Thursday, December 11, 2014

யாஅல்லாஹ்....! நல்வழி காட்டிடுவாயே யாஅல்லாஹ் - ராஜா வாவுபிள்ளை



பழிபாவம் அறியா
பவித்திர பாலகனாய்
பிறப்பித்து வாழ்ந்திடவே
வழி செய்தாய் யா அல்லாஹ்

வளர்ந்து ஆளாகி
பாவங்கள் பலசெய்து
சுமைகளாய் தோளில்
ஏற்றியதை இறக்கிடுவாய் யாஅல்லாஹ்

பழிக்கு அஞ்சாத
பாவிகள் மத்தியில்
உந்தன் பாதம் பார்த்து
நடந்திட அருள்வாயே யாஅல்லாஹ்

புண்ணியங்கள் இருக்க
பாவத்தை கையேந்தாமல்
புனிதமாய் வாழ்ந்திடவே
நல்வழி காட்டிடுவாயே யாஅல்லாஹ்

உனது கட்டளைளை
சிரமேற் கொண்டு
சிரத்தையாய் செய்திடவே சிந்தையை செப்பனிட்டு தருவாயே யாஅல்லாஹ்

வாழ்வு தந்தாய்
வாழும்கலை சொல்லித் தந்தாய்
நல்நெறி வழுவா
நடப்பினை தருவாயே யாஅல்லாஹ்

மரணத்தை எழுதிவிட்டாய்
எழுதியதை எதிர்கொண்டு
எம்பெருமான் வழிசென்று
உன்னடி சேர்ந்திடவே ஏகனே கருணை கட்டிடுவாயே யாஅல்லாஹ்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails