Friday, November 13, 2015

இணைந்துக்கொள்ளுங்கள்...


அழுது பல நாள் ஆயிற்று;
இறுகிப் போய்விட்டனவோ
என எண்ணுமளவிற்கு
கண்களெல்லாம் வறட்சியாய்;

விழிகளை மெல்லமாய் மூடி
இதயத்தை சுழலவிட்டப்படி..

நான் ஏன் இங்கு இருக்கிறேன்
எதை எதை கடந்துவந்திருக்கிறேன்..

மயிரிழையில் பலமுறை
தப்பித்த நிகழ்வுகளை
அச்சத்துடனும் ஆச்சர்யத்துடனும்
எத்துனை முறை
சொல்லிக்காட்டியிருப்பேன்
உறவுகளிடமும்;நண்பர்களிடமும்;

அருகில் இருக்கும் நண்பர்களெல்லாம்
மதுவில் மயங்கிக்கிடக்கும்போது
நான் மட்டும் எப்படி மூக்கையும்
முகத்தையும் சுழித்துக்கொண்டு நகர்ந்தேன்;

அழகில் கிறங்கடிக்கும் மங்கைகள்
வெகு எளிதாக வாய்ப்பிருக்கும்போது
குமட்டிக் கொண்டு ஏன் ஓடினேன்;

தீய வாய்ப்புகளெல்லாம்
வாயைப் பிளந்து வரவேற்கும்போது..
நான் மட்டும் ஏன் பின்வாங்குகிறேன்;

என்னை காப்பாற்றிக்கொண்டே
வரும் கருணையாளனின் அருளின்
நிழலில் இன்னும் நான்
அரவணைக்கப்பட்டுக்கொண்டே உள்ளேன்;

பிதுங்கிக்கொண்டு;பொத்துக்கொண்டு
வழிந்து ஓடுகிறது - விழிகளையும்
இமையின் ரோமத்தையும் தாண்டி..
கன்னம்;உதடு;கழுத்து என்று எங்கெங்கோ..

இறுதியாக இதுதான்..
நரகத்தின் கனலையும் கங்குகளையும்
அணைக்கும் நன் நீராக!!
Yasar Arafat

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails