Sunday, April 12, 2015

அவர் திருமதி .பாத்திமா முசாபர் ஆகிப்போனார் .அன்பு மட்டும் அப்படியே நிலைத்திருக்கிறது .அவர் இன்னொரு நர்கிஸ் 'மா .


1978-ல் ஒரு பாப் கட்டிங் ....பட்டுப்பாவாடை -யுடன் குட்டி பாத்திமா வடகரை பக்கர் மாமா வீட்டில் எனக்கு அறிமுகமானார் .
மாமா இறந்து ஏழோ ,நாற்பதோ ..பத்திஹா .சமத் மாமா ,நர்கிஸ்'மா கும்பத்தினருடன் கலந்து கொள்ள வந்திருந்தனர் .சிஸ் .அல்வியா தவிர்த்து என்று நினைக்கிறேன் .
நானும் இன்னொரு பெண்ணும் பாத்திமாவுடன் மாடி ஏறினோம் ...காற்றாட ...

'உம் பேரென்னம்மா ?...'என்றேன் .

'அப்பா !..எப்டி சில்லுன்னு காத்து வர்து !..எம்பேரு பாத்திமா !...உங்க பேரு என்ன ?..'
என்றது அந்தச்சின்னப்பெண் .

'எம்பேரு பானு !'...என்றேன் .'
'நா அப்போ உங்களை பானு அக்கான்னு கூப்பிடட்டா ?...'

'கூப்பிடு !...'

'ஆஹ் !...என்ன வாசனை ?..என்னை தூக்கிகாட்டுங்களேன் ...ப்ளீஸ் ..ப்ளீஸ் ..பானு அக்கா !..'
பக்கத்து மனையில் விருந்துக்கான இறைச்சி தாளிப்பு கம கம வாசனையுடன் அரங்கேறிக்கொண்டிருந்தது .

பாத்திமாவை தூக்கிகாட்டினேன் .'சத்தம் போடாமப் பாக்கணும் .நீ சத்தம் போட்டா ஆம்பிள்ளைங்க மேலே பார்ப்பாங்க !..'

'பாத்தா என்ன ?..'

'நாங்க வெட்கப்படுவோம் '...அந்தப்பெண் சொன்னாள்

'இதுக்கெல்லாமா வெட்கப்படுவாங்க ?..'பாத்திமா என்னைப்பார்த்துக் கேட்டது .

எனக்கு சொல்லத் தெரியவில்லை .நான் புன்னகைத்துவிட்டு என் தலையை பின்னுக்கு இழுத்துக்கொண்டேன் .அந்த ஒரு அசைவில் ,'நீங்களும் வெட்கப் படுவீங்கதானே !..'என்று என்னைப்பார்த்துக் கேட்டுவிட்டு ...'உங்களுக்காக நா சத்தம் போடாமப் பாக்கறேன் !..'என்றது .
இழுத்து ஒரு முத்தமிட்டேன் .

அந்த இடத்தைவிட்டு கொஞ்சம் தள்ளிபோய் நின்று கொண்டோம் .'பானு அக்கா !..நீங்க குட்டீல மெக்கா போயிருக்கீங்களா ?..'என்றது .

'புரியல ...என்னது ?..'இருவருக்குமே குட்டிப்பெண் கேட்பது புரியவில்ல.

இடது கைமேல் வலது கையை குவித்து வைத்து ...'நீங்க ...குட்டீல ...மெக்கா ...போயி பாத்து இருக்கீங்களா ....'.

'மக்காவுக்கா ?....இல்லையே !..எங்க பாட்டிதான் போயிட்டு வந்தாங்க .'...என்றேன் ...என்ன இந்தப்பெண் அதுக்குள்ளே ..மெக்கா பத்தியெல்லாம் கேட்குதே !என்று எனக்குள் மகா ஆச்சர்யம் .

'அய்யே !..போனதில்லையா ?குட்டீலெ நா மெக்கா போயிருக்கேன் ..அம்மா ..பா 'க்கூட .நீங்க ஏன் போலை!...'

என் பக்கத்துப் பெண் அதிசயித்தாள் .'கொடுத்து வெச்ச புள்ள !...'

நான் மறுபடியும் முத்தமிட்டேன் .

அன்று அக்கா ! இன்று மச்சியாகிப்போனேன் !...இன்றும் எனக்கு அதே பாத்திமா தான் .

அவர் திருமதி .பாத்திமா முசாபர் ஆகிப்போனார் .அன்பு மட்டும் அப்படியே நிலைத்திருக்கிறது .அவர் இன்னொரு நர்கிஸ் 'மா .
J Banu Haroon

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails