Monday, January 12, 2015

இருட்டு ... அதுதான் நிஜத்தின் வெளிச்சம் !

இருட்டு ...
அதுதான்
நிஜத்தின் வெளிச்சம் !

இருட்டு...
உலகத்தின்
மாய வண்ணனங்களும்
ஞான எண்ணங்களும்
ஒளிந்து கிடக்கின்ற
அதிசயக் கிணறு !

இருட்டுதான்
வெளிச்சத்தின்
தாய்வீடு !

ஹிராவின்
கர்ப்ப இருட்டில்தான்
இறைவனின் வேதம்
வெளிச்சமாய் பிறந்தது !

இருட்டு இல்லையென்றால்
ஜிப்ரீலின் உருவம்
வெளிச்சப்பட்டிருக்காது !

தவ்ரின் இருட்டு
போர்வைதான்
பெருமான் நபிகளை
போர்த்தி வைத்தது !

அய்யாமுல் ஜாஹிலிய்யா
அகிலத்தை
ஆக்கிரமிப்பு செய்ததால்தான்
நூரே முஹம்மதியா
இறங்கி வந்தது !

இருட்டிலிருந்துதான்
உலகம் தோன்றியது
இருட்டுக்குப் பிறகுதான்
இறுதி நாளும் வருகிறது !

இருட்டு
இறந்து போகும்
ஒரு நாளில்தான்
சொர்க்கமும்
ஜனிக்கப் போகிறது !
 

@ படம் ...
நேற்று நான் எடுத்தது.
இந்த படம் தந்த சிந்தனை
இந்த இருட்டை பற்றிய கவிதை !
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails