Tuesday, September 23, 2014

உன்னை நம்பினோர் நெஞ்சுக்கு நலம் கொடு !

இறைவா...
நீ
ஆற்றல்களின் அரசன் !

சேயை
சுமக்க வைத்து
பெண்ணை
தாயாக்கித் தருபவன் !

விதையை புதைக்க வைத்து
மரத்தில்
கனியைத் தருபவன் !
காயத்தைப் படைத்து
அதில்
காயத்தை வைப்பவன் !

நஞ்சுக்குள்ளும்
மருந்தை வைப்பவன் !

கண்ணுக்குள்ளே
ஈரம் வைத்து
சுரக்க வைப்பவன் !
நெஞ்சுக்குள்ளே
பாசம் வைத்து
இரங்க வைப்பவன் !

இரந்தும்
விழி சுரந்தும்
உன்னிடம்
இறைஞ்சுகிறேன்
யா அல்லாஹ் ....
உன்னை நம்பினோர்
நெஞ்சுக்கு
நலம் கொடு !
அவரைத் தீண்டிய
நோய்க்கு
விடை கொடு !
உன்னைத் தொழுதோர்க்கு
நீயே
சுகம் கொடு !

அருளாளா ...
என் வேண்டுதலுக்கு
அருள் கொடு
அருளே கொடு !

ஆமீன் ! 
******************
சவூதி தேசிய தினத்தை முன்னிட்டு
சவூதி ரியாத் பள்ளிக்கூட விழாவில்
என் பேரன் ரஸீன்
சவூதி உடை அணிந்து
கலந்து கொண்ட காட்சி !

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails