Monday, December 14, 2015

திருவொற்றியூர் தியாகராயபுரத்து தியாகக் கொழுந்தே!


திருவொற்றியூர்
தியாகராயபுரத்து
தியாகக் கொழுந்தே!

உயிர் காக்கும் பணியில்
உயிர் நீத்த சகோதரனே!

உனது உயிர்த் தியாகம்
உயர்வான தியாகம் !

உள்ளத்தை உலுக்கிவிட்ட
உருக்கமான சோகம்!

ஆயுதம் தாங்கி புரிவதல்ல ஜிஹாத்
மானுடம் காக்க மரணிப்பதே ஜிஹாத்

மீட்புப் பணிக்குச் சென்று
மீளாத் துயிலில் ஆழ்ந்தவனே!

சமுதாயச்சேவைக்கு சென்ற உனை
சாவு அழைத்துக் கொண்டதோ !

மன்னுயிர் காக்க;
இன்னுயிர் காக்க;
தன்னுயிர் ஈந்த
மண்ணுலக மாணிக்கம் நீ!

தீண்டத்தகாதவற்றை எல்லாம்
தீண்டி அப்புறப்படுத்திய உன்னையே
தீண்டிவிட்டது விஷப்பூச்சி !

விஷப்பூச்சிக்குத் தெரியுமா – உன்
வீரியமிக்க களப்பணி ?
விளையாட வேண்டிய வயதில்
களமாடிய உன்னையே
களவாடிவிட்டது அந்த ஜந்து!

தேச நலனுக்காக உயிர்விட்ட
தியாகிகளின் வரிசையில்
தீர்க்கமாய் உன்பெயரும் இடம்பெறும்.!

இம்ரான்..... - இவன்
இதயத்தில் என்றென்றும்
வீற்றிருப்பான்

- அப்துல் கையூம்
அப்துல் கையூம்
--------------------------------------------------------------------------------

இதனையும் சொடுக்கி (கிளிக் செய்து ) படியுங்கள்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails