Wednesday, April 15, 2015

.'நீங்களும் உள்ளே போலாம் .தப்பில்லை .வெள்ளை பர்தா போட்ருக்கேளோன்னோ ...அதை மட்டும் எடுத்துட்டேள்ன்னா தாராளமாப் போலாம் ....

அப்போதெல்லாம் ....1988..நானும் ,ராஜமும் மக்ரிபுக்குப் பிறகு வாக்கிங் போவோம் .எப்போதாவது கடைகளில் கொஞ்சம் வாங்கல் ...கொஞ்சம் நடை ...நிறைய கதை ...கொஞ்சம் ஐஸ் க்ரீம் ...

சிதம்பரம் மேலவீத்யில் நடந்து சன்னதிக்குள் புகுந்துவிடுவாள் ராஜம் .கூட்டத்தில் இடிபடாமல் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு ...விடுவிடுவென்று போவது அவளுக்குப்பிடிக்கும் .

கர்ப்பக்கிருகம் தாண்டிப்போகும்போது நான் அவளை நிறுத்துவேன் .

'நா வெயிட் பண்றேன் .சாமி கும்பிட்டு வா !..உள்ளே போய் !...'

'வேண்டாம் ...நீ தனியா நிக்கணும் .வா போலாம் !....'

'நா வேணாலும் வரேண்டி ....

'எனக்காக ?...அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ...

அதற்குள் எங்கள் ஆர்க்யுமெண்டை பார்த்துவிட்டு ஒரு குருக்கள் அவசரமாய் என்னை நோக்கி வந்தார் .

'வாங்கோ வாங்கோ ....நீங்களும் உள்ளே வரலாம் ....

நான் ஆச்சர்யப்பட்டேன் .'நானா ?..நான் முஸ்லிம் .சாமி கும்பிடறது இல்லையே ...

'கும்பிட வேண்டாம் ...அவா கூட வந்து சும்மா பாருங்கோ ...

'இல்லை ......'நான் விழுங்க ..'அதான் சும்மா பாக்கலாம்னு அவரே அனுமதி கொடுத்தாச்சில்லையா ?...சும்மா வந்து ..பார் என்கூட ...'...

நான் மறுக்க ..அவள் என்னை கரம்பற்றி இழுக்க ....

அவர் அடுத்த வார்த்தை சொன்னாரே பார்க்கலாம் .'நீங்களும் உள்ளே போலாம் .தப்பில்லை .வெள்ளை பர்தா போட்ருக்கேளோன்னோ ...அதை மட்டும் எடுத்துட்டேள்ன்னா தாராளமாப் போலாம் ....

'ஏன் ?..அதுக்கும் ..உள்ளே போறதுக்கும் ...என்ன வந்தது ?...ஆம்பிள்ளைங்க சட்டையை கழட்டிட்டு உள்ளே போவாளே ...அந்த மாதிரியா ?..-ராஜம் சினம் காட்டினாள் அவரிடம் .

'...ராஜம் ,'...நான் அவள் கையைப்பிடித்து அழுத்தினேன் .

'..அது ரூல்ஸ் !..'...

'இந்த ரூல்செல்லாம் நமக்கு சரிப்படாது ....நீ வாடி !...டயத்தை வேஸ்ட் பண்ணிண்டு ....

'நா ....வெயிட் பண்றேன் ...நீ உள்ளே போயிட்டு வாடி ...'நான் அவளைப்பிடித்து தள்ளிவிட்டு ...படியில் இறங்கி நின்று அவள் வரும்வரை ....வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் .

அவள் வெளியில் வந்தபின் நெற்றியில் புதிதாய் திருநீறு அணிந்திருந்தாள் .சின்னதாய் சிலுப்பின குங்குமமும் ....

என் கை லக்கேஜ் ...பிடுங்கிக்கொண்டாள் .என்னை எதையும் தூக்க விடமாட்டாள் .'எப்படி சொன்னார் பாத்தியா அந்த ஆள் ...எனக்கு செம காண்டு .உன்னாலே தான் வாயை மூடிண்டு வந்துட்டேன் ....

'சரி ..சரி விடு ...பெரிய விஷயம்மாதிரி ...பீல் பண்றே !....

'இது பெரிய விஷயம் இல்லையா ?...உனக்கு எப்படி மனசு வலிச்சிருக்கும் ?...

எனக்கு மனசு வலித்ததா ...இல்லையே !...இது மதம் சார்ந்த விஷயம் இல்லை .மனம் சார்ந்த விஷயம் .என் தோழிக்கு வலித்தது .நான் சிரித்துக்கொண்டேன் .

J Banu Haroon

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails