Saturday, September 26, 2015

எது சந்தோஷம்..


பாலூட்டினாய் ...
பசி தீர்ந்தது..சந்தோஷம்
வர வில்லையம்மா...

எனக்கு சோறூட்டினாய்
வயிறு நிறைந்தது.சந்தோஷம்
இல்லையம்மா..

ஆடையால் எனை மறைத்தாய்.
அழகு வந்தது.சந்தோஷம்
வர வில்லையம்மா..

நடக்க வண்டி வாங்கி தந்தாய்.
நடை வந்தது..சந்தோஷம்
வரவில்லை அம்மா..

என் அருகில் நீ இருந்தாய்..
இப்போது
சந்தோஷமம்மா..

என் உணர்வோடு
பேசும் உன் பாசம்
சந்தோஷம் அம்மா...

எனை மார்போடு அணைத்து கொஞ்சி தரும் முத்தம்
சந்தோஷம் அம்மா ...

உன் மடி மீது துயிலுறங்கும்
அந்த சொர்க்கம்
சந்தோஷமம்மா..

உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு நிமித்தமும் சந்தோஷமம்மா..

எப்போதும் என் அருகில்
நீ இருந்தால்
வாழ் நாளே சந்தோஷம் அம்மா...
Saif Saif

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails