Wednesday, December 31, 2014

பெருமானாரின் பேரன்புக்கு உரிய மகளாக இருந்தாலும் வாழ்க்கை என்னவோ வறுமையில்தான் !

எங்கள் கண்மணி நாயகம் நபிகள் ( ஸல் ) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் !
பெருமானாரின் பேரன்புக்கு உரிய மகளாக இருந்தாலும் வாழ்க்கை என்னவோ வறுமையில்தான் !
அன்புக்கணவர் அலீ ( ரலி ) , பிள்ளைகள் ஹசன் ஹுசைனோடு இனிய வாழ்வு வாழ்ந்த பிராட்டிக்கு வீட்டு வேலைகள் செய்ய இயலவில்லை.
காரணம்...
உடலில் வலுவில்லை !

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்....!


உடலுழைப்பு தினமும் வேண்டும்
உழைத்துண்டு வாழ வேண்டும்
பகிர்ந்துண்டு இன்பம்காண வேண்டும்
உறுதியான உடலுரம் வேண்டும்

உண்மையான அன்பு வேண்டும்
தற்பெருமையில்லா எண்ணம் வேண்டும்
சோர்வில்லா செயலாற்றல் வேண்டும்
உரிமையான உறவுகள் வேண்டும்

கூடிவாழும் சமூகம் வேண்டும்
தன்னலமற்ற தலைமை வேண்டும்
உரிமைக்கு குரல்கொடுக்க வேண்டும்
மாற்றங்கள் மலர வேண்டும்

உறுதியான இறைநம்பிக்கை வேண்டும்
இயற்கையான உலகம் வேண்டும்
செயற்கையை மறுக்க வேண்டும்
எல்லோரும் இன்புற்றிருக்க
வேண்டும்
ராஜா வாவுபிள்ளை

குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல அது அறிவியலை மெய்ப்பிக்கும் நூல்..!!



ஒரு முஸ்லிம்,

நோன்பிருப்பதன் அருமையை அறிவியல்ரீதியாக
அறிந்ததால் நோன்பிருப்பதில்லை,

தொழுகையால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய பலன்களுக்காக தொழுவதுமில்லை,

இன்னும் ஹஜ்ஜை,
அறுக்கப்பட்ட பிராணிகளை மட்டுமே உண்பதை,
ஒழு செய்வதை,
அமர்ந்து நீர் அருந்துவதை,
தாடி வைத்துக் கொள்வதை,
மதுவின் பக்கம் நெருங்காமலிருப்பதை,

இன்னும் இன்னும்
எல்லா நற்செயல்களையும்
அவன் செய்வது,
இறைவனுக்கு அடிபணிவதற்காகவும்
இறைத்தூதர் சொல்
அடிபிறழாமல் நடப்பதற்காகவும்தான்

அவற்றை அறிவியல் நிரூபிப்பது கண்டு
மகிழ்கிறானே அன்றி
அறிவியல் அவனுக்கு ஒரு பொருட்டல்ல

மேலும் குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல
அது அறிவியலை மெய்ப்பிக்கும் நூல்..!!

-நிஷா மன்சூர்
*******************************************************

Monday, December 29, 2014

இஸ்லாமிய திருமணம் ஒப்பந்தம் எளிமையானது

மணமகன் மணமகள் -ஒப்புதல்
இரண்டு சாட்சிகள் - அவசியம்
அவ்வளவுதான் திருமணம் முடிந்தது
இதுதான் இஸ்லாமிய திருமணம்
மொழி எந்த மொழியாகவும் இருக்கலாம்
மொழி- மணமகன் மணமகள் ,சாட்சிகள் அறிந்தவையாக இருந்தால்தானே ஒப்புதலும் சாட்சிகளும் கொடுக்க முடியும்.
ஊர் முறைபடி  தற்காலங்களில் மணமகன் மணமகள் ஒப்புதலுக்கு அடையாளமாக அவர்களது கையெழுத்தும் சாட்சிகள் கையெழுத்துகளும் வாங்கிக் கொள்கின்றார்கள்
இது ஒப்பந்த பத்திரமாக பாதுகாக்கப் படும்
நபி (ஸல்)அவர்கள் மணமக்களை வாழ்த்தியது (துவா)
நபி வழியில் திருமண வாழ்த்து.

 ”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.
      பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) பெறச்செய்வானாக. நன்மையான விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.  அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி).  நூல் : அஹ்மத், அபூதாவுத்.

மணமக்களை வாழ்துவது
நபிமார்கள் வாழ்ந்தபடி வாழுங்கள் என்று அரபியில் யாரோ எழுதிவைத்ததை மனனம் செய்து வாழ்த்துவதும் வழக்கமாக இருந்து வருகின்றது .ஆனால் அதனை இப்பொழுது தமிழில் அதனை மொழிபெயர்த்தும் மார்க்க அறிஞர்கள் சொல்லத் தொடக்கி விட்டது பாராட்டுக்குரியது.
மற்றும் பலர் இனிய தமிழில் வாழ்த்துவதும் நடைமுறையில் உள்ளது

எது நபிவழி ..?


போராட்டங்கள் ,தியாகங்கள்,இழப்புகள்,உங்கள் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காத பிற இயக்கங்களால் கைவிடப்படல் இப்படியாக பல தடைகளையும் தாண்டி இன்று ஓங்கிய ஆலமரங்காய் பல இஸ்லாமிய
இயக்கங்கள் நம் சமுதாயத்திற்கு நிழல் தந்து கொண்டிருப்பதாக
நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நடுநிலைப் போக்கை எம்போன்றோர்களுக்கு சில விளக்கங்களைத் தர இவ்வொட்டு மொத்த இயக்கங்களும் கடமைப்பட்டுள்ளன

நடுநிலை என்றவுடன் இங்கொரு கால் அங்கொரு கால் வைத்திருப்பவர்கள்
என்று கருதவேண்டாம் நல்லதை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்கள் . இறைவாக்கினையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸுகளையும் ஆதாரமாகக்கொண்டு
எல்லாவற்றுக்கும் விளக்கம் தரும் நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக களமிறங்கும்போது மட்டும் அதே இறைவேதமும் ஹதீஸுகளும் உங்களுக்கு மட்டும் விதிவிலக்காகிப் போனதா என்று நினைக்கும் அளவிற்கு உங்களின் உயர்ந்த கொள்கையினை விட்டு சற்று சருகுவதாகவே எண்ணத்தோன்றுகிறது.

Sunday, December 28, 2014

இஸ்லாத்தை தழுவ விரும்பிய சர் வின்ஸ்டன் சர்ச்சில்!

(நடுவில் அமர்ந்திருப்பது சர் வின்ஸ்டன் சர்ச்சில், இடது பக்கம் அமர்ந்திருப்பவர் மகன் ரோன்டால்ஃப், வலது பக்கம் அமர்ந்துள்ளவர் சகொதரர் ஜான் சர்ச்சில், மேலே அமர்ந்திருப்பது மருமகன்)

பிரிட்டனை ஆண்ட பிரதமர்களில் வின்ஸ்டன் சர்ச்சில் மிக முக்கிய இடத்தைப் பெற்றவர். இவரது ஆட்சியில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. 1940 லிருந்து 1945 வரையும் பிறகு 1951 முதல் 1955 வரையும் பிரிட்டிஷ் பிரதமராக பதவி வகித்தவர்.

காயிதே மில்லத்தின் அரசியலும், இன்றைய முஸ்லிம் அரசியலும்!

காயிதேமில்லத் மரணித்தபோது புதுக்கல்லூரி வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கே இறுதி மரியாதை செலுத்த வந்த தந்தைப் பெரியார், 'தம்பி போயிட்டீங்களா..' என குலுங்கினார். 'நான் போயி இந்தத் தம்பி வாழ்ந்திருக்கக்கூடாதா' என விசும்பினார். 'இனி இந்தச் சமுதாயத்தை யார் காப்பாற்றுவார்' என குமுறினார். 'இனி முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர் போல ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்' என கருத்துரைத்தார்.

பெரியாரின் வலி மிகுந்த அந்த வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை, இன்றைய முஸ்லிம்களின் அவல நிலையிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

Friday, December 26, 2014

நபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமிக்கின்றேன்: ஊடகவியலாளர் மதன்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலத்தின் சார்பாக டிசம்பர் 25 முதல் 28 வரை சென்னை புரசைவாக்கத்தில் வாழ்வியல் கண்காட்சி நடைபெறுகிறது. அமைதியை நோக்கி எனும் மையக்கருத்தில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமது அவர்களின் தலைமையில் ஊடகவியலாளர் மதன் திறந்து வைத்து உரையாற்றினார்.

அமைதியை நோக்கி எனும் வாழ்வியல் கண்காட்சியை முழுமையாக பார்வையிட்டேன். காட்சி அமைப்புகளும், சிறுவர்களின் விளக்கமும் எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகின்றது. ஏனென்றால் இன்றைய சமுதாயம் வாசிப்பைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். அவர்கள் நிறைய படிக்க வேண்டும்.

Thursday, December 25, 2014

ஒரு சொல்.- நிஷா மன்சூர்


ஒருசொல் உருவாக்கும் விளைவுகள் பாரதூரமனவை
உதாரணமாக மதுபோதையிலிருக்கும் ஒருவன் நம்மீது மோதிவிடுகிறான்,மோதியது மட்டுமல்லாமல்
"ஏய்,பாத்து வாய்யா....ங்கொ....."
என்று கடுமையாக வைதுவிடுகிறான்.
நம் மனோநிலை எப்படி இருக்கும்...??
ராங்கா வந்ததுமில்லாம எம்மேல மோதிட்டு என்னையே பாத்துவான்னு சொல்றியா...அதுவும் தாய் தொடர்பான அசிங்கமான வசவு வார்த்தையோட.
நம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள் வரை ரெளத்ரம் தாண்டவமாடுகிறது,நம் சிந்தனை உணர்வு எல்லாம் கோபத்தின்
அதீத உச்சத்தினால் தடுமாறிவிடுகிறது,
அவனை அடிக்கப் பாய்கிறோம்,
அவனை கடுமையாக தண்டிக்கத் துடிக்கிறோம்,
நம் அறிவுகூட திகைத்து நிற்க..உணர்ச்சி வேகத்தில் உடல் நடுங்க
மிகுந்த வெறியோடு அவனை அணுகுகிறோம்.

Tuesday, December 23, 2014

ஏகனே இறையோனே....! - ராஜா வாவுபிள்ளை

ஏகனே இறையோனே....!

தன்னிகரில்லா தனித்தோனின் காவலில் இருந்தே
அவனருள் வேண்டியே நிதமும் - தவறாது
போற்றி ஐவேளையும் வணங்கியே வாழ்ந்திட
பணித்தோனே ஏகனே இறையோனே!!

உண்மையாய் உணர்ந்து உள்ளத்தில் நிறுத்தி
அளவற்ற அருளாளனின் அனுக்கிரகம் பெற்றிடவே
அனுதினமும் அக்கறையாய் அனுஷ்டிக்கும் பழக்கத்தை - தவறாது
தந்திடுவாய் ஏகனே இறையோனே!!

பேறும் பிறப்பும் இறப்பும் இல்லாத
அகிலத்தை ஆளுகின்ற நிகரற்ற அன்புடையோன்
உன்னிடத்தே உளமார வேண்டுகின்றேன் - தவறாது
தருவாயே ஏகனே இறையோனே!!

Monday, December 15, 2014

பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கிறேன் அவ்வப்போது



பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கிறேன் அவ்வப்போது

அங்கு....

ஆசைகள் இல்லை
திருப்தி உண்டு

தேவைகள் எதுவும் இல்லை
அனைத்தும் அடங்கி இருக்கும்

மொழிகள் இல்லை
அர்த்ததங்கள் ஆயிரம் உண்டு

ஆரவாரம் எதுவும் இல்லை
நிசப்தம் நிறைந்து இருக்கும்

கவலைகள் எதுவும் இல்லை
நிம்மதி நிறைந்திருக்கும்

சிறகுகள் இல்லாமலே
மனம் சிறகடித்து பரந்திருக்கும்

தொடக்கமும் முடிவும்
திறந்தே இருக்கும்

ராஜா வாவுபிள்ளை

"இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்"


அஸ்ஸலாமு அலைக்கும்,

"இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்" என்ற தலைப்பிலான கட்டுரையின் முதல் பகுதி சகோக்களின் உதவியோடு இணைய கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் பதிவேற்றப்பட்டுள்ளது. விக்கியில் பங்களிக்க அதன் நிர்வாகம் ஊக்கப்படுத்தி வரும் நிலையில், நம் பக்கத்திலான சிறு பங்களிப்பே இக்கட்டுரை. பார்க்க https://ta.wikipedia.org/s/46rl

இதற்கு முன்பு, 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்ற பதம் குறித்த ஆய்வுக்கட்டுரை பதிவேற்றப்பட்டுள்ளது. அதனை படிக்க https://ta.wikipedia.org/s/2pcz


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

மறக்கக் கூடாத நினைவுகள் ...- அபூ ஹாஷிமா வாவர்

வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதியை 1992 டிசம்பர் 6ம் நாள் இடித்தார்கள்.
அப்போதே சங் பரிவாரக் கும்பல்...." இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்து பள்ளியும் தர்காவும் கட்டி இருக்கிறார்கள். அவற்றையும் இடித்து கோயில் கட்டுவோம் " என்று சொன்னார்கள்.

இப்போது தாஜ்மகாலை கோயில் என்று சொல்ல அரம்பித்திருக்கிறார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது முஸ்லிம் அறிஞர்கள்
பத்திரிகையாளர்கள்
மாற்று மத சமூக ஆர்வலர்கள்
ஒரு விஷயம் குறித்து வெகுவாக ஆதங்கப்பட்டார்கள். அது...

முஸ்லிம்களிடமும் அவர்களின் ஜமாத்துகளிடமும் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன.
ஆனால் அவற்றை உரியமுறையில் ஆவணப்படுத்த் தவறியதால் அந்த சொத்துக்களை யார்யாரெல்லாமோ அனுபவிக்கிறார்கள்.
வக்ப் வாரியமும் அவற்றை சரியான முறையில் பாதுகாக்கவில்லை என்று சொன்னார்கள்.

இந்திய முஸ்லிம்களின் வரலாறையோ தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகளையோ இன்னும் முழுமையாக யாரும் ஆவணப்படுத்தவில்லை என்ற குறையும் இருந்தது.

அப்போதுதான் தமிழ் முஸ்லிம்களின் அரலாறுகளை ஆய்ந்து பார்க்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
ரிபாயி சாஹிப் அவர்கள்
எஸ்.எ.கமால் அவர்கள்
எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் அவர்கள் போன்ற ஒரு சிலரே கொஞ்சம் வரலாறுகளை செதுக்கிவைத்துவிட்டு சென்றிருந்தார்கள்.

Saturday, December 13, 2014

எது வளர்ச்சி ... !


பாலினத்தின் தன்மைக்கு
உகந்த பொறுப்புகளில்

சீர்பெற்று வலிமைபெற்று
வளமாவதே பரிபூரண வளர்ச்சி ... !

பெண் பாலினம் சார்ந்த
பொறுப்புகள் ஏராளம்,

ஆண் பாலினம் சார்ந்த
பொறுப்புகள் ஏராளம்,

ஒன்றை ஒன்று மீறுவதல்ல வளர்ச்சி
ஒன்றை ஒன்று வலுப்படுத்துவதே வளர்ச்சி

Thursday, December 11, 2014

யாஅல்லாஹ்....! நல்வழி காட்டிடுவாயே யாஅல்லாஹ் - ராஜா வாவுபிள்ளை



பழிபாவம் அறியா
பவித்திர பாலகனாய்
பிறப்பித்து வாழ்ந்திடவே
வழி செய்தாய் யா அல்லாஹ்

வளர்ந்து ஆளாகி
பாவங்கள் பலசெய்து
சுமைகளாய் தோளில்
ஏற்றியதை இறக்கிடுவாய் யாஅல்லாஹ்

பழிக்கு அஞ்சாத
பாவிகள் மத்தியில்
உந்தன் பாதம் பார்த்து
நடந்திட அருள்வாயே யாஅல்லாஹ்

புண்ணியங்கள் இருக்க
பாவத்தை கையேந்தாமல்
புனிதமாய் வாழ்ந்திடவே
நல்வழி காட்டிடுவாயே யாஅல்லாஹ்

உனது கட்டளைளை
சிரமேற் கொண்டு
சிரத்தையாய் செய்திடவே சிந்தையை செப்பனிட்டு தருவாயே யாஅல்லாஹ்

வாழ்வு தந்தாய்
வாழும்கலை சொல்லித் தந்தாய்
நல்நெறி வழுவா
நடப்பினை தருவாயே யாஅல்லாஹ்

மரணத்தை எழுதிவிட்டாய்
எழுதியதை எதிர்கொண்டு
எம்பெருமான் வழிசென்று
உன்னடி சேர்ந்திடவே ஏகனே கருணை கட்டிடுவாயே யாஅல்லாஹ்

Wednesday, December 10, 2014

காதெலென்பது யாதெனில்…- யாசர் அரபாத்

என் பக்கம்'s photo.
சண்டையெனும் போது
மல்லுக்கு நிற்பாய்;
சமாதானத்திற்கு நீயேதான்
முன்னுக்கு நிற்பாய்;

கோபமாக இருந்தாலும்
தோசை சுடுவாய்;
இன்னொன்று வேண்டுமாயென
பேச்சைத் துவங்குவாய்;

பொறையேறும் போது
தண்ணீயோடு ஓடி வருவாய்;
கோபத்தோடு தலையில் நாலுபோட்டு
நானிருக்கும்போது எவர்
நினைக்கிறாரென வம்பிழுப்பாய்;

உண்மையைச் சொன்னா கோபம்
வருதாயென குத்திகாட்டுவாய்;
பதிலுக்கு பதில் பேசினால்
நீங்க மட்டுந்தான் சரி..
போதுமாயென வாயடைப்பாய்;

புரியாத காதலில் வகுத்தெடுப்பாய்;
புன்னகையால் அன்பை பெருக்கெடுப்பாய்;
புண்பட்டத் தருணத்தைக் கழித்தெடுப்பாய்;
புத்தி வேண்டுமென நக்கலோடு கூட்டி முடிப்பாய்!!

Yasar Arafat

விமர்சனமும் நட்பும்

விமர்சனங்கள் இனியவைகளாக இல்லையென்றாலும், விமர்சனங்களே பிழைகளறியும் அளவுகோல், விமர்சனங்களே பிழைகலர கருவி, விமர்சனங்களே நம்மை தாக்கும், விமர்சனங்களே நம்மை பக்குவபடுத்தும், விமர்சனத்திற்கு பயந்தவர்கள் வளர்வதற்கு வாய்ப்பில்லை, விமர்சனவளையம் நுழையதோர் வளர்ந்ததாக பொருளில்லை.

ts not necessary to answer all the question that has been asked to us... Most of the time silent is the salient answer even if they don't understand..
i stopped looking at others mistake when i begun to notice mine...

Rafeequl Islam T


இருள் சேர் நேரங்கள்
தன் நிழலையும் கொல்லும்
முற்றிலும் இருண்டாலும்
வாழ்வில் பொருள் சேர்க்க
உடன் நட்பு நில்லும்..
நன்றி : http://rafeeqspoem.blogspot.in

Tuesday, December 9, 2014

குர்ஆன் ஓதப்படுகிறது. அதனைச் செவியுறும் நீங்கள் யாரை நினைவு கூர்வீர்கள்?”


குர்ஆன் ஓதப்படுகிறது. அதனைச் செவியுறும் நீங்கள் யாரை நினைவு கூர்வீர்கள்?” என்று கேட்டார் சூஃபி.

இதற்கென்ன கேள்வி? என்பது போல் எண்ணினேன். ”அல்லாஹ்வைத்தான் நினைவு கூர்வோம்” என்று எங்களில் சிலர் பதில் சொன்னோம். மௌனமாக இருந்தவர்களின் பதிலும் அதுதான். அவர்கள் ஆமோதித்துத் தலையாட்டினார்கள்.

“அதாவது, குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வேதம். அவனின் பேச்சு – கலாம். எனவே அதனைச் செவியுறும்போது அவனின் நினைவு வருகிறது. சரி. மற்ற ஒலிகளில் ஓசைகளில் அவனை நீங்கள் நினைவு கூர்வதில்லை அல்லவா? ஆனால், ஒலிகளுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பதே அவனின் சிஃபத்தெ கலாம் என்னும் தெய்விகப் பண்புதான் அல்லவா? ஒலிகளுக்குள் அவனின் குரலைக் கேட்க வேண்டும் எனில் வேறு இரு செவிகள் வேண்டும்.

Monday, December 8, 2014

ஒரு முறையேனும்.. ! -அதிரை மெய்சா

[ ஒரு முறையேனும்.. அதிரை மெய்சாவின் கவிதை  லண்டன் வானொலியில் வாசகரின் பாராட்டை பெற்ற கவிதை ! ]

ஒருமுறையேனும்
திருமுகம் பார்த்து
திருமணம் செய்தல்
உறவுக்கு நலமே

பலமுறை பார்த்தும்
ஒருமுறையேனும்
பாராது போனால்
நட்புக்குக் கேடே

சில முறையேனும்
உதவிகள் செய்தால்
சினம் கொண்ட பகையும்
சேர்ந்திடும் இனிதே

Sunday, December 7, 2014

தேன் இனிக்க காரணம் என்ன தெரியுமா?

மெய்சிலிர்க்க வைக்கும்
அர்ப்புதக்காரணம்..?
*********************************************

தேனிக்கும் நபிகளாருக்கும்
இடையேயான அந்த அற்புதமான
நிகழ்வு
நபி (ஸல்); தேனியே! நீ
எப்படி தேனை உற்பத்தி செய்கிறாய்..?
தேனீ ; நாங்கள்
பூஞ்சோலைகளுக்கு
சென்று அங்குள்ள மலர்களின்
மகரந்தத்துகள்களையும்,
அமுதினையும் எங்கள் வாய்களால்
உறிஞ்சி சேகரித்து வைத்துக்கொள்வோம
்.
சேகரிக்கப்பட்டதை எங்கள்
கூட்டிலே உமிழ்ந்து(துப்பி)
விடுவோம்.
நபி (ஸல்) ; சரி. பூக்கள்
பலவகையுண்டு. சில பூக்களின்
மகரந்தம் இனிக்கும். இன்னும் சில
பூக்களின் மகரந்தம் கசக்கும்.
இன்னும் சில புளிக்கும்.
ஆனால் எல்லாவற்றையும்
கலந்து சாப்பிட்ட ஓர்
தேனி அதை எப்படி மிகுந்த
சுவையானதாகவும்,
அமுதமாகவும் மாற்றுகிறது........?
தேனீ சொன்னதாம்............,,, ?
தேனீ ; நபியே தாங்கள்
சொல்வது சரிதான்.
பல இனிப்பு, கசப்பு,
புளிப்பு போன்வற்றை சாப்பிட்டுவரும்
எங்களுக்கு அல்லாஹ் தங்களின்
மீது ஸலவாத் ஓத கற்றுக்கொடுத்தான்.
எங்கள் கூட்டை அடையும்
வரை விடாது தங்கள் மீது ஸலவாத்
ஓதிக்கொண்டே வருவோம்.
கூட்டை அடைந்ததும் நாங்கள்
சேகரித்தவைகளை உமிழும்போது,
ஸலவாத்தின் பரக்கத்தினால்
அது சுவைமிகு அமுதமாய்
மாறிவிடுகிறது.
கூறுங்கள் ஸலவாத்தை:
ﺍﻟﻠﻬﻢ ﺻﻠﻲ ﻋﻠﻲ
ﻣﺤﻤﺪ ﻭﻋﻠﻲ ﺍﺑﻮﻳﻪ ﻭﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺑﺎﺭﻙ ﻭﺳﻠﻢ
நூல்; மஸ்னவி ஷரீஃப



Friday, December 5, 2014

ஆயத்துல் குர்ஸி - அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை.

ஆயத்துல் குர்ஸியின் தமிழாக்கம் :

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை.

அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;,

அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா,

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன,

அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?

(படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;.

அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது.

அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது.

அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை. (அறிவிப்பவர் : அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு. நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா 9585)

Ayatul kursi - ஆயத்துல் குர்ஸி -Sheiklh Sa'ad Al Ghamdi 



Monday, December 1, 2014

இளமையை சாகடிக்கும் ரியால்களும்,தீனார்களும்!

  
 (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

இளமை இருபதில் பாலைதேசம் நோக்கிய பயணங்கள் பல எதிர்பார்ப்புகளோடு?

வருடங்கள் பல உருண்டோடியும் வறுமை நீங்கா குடும்பங்கள் அதிகமுண்டு.

வெளிநாட்டு மாப்பிள்ளை என்னும் மோகத்தில் பெண் கொடுத்தவர் பலர்.

கொடுப்பது ஆயிரமென்றாலும் அரபு நாட்டு பணமென்னும் வரட்டு கவுரவம் பார்ப்பவர் சிலர்.

அதனால் பலரின் இளமை வாழ்க்கை அரபு மண்ணிற்குள் புதைக்கப்பட்டு விட்டன.

LinkWithin

Related Posts with Thumbnails