Saturday, January 17, 2015

இளைய தலைமுறையே….!


இதய நெருப்பை
எரியவிட்டு
நிம்மதியுடன்
இருக்க முடியுமா?

தூரத்தை மனக்கண்ணால்
பார்த்துவிட்டு
படுத்துக்கொண்டால்
பயணம் முடியுமா ?
சும்மா இருந்து
சுயநல வட்டத்தில்
குதிரையை ஓட்டினால்
விவேகம் ஆகுமா?

தொட்டுப் பார்த்தாலே
தீயின் சூடு
உணர்வு கிடைக்குமென்றால்
புண்பட்ட பிறகாவது

பண்பட்டு இயன்றதை
திறம்பட செய்து
வளம்பெருக வாழ்ந்திடு
இளைய தலைமுறையே.

 ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails