Monday, April 27, 2015

அருளே ! அல்லாஹ்வின் அருளே.. நபியே ! அண்ணல் நபியே !



அருளே !

அல்லாஹ்வின் அருளே..

நபியே !

அண்ணல் நபியே !

***

தாங்கள் ...

சுடராய் விரியும்

சூரியக் கதிரா

பனியாய் பொழியும்

பவுர்ணமித் துளியா !

***

விடியலுக்கெல்லாம்

விழிகளைக் கொடுக்கும்

ஒளியின் ஒளியா !

***

அகத்தில் ஈமான்

அமுதினை ஊட்டும்

சுவனத்தின் சுனையா !

***

அரசே !

அழகின் அரசே

விளக்கே

எங்கள் நெஞ்சத்தின் விளக்கே

வாழ்த்துக்கள் சொல்வோம் உங்களுக்கே !


"அந்த ஷம்சுன் அந்த பத்ருன்

அந்த நூருன் (f )பவ்க நூரி

அந்த இக்சீருன் வகாலி

அந்த மிஸ்பாஹுஸ் ஸுதூரி "

@ ரசூலுல்லாஹ்வின் மீதான இந்த மொவ்லூது வரிகளுக்கு

எளியோன் நான்
(Abu Haashima )செய்த தமிழாக்கம் இது....
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails