Wednesday, December 31, 2014

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்....!


உடலுழைப்பு தினமும் வேண்டும்
உழைத்துண்டு வாழ வேண்டும்
பகிர்ந்துண்டு இன்பம்காண வேண்டும்
உறுதியான உடலுரம் வேண்டும்

உண்மையான அன்பு வேண்டும்
தற்பெருமையில்லா எண்ணம் வேண்டும்
சோர்வில்லா செயலாற்றல் வேண்டும்
உரிமையான உறவுகள் வேண்டும்

கூடிவாழும் சமூகம் வேண்டும்
தன்னலமற்ற தலைமை வேண்டும்
உரிமைக்கு குரல்கொடுக்க வேண்டும்
மாற்றங்கள் மலர வேண்டும்

உறுதியான இறைநம்பிக்கை வேண்டும்
இயற்கையான உலகம் வேண்டும்
செயற்கையை மறுக்க வேண்டும்
எல்லோரும் இன்புற்றிருக்க
வேண்டும்
ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails