            ​TNPSC:  Group:  I, II, IV​   ​​​தேர்வுகளுக்கு ​
  ​                                  ​​​    10 மாத கா​ல​ இலவசப் பயிற்சி!

தகுதியும் திறமையும் வாய்ந்த வசதியற்ற முஸ்லிம் ஆண்-பெண்
பட்டதாரிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் மூலம் தங்கும் வசதி, உணவு மற்றும் பயிற்சிக் கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
அதற்கான தகுதித் தேர்வு நடைபெறும் நாள்:
​                                    ​23-07-2016 சனிக்கிழமை​ ​காலை  10 மணி

தேர்வு நடைபெறும் இடங்கள்:-

Tuesday, July 19, 2016

எங்கெல்லாம் பெண்கள் அநியாயத்திற்கு ஆட்படுகின்றார்களோ .....

 by  Abu Haashima

ஒருமுறை ஒரு போருக்காக அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் வீரர்களை தேர்வு செய்து கொண்டிருந்தார்கள்.
அங்கே ஒரு பெண்மணி வந்து நபிகளாரிடம் சில கேள்விகளைக் கேட்டார் .
" யா ரஸூலுல்லாஹ்... போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்தால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் ?"
" ஷஹீத் என்ற அந்தஸ்தோடு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற சொர்க்கம் கிடைக்கும் " என்றார்கள் நபிகள் .
" அந்தப் போர்களில் கலந்து கொள்ள பெண்களுக்கு அனுமதி உண்டா ?"
" இல்லை "
" அப்படியானால் அந்த அழகிய சொர்க்கத்தை பெறும் பாக்கியம் பெண்களுக்கு இல்லையா ?"
" இல்லையென்று யார் சொன்னது ?"

Monday, July 18, 2016

சூது சூழ் உலகு

உலகில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான செய்திக் கோணங்களை ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. குற்றவாளி முஸ்லிம் எனில் அதற்கான சிறப்பு வாசகங்களை உள்ளடக்கிய அனல் கக்கும் யூகங்கள்; இல்லையெனில் கேழ்வரகில் நெய் வடியும் தகவல்கள். அண்மைக் காலமாக இந்தக் கோணங்களில் மூன்றாவதாக மேலும் ஒன்று இணைந்துள்ளது.
குற்றமிழைத்தவன் யார் என்று தெரியாவிட்டால், அவன் முஸ்லிம்தான் என்று வலிந்து திணிக்கும் நஞ்சு! உலகெங்கும் ஊடகங்களுக்கு இது பொது விதியாகி, அவரவர் நாட்டிற்கும் அரசியலுக்கும் ஏற்ப, ‘சக்கரை கொஞ்சம் தூக்கலா’ , ‘கொஞ்சம் லைட்டா’ என்பதுபோல் அதன் வீரியம் கூடி, குறைந்து தென்படுகிறது.

Tuesday, July 12, 2016

சந்தோக்ஷமாக சுவிக்க இதுவே சிறந்த வழி...

மரணத்தை சந்தோஷமாக எதிர் கொள்வது எப்படி..?  
Saif Saif
-------------------------------

இந்த உலகத்தில் படைத்த ஜீவராசிகளில் மனித இனத்தை இறைவன் மிக மேன்மையாக படைத்திருக்கிறான்...

ஆறறிவு படைத்த மனிதன் தன்னுடைய அறிவை வைத்து இவ்வுலகில்
ஆக்கப் பூர்வமான வேலைகள்,அழிவு வேலைகள் அனைத்தையும் செய்கிறான்..

இறைவன் தந்த அறிவை பயன்படுத்தி நல்ல முறையில் பயன்படு்த்தி சிலர் நல்ல விதமாக வாழ்கிறார்கள்..

சிலர் அதை தவறாக பயன் படுத்தி தன் வாழ்வை வீணடிக்கிறார்கள்..

இறைவன் தந்த இந்த அழகிய உடம்பை தவறான வழிகளில் பயன்படுத்தி வருத்திக் கொள்கிறார்கள்..

Sunday, July 3, 2016

பிள்ளைகளின் பெருநாட்கள் .... J Banu Haroon

சிறுவயதினரின் பெருநாட்கள் பூரிப்பு மிக்கவை ....
வளர்ந்தபின்னரே வருவது வேலைபளு மிக்கவை ....
அவர்களுக்கானதை கொடுத்துவிட்டு பாருங்கள் ...
ஒருகோடி புன்னகைகள் மின்னிக்கொண்டிருக்கும் ...
அலங்கரித்து ஆர்வமாக ஓடியாடி திரிதலெல்லாம் ...
சொற்ப காலங்கள்தான் ...சோதித்துவிடாதீர்கள் ...
பொடிசுகளை அழைத்து விருந்து கொடுங்கள் ...
பொடிசுகளை அழைத்து அன்பளிப்பு கொடுங்கள் ...

Tuesday, June 28, 2016

மனிதம் இன்னும் மரிக்கவில்லைஎன்று !

கடையாலுமூடுக்கு போகும் வழியில் பல ஊர்கள்.
அவையெல்லாம் பாரதிய ஜனதா செல்வாக்கு பெற்ற ஊர்கள். சாலைகளில் நாம் பார்க்கும் பலரும் காவி வேட்டி அணிந்தபடிதான் காட்சி தருவார்கள்.
சாலை இரண்டாக பிரியும் ஒரு இடத்தில் சிலர் ஓரமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள்.... நான் சொன்ன அடையாளங்களோடு.
தயங்கித் தயங்கி அவர்களிடம் கேட்டேன் ...
கடையாலுமூடுக்கு எப்படி போக வேண்டுமென்று .
நான் எதிர்பார்த்ததற்கு மாற்றமாக மிக பவ்யமாக ..

Friday, June 24, 2016

பாவ மன்னிப்பு (வீடியோ உரை)

"பாவ மன்னிப்பு" எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஷரஃபுத்தீன் உமரி.
  "எவர் ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது. இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:

Wednesday, June 22, 2016

உகாண்டாவில் முஸ்லிம்கள்....!

ராஜா வாவுபிள்ளை
ஆதிகாலத்தில் மதங்கள் இல்லாத மனிதர்களாகவே உகாண்டா மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.
அரசனே ஆளுபவனாகவும் ஆண்டவனாகவும் கொண்டாடப் பட்டான். அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கும் அரசனே அதிபதியாகவும் இருந்தான்.
18 ம் நூற்றாண்டின் மத்தியில் அரேபியர்கள் வியாபார நிமித்தம் வந்தபோது இசுலாமிய மார்க்கம் வேர்விடத்துவங்கியது.
ஐரோப்பியர்கள் 19 ம்நூற்றாண்டின் துவக்கத்தில் வரஆரம்பித்தார்கள். அப்போது புகாண்டாவின் அரசனும் கூட இசுலாம் மார்க்கத்தை ஏற்று நடப்பவராகவே இருந்தார்.
வெள்ளையர்கள் வரும்போதே துப்பாக்கியையும் பைபிளையும் கூடவே கொண்டுவந்தனர். அதன் தாக்கமும் ஊடுருவல் யுக்திகளும் முழுப்பரிணாம வளர்ச்சிக்கான ஆவனவும் இப்போதும் நடந்து வருகிறது.
இப்போதைய உகாண்டாவில் மக்கள்தொகையில் தோராயமாக 30% முஸ்லிம்கள் இருக்கிறார்கள். முன்னால் வாழ்நாள் அதிபர் ஈத் அமீன் காலத்தில் ஐக்கிய முஸ்லிம் நாடுகள் சபையில் முழு அங்கத்தினராக சேர்க்கப்பட்டு இன்றும் தொடர்கிறது.

Tuesday, June 21, 2016

இஃதிகாஃப் எனும் இறைதியானம்! (பிறை-17)


மீண்டும் ஒரு ரமளான்: பிறை 17
இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீற முற்படாதீர்கள். (அல்குர்ஆன் 2:187)
இஃதிகாஃப் எனும் பள்ளிவாசலில் தங்கி இருந்து இறைவணக்கத்தில் ஈடுபடுவது நபி (ஸல்) அவர்களின் சிறப்புமிக்க வழிகாட்டலாகும். ரமளான் மாதம் ரமளான் அல்லாத மாதங்களிலும் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம். நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக்காட்டிய இஃதிகாஃப் எனும் இறைவணக்கம் பற்றிய தெளிவான அறிதலோ ஆர்வமோ மக்களிடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு மிகக் குறைந்த முஸ்லிம்களே இவ்வணக்கத்தைக் கடைபிடிக்கின்றனர்.

Thursday, June 16, 2016

உனக்கே புகழ் யாஅல்லாஹ்

உனக்கே புகழ் யாஅல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ் யாரஹ்மானே - என்
மனதில் நிறைந்து வாழ்பவனே !
தொழுது பிராத்தனை செய்தாலும் - ஒர் 
அடியானாய் என்னை மதிப்பவனே !
நோன்பை தந்து எனக்காக - தன்
சுவர்க்கக் கதவை திறப்பவனே !
தராவிஹ் தொழுகை தவத்தாலே -தன்
சுவர்க்க வழியை காட்டுபவனே !
மனமோ பாவத்தை செய்யாமல் - என்
கல்பை காப்பாற்றும் வல்லவனே !

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 30. கை கழுவும் தினம்

கை கழுவுவது குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி அக்டோபர் 15-ந் தேதி 'உலக கை கழுவும் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் காலையில் எழுந்ததும், கையைக் கழுவ வேண்டும் என்பதையே ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய முதல் செயலாக இஸ்லாம் கற்றுத் தருகிறது.
'உங்களில் ஒருவர் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து பாத்திரத்திற்குள் கையை விடுவதற்கு முன்பு தன் இரு கைகளையும் மூன்று முறை நன்றாகக் கழுவிக் கொள்ளட்டும். ஏனெனில் இரவில் அயர்ந்த தூக்கத்தில் நமது கைகள் எந்த நிலையில் இருந்தது என்று நமக்குத் தெரியாது' என்பது நபிகளாரின் கூற்று.
ஒவ்வொரு நாளும் கை கழுவிய பின்னரே அன்றைய வாழ்க்கை நடைமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை 1,400 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் சொல்லித் தந்துள்ளது. இரு கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உலக கை கழுவும் தினம் நமக்கு வலியுறுத்துகிறது.  முகம், பல், காது, கால்கள், மூக்கின் துவாரம் உள்ளிட்ட உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் தூய்மையாக வைத்திருத்தலை 'ஒளு' (அங்கத் தூய்மை) கற்றுத் தருகிறது.

Wednesday, June 15, 2016

யாவருக்கும் இந்த மாதம் ..6 மணி நேர வேலை தான் இங்கே


Iskandar Barak

வெயில் ....
மதியம் 12 மணி கத்தார் டைம் சைட்விசிட் போயிட்டு கொஞ்ச வேலயிருந்தது முடிச்சிட்டு கிரான்மால் போயிட்டு வரும் வழியில் பார்த்தால்....46 சி காட்டுது ...யப்பா கார்ல புல் ஏசியிலயே உள்ள உட்கார முடியல வெளி வெயிலின் தாக்கம் தெரியுது ...பட்
நோன்பு இதனால் எந்த அசைவையும் நமக்கு தரவில்லை தான் .............இருந்தாலும்

என்னவோ தெரியவில்லை...

எனது நண்பர்கள் நல்லவர்கள்.
இது என் கதையல்ல.
யாரையோ சொல்வதற்கு பதில் என்னையே சொல்லி இருக்கிறேன்.
கதையின் கரு...
ஏழைகளை அவமதிக்கக் கூடாது என்பதுதான்.
-------Abu Haashima


என்னவோ தெரியவில்லை...
திடீரென்று ஒரு செலவு வந்து விட்டது.
அவசரமாக பத்தாயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்டது.
அவ்வளவு பணம் புரட்டும் நிலையில் நான் இல்லை.
பணம்தான் என்னிடம் இல்லையே தவிர நிறைய நண்பர்கள் உறவினர்கள் இருந்தார்கள்.
ரொம்ப அன்னியோன்யமாகப் பழகும் சில நண்பர்கள் எப்போதும் என் மனக் கஷ்டங்களை கேட்டு ஆறுதலும் சொல்வார்கள்.
தைரியமான வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையூட்டுவார்கள்.
அவர்களில் சிலர் வசதிமிக்கவர்கள்.
உறவினர்களிடம் கேட்பதைவிட நண்பர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்தேன்.
நிச்சயமாக உதவுவார்கள் என்று நம்பிக்கையோடு சாலமதிடம் கேட்கலாமா என்று யோசித்தேன் .
பத்தாயிரம் கேட்டால் அவன் மனது சங்கடப்படுமோ என நினைத்து
சாலமதிடம் ஐயாயிரமும் இஸ்மாயிலிடம் ஐயாயிரமும் கேட்பது என்று தீர்மானித்தேன்.
வழக்கம்போல் அன்னைக்கு காலையில் வாக்கிங் முடிச்சுட்டு சாயாக்கடை பக்கம் வந்தான் சாலமது.
என்னிடம் எப்போதும்போல் உற்சாகமாக பேசினான். அவன் வீட்டுக்கு கிளம்பும்போது ...

Tuesday, June 14, 2016

*அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்:*


*அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்:*

_சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுஹானல்லாஹில் அளீம்_

பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன். கண்ணியமிக்க
அல்லாஹ்வை துதிக்கின்றேன்.

*_சிறப்பு:மீசான் தராசில்அதிக கனமுள்ளது. நூல்:புகாரி. 66820._*

_2. சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி_

பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன்.

_*சிறப்பு:கடலின் நுரை அளவு பாவங்கள் மன்னிக்கப்படும். நூல்புகாரி: 6405*_

Saturday, June 11, 2016

புனித மாதத்திலுமா..

Malikka Farook

புனித மாதத்திலுமா
புலக்கடையில் புழக்கம்
தீமைகளை தூண்டுவிடும்
வதந்திப்பெட்டியோடு பழக்கம்..

புண்ணாக்குகள் விற்பதற்க்கும்
புதிய யுக்தியாய்
பெண்ணாடைக்குறைப்பு
விளம்பரங்கள்..
ஆகா நிகழ்ச்சிகளைக்கண்டு
அழுது வடியும்
நேரத்தில் தொழுது வணங்குங்கள்
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..

ஆளாளுக்கு சொல்லும்
மார்க்கவுரைகளையும்
மனதை திசை திருப்பயெண்ணுவதெல்லாதினையும்
அமத்திப் போடுங்கள்..

Wednesday, June 8, 2016

மனிதம் மதிக்கத்தக்கவை


Iskandar Barak
இன்று நடந்தது .....மதியம் ஹெட்ஆபீஸ் போகலாமென போகிற வழியில் ஹெட்ஆபீஸ் அருகில் லுஹர் மதியத்தொழுகைக்கு நேரமாகிவிட்டதால் ....அங்கே ஒரு கத்தர்காரர் வீட்டில் வேலை செய்யும் நண்பரோடு தொழுக போனேன் ....தொழுது முடித்து உட்கார்ந்திருக்கும் போது
எங்களுக்கு முன் வரிசையிலியிருந்து தொழுதுவிட்டு வந்த ஒரு கத்தர் அரபியை கண்டதும் இந்த நண்பர் எழுந்து கைகொடுக்க முயற்சித்தபோது அவரோ இவரை வேண்டாம் உட்காரென தோளை பிடித்து உட்காரவைத்து விட்டு இவரிடம் சகஜமாய் கை கொடுத்தும் தெரியாத என்னிடமும் கைகொடுத்து
கைபஹாலுக்
ரமளான் கரீம் குல்லுசனா அன்துல் பில்ஹைர் ..னு
சொல்லிட்டு சந்தோஷமா புன்னகைத்து போனார்

Sunday, June 5, 2016

மகத்தான ரமலான் நோன்புக்காலம் ...

மகத்தான ரமலான் நோன்புக்காலம் ...
J Banu Haroon
================================
தனித்திருக்கும் வேளை ....
பசித்திருக்கும் வேளை ...
விழித்திருக்கும் வேளை ...
---- நோன்பின் காலங்கள் ...
கூட்டமாக பெண்களின் ...
பள்ளித் தொழுகைகள் ...
இளசுகளின் பைக் உறுமல்கள் ...
---- தராவிஹ் இரவுகள் ...

அத்தனை பேருமே மதிக்கும் மாண்பான செயல் நோன்பு.

Iskandar Barak


இன்று ...அரப் நாட்டை பொறுத்தவரை அரபிய மாதமான ஷஃபான் மாத பிறை 29 ம் நாள்
இரவு 30 வது நாளை எதிர்நோக்கும் இரவென்பதால் இந்த இரவுக்குப்பெயர்
யவ்முஷ் ஷக் .....அதாவது
விடியும் நாள் இதே ஷஃபான் மாத 30 ம் நாளா அல்லது அடுத்த மாதமான ரமளான் மாத முதல் நாளா யென்ற சந்தேகமிருப்பதால் இதற்கு சநதேகத்திற்குரிய இரவு சந்தேகத்திறகுரிய நாள் யென அழப்பதுண்டு....காரணம்

அரபி தேதியில் 31 யென்பதே கிடையாது ...29 ம் 30 மாகவே மாதங்கள் முடிவடைவதால்
ஆங்கில தேதியின் கணக்குப்படி வருடத்திற்கு 11 நாட்கள் குறைவாகவே வருகிறது ..............ஆகவே
இன்று இரவு 99 சதவீத நண்பர்களின் எண்ணப்படி ..பிறை பார்க்கப்பட்டு முதல் நோன்பு வைப்பதற்குரிய ரமளான் முதல் நாள் வாய்ப்பே அதிகமென படுகிறது

Saturday, May 28, 2016

இறைவன் ...

J Banu Haroon
...

நியாயமாக கேட்பது எதையும் ...
நிச்சயமாக தருபவன் ...
வார்த்தைக் கொட்டல்களை ..
வாங்கிக் கொள்பவன் ...
எத்தனை திட்டல்களையும் ..
ஏற்றுக் கொள்பவன் ...
கொட்டும் கண்ணீர்த்துளிகளில் ..
கருணை கொள்பவன் ...
நன்றிகளை சார்த்தினால் ..
பெற்றுக் கொள்பவன் ...

Thursday, May 26, 2016

அஸ்ஸாமில் பிஜேபி ஆட்சி அமைய உதவிய மௌலானா பத்ருத்தீன் அஜ்மல்

அஸ்ஸாமில் பிஜேபி ஆட்சி அமைய உதவிய மௌலானா பத்ருத்தீன் அஜ்மல் – தென்றல் கமால்

தொங்கு சட்டசபை அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அஸ்ஸாமில் கருத்துக் கணிப்புகளை புறந்தள்ளி பிஜேபி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.
இதற்கு பல காரணிகள் இருந்தாலும் ஒரு முக்கிய காரணியாக அரசியல் பார்வையாளர்கள் ஊடகங்கள் சொல்வது
மௌலானா பத்ருத்தீன் அஜ்மல்

Monday, May 23, 2016

அறிந்தவரை ....!

ஆதியும் அறிந்தேன்
அந்தமும் அறிவேன்
வாழ்கையை அறிந்தேன்
வணக்கத்தை அறிவேன்
வம்புகள் அறியேன்
வாய்மை அறிவேன் 
வாய்ப்புகள் அறிந்தேன்
வறுமையை ஒழித்தேன்
இருப்பதை அறிந்தேன்

Saturday, May 21, 2016

குழந்தைகளின் பிரார்த்தனை..!!

நிஷா மன்சூர்
பிரார்த்தனை ஆகி என் உதட்டில் வருகிறது
என் ஆர்வம், என் ஏக்கம்.
என் இறைவா! என் வாழ்க்கை
ஒரு மெழுகுவத்தி போல் ஆகட்டும்.
என் மூச்சில் என் தாய்நாடு
பொலிவு பெறட்டும்
பூவைக் கொண்டு ஒரு
பூங்கா பொலிவது போல்.
என் ரட்சகனே! என் வாழ்க்கை
ஒரு விட்டில் பூச்சி போல் ஆகட்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails