Monday, August 31, 2015

நான் அணிவது இறைவனின் நேசத்தை நாடி .

என்னை நோக்கி என்ன நினைக்கின்றாய்
எனது உரிமைகள், எனது சுதந்திரங்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கின்றேன் என்றா!
நான் எனது தலை முடியை மற்றும் உடலை தாவணி மற்றும் இருக்கமான ஆடையால் மறைத்துள்ளேன் அதனால் பாவப்பட்டவள் ஆனவளாகி விட்டேன் என்ற நினைப்போ!
நீ என்னை நினைத்து பாவப்படாதே!
நான் நடக்கும் இந்த பாதை இறைவனின் திட்டமாக,கட்டளையாக உள்ளது!

இவ்விதம் ஆடைகள் அணிவதால் நான் மரியாதையாகப் பார்க்கப் படுகின்றேன்
என்னை யாரும் ஒரு பொருளாகப் பார்ப்பதில்லை
என்னைப் பார்த்து கண்ணீர் வடிக்க வேண்டாம்
உன்னைப் பார்த்துதான் நான் கண்ணீர் வடிக்க வேண்டும்

பெண்ணாகிய நான் கைகள்(கைகளின் மணிக்கட்டு வரை ), முகம், பாதங்கள் நீங்கலாக மற்ற உடற் உறுப்புகள் மற்றோர் முன் மறைக்கப்பட்டதால் நான் பாதுகாப்பாக இருக்கின்றேன்

(இவ்வசனங்களில் (24:31, 33:59) பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆடை ஒழுங்குகள் பற்றி கூறப்படுகிறது.
பெண்கள் தமது கைகள், முகம், பாதங்கள் ஆகியவற்றைத் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். (இது பற்றிய விளக்கத்தை 472 வது குறிப்பில் காணலாம்)

24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails