Saturday, December 19, 2015

நெய்யாக உருகாதோ நெஞ்சம்...






சிந்தனையில் தேன்சுரக்க
செந்தமிழின் மேலினிக்க
வந்தருளும் நாயகமே,
வழிபார்க்கும் வையகமே!

முன்யாரும் கண்டதுண்டா
முஹம்மதரைப் போன்றவரை...
பின்னேனும் அவர்போலாம்
பேறுடையார் எவருமுண்டா?

ஓரழகு, சீரழகு!
ஒப்பில்லாப் பேரழகு!
யாரழகு முஹம்மதினும்
யாதான போதிலுமே?

சொல்லழகு, செயலழகு,
சோர்வறியாத் திறமழகு
நல்லழகு நாயகம்போல்
நாநிலத்தில் யாரழகு?

கருப்பரிலும் வெள்ளையரோ
அவரைவிடக் கருப்பர்களோ
சிறப்புடையார் ஆவதெலாம்
செயலாலே” என்றீரே...

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
----------------------------------------------------------------------------

இரண்டாவது படம் : நியூயார்க் நிகழ்வு


Yembal Thajammul Mohammad

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails