Sunday, September 21, 2014

காதில்‬ விழுந்த உரையாடல்

கண்ணு,நல்லாருக்கயாடா ராசா

அம்மா,நல்லா இருக்கம்மா.நீ எப்டிம்மா இருக்க..

சாப்புட்டயா கண்ணு

சாப்புட்டம்மா,நீ சாப்புட்டயாம்மா உடம்பெல்லாம் நல்லா இருக்காம்மா

இருக்குடா,நீ நேரங்காலத்துல நல்ல ஓட்டல்கடையா பாத்துச் சாப்புடு கண்ணு.

ஒடம்பக் கெடுத்துக்காதப்பா

சரிம்மா,சரிம்மா

வேலையா இருக்கயாடா,பேசவே மாட்டேங்கறயே..

ஆமாம்மா,ஒரே வேல பிசிம்மா அதான் பேசவே நேரமில்லம்மா

ஒன்ற பொண்டாட்டி புள்ளைங்க கிட்டயாவது பேசறயாடா....??

அது பேசிட்டுத்தாம்மா இருக்கேன்,இல்லேன்னா விடுவாங்களாம்மா உன் மருமகளும் பேரம்பேத்திகளும்...

நாங்களும் ஒன்ன அப்புடித்தாம்ப்பா வளத்தோம்,பொழுதன்னிக்கும் ஒன்னப்பத்தித்தான் பேசிட்டும் நெனச்சுட்டும் ஒருக்கோம்.
நல்லா இருந்தாப் போதும்டா கண்ணு,
நேரங்கெடச்சா ஒரு பயணம் இந்தக்கெழவிய வந்து பாத்துட்டுப்போடா ராசா...வைக்கட்டுமா...!!

#‎காதில்‬ ‬ விழுந்த உரையாடல்
நிஷா மன்சூர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails