Wednesday, February 25, 2015

பணித்தானே ஏகன் இறையோனே ....!

பணித்தானே ஏகன் இறையோனே ....!
உயிரை தந்து உணர்வை வைத்து
உடலில் உரம் தந்து
உழைத்து வாழ்ந்திட பணித்தானே

அறிவை தந்து ஆராய்ந்து அறியும்
மனோ பக்குவம் தந்து
தீதும் நன்றும் கணித்திட பணித்தானே

உறவை தந்து உரிமை வைத்து
உள்ளத்தில் பண்பை தந்து
அன்பால் அறம்செய்து அகமகிழ பணித்தானே
நிலத்தை தந்து நீரை வைத்து
விதையை முளைக்க செய்து
உழுதுண்டு தன்னிறைவு அடைந்திட பணித்தானே

செல்வம் தந்து வளர்சியை வைத்து
நியாயமாய் வணிகம் செய்து
வட்டியெனும் விஷத்தை விலக்கிட பணித்தானே

இவ்வுலகில் அத்தனையும் தந்து
படைப்பினங்களை விட்டு
படைத்தோனை பணிந்து
மறுமையை வென்றிட பணித்தானே ஏகன் இறையோனே ....!


ஆக்கம் : ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails