Wednesday, August 26, 2015

தனிக்குடித்தனம்+பெண்கள்:& கஞ்சி+பெண்கள்.- Jaffarullah Jafar

தனிக்குடித்தனம்+பெண்கள்:

ஒரு வருடம் கழித்து தனிக்குடித்னம் போன மகன் வீட்டிற்கு மறுநாள் சென்ற தாய் அங்கே இருக்கும் சம்மந்திய பாத்து.

ஓ இங்கேயே தான் இருக்கீங்களா.

இல்ல சம்மந்தி இப்பதான் வந்தேன்.

பிரியாணி வாசனையெல்லாம் வருது.

வாங்க மாமி நான் தான் சமக்கிறேன் இருந்து சாப்புட்டு போங்க மாமி.

ஒனக்கு பிரியாணியெல்லாம் சமக்க தெறியுமா.
அது என்ன டிவி பொட்டி மாதிரி இருக்கு.

நான் தான் வாங்கிட்டு வந்தேன் சம்மந்தி.

ஓ...நீங்கதானா டிவிய இப்ப தான் கண்டுபிடிச்சானோ.

ஆமா உம்புருஷன் எங்க?

எந் தம்பி வத்துருந்தான் அவன ஸ்கூல்லவிட கூட்டிட்டு போயிருக்காரு.

அது சரி இப்புடி கூத்தடிக்க தானே தனியா வந்தீங்க நல்லா அடிங்கடியம்மா நான் வாறேன்.
-------------------------------------------
கஞ்சி+பெண்கள்.

தங்கச்சி:ஏன்ணே அம்மாவ முதியோர் இல்லத்துல சேக்க போறியாமே உண்மையா.

அண்ணன்:ஆமா இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியல எப்பப்பாரு மாமியா மருமக சண்ட.

தங்கச்சி:இது உனக்கே அனியாயமா தெறியலையா ஊர் என்ன பேசும்.

அண்ணன்:வேணும்ணா நீ கூட்டிட்டு போய் வெச்சுக்கவே.

தங்கச்சி:அது எப்புடிணே மருமகன் வீட்டுல வந்து இருப்பாங்க அது நல்லாவா இருக்கும்.

அண்ணன்:ஆமா உம்மாமியா எங்க இருக்கு.

தங்கச்சி:அது அவங்களா போயி ஆசிரமத்துல இருக்காங்க அதுக்கு நான் என்ன பண்ண முடியும்.

அண்ணன்:நானாவது அம்மாவ முதியார் இல்லத்துல சேத்து மாதா மாதம் காசு கட்டபோறேன் நீ உன் மாமியாவ அணாதை ஆசிரமத்துலையில சேத்துருக்க.

தங்கச்சி:இதுக்கு மேல உன் இஷ்டம் நான் வாறேன்.
----------------
கடைசி காலத்தில் பெத்வங்களுக்கு பெண்பிள்ளைதான் கஞ்சி ஊத்துமாமே உண்மையா.

                                      Jaffarullah Jafar

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails