Friday, January 9, 2015

கடமையென்ற கரு ஒன்று; கற்றுத்தரும் பாடமுண்டு;/ யாசர் அரபாத்

 
 
கடமையென்ற கரு ஒன்று;
கற்றுத்தரும் பாடமுண்டு;
ஐவேளைப் பிரித்துக் கொண்டு;
அழகாய் நீயும் தொழுவது நன்று!

நெருக்கத்தோடுத்
தோளைக்கொண்டு;
நொறுக்கித் தள்ளு;
தீண்டாமை இன்று!

பயிற்சிப் பெற்ற
இராணுவமும்
மிரட்சிக் கொள்ளும்;
நம் ஒழுங்கைக் கண்டு!

தக்பீர் சொன்ன
குரலைக்கேட்டு;
சப்தம் குலையும் நம்
அமைதிக்கண்டு!

தொழுகை என்ற
கவசம் கொண்டு;
தீமையைக் கொல்வாய்
உடனே இன்று!
தொழுகாத உனக்கு;
தொழுகை வைக்குமுன்னே;
தொழுது விடுவது நன்று;
இல்லை;
நரகம் திண்றுவிடும்
உன்னை மென்று!

கட்டிப்பிடிக்கும்
கஃபனை மறக்காதே;
இறைவனை மறந்துவிட்டு
இறக்காதே!!

இருக்கும் காலம்
இறைவணக்கத்தை
இறுக்கப் பிடி;
இல்லையேல்
இறுதி நேரம்
இருக்காது
இலகுவாய்
இறைவனின்
இறுதிப்பிடி!!
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails