Thursday, July 3, 2014

உதவி செய்வார் யாருமுள்ளார்களா? என்று தேடி வருகிறேன்...

மேலப்பாளையம் ஊரைச்சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட, பல பிள்ளைகள் இந்த ஆண்டு ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் பொறியியல் முதலான படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்து வருகிறார்கள்...

என்னைத்தேடி வந்த பிள்ளைகளில் பெரும்பாலோருக்கு அவர்கள் கேட்ட பள்ளி,கல்லூரிகளில் இடம் கிடைக்க என்னால் ஆன முயற்சிகள் செய்து வந்துள்ளேன்.

எல்லாம் வல்ல இறைவன் என்னை அதற்கு கருவியாக்கி வைத்துள்ளதாகவே எண்ணுகிறேன்..
.
இந்த ஆண்டு நிறைய பிள்ளைகள் மேலப்பாளையம் தாண்டி வெளி ஊர்களில் இருந்தெல்லாம் படிப்புக்கு நிதி கேட்கிறார்கள்...

நான் எனது நண்பர்கள் அன்பர்கள் உள்ளிட்ட பலரிடம் நேரில் போனில் சொல்லி உதவி வாங்கிக் கொடுக்கிறேன்.

பேட்டை ஊரைச்சேர்ந்த ஒரு சகோதரி நல்ல மதிப்பெண்கள் பெற்று வருபவர் தமது மூன்றாம் ஆண்டு கல்லூரிப்படிப்புக்கு பணம் கேட்டு வந்தார்...

அப்புறம் மேலப்பாளையம் இளைஞர் ஒருவர் பாலிடெக்னிக் சிவில் படிப்பில் தொண்ணூறு சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் கவுன்சிலிங் மூலம் இடம் கிடைத்து, பணம் கட்ட முடியாமல் தவித்து வருகிறார்.
..
இந்த இருவருக்கும் உதவி செய்வார் யாருமுள்ளார்களா? என்று தேடி வருகிறேன்...

உதவி செய்வோர் நேராகவே அந்த இருவருக்கும் செய்யலாம்
இன்ஷா அல்லாஹ் உதவி கிடைக்கும் என நம்புகிறேன்...
பார்ப்போம்..

எல்லாம் வல்ல அல்லாஹ் யாரையாவது அனுப்புவான் என்று சொல்லிவிட்டேன்..

(இதற்கப்புறம் வழக்கம் போல நானும் பாலிடெக்னிக் மாணவர் ஒருவருக்கு பணம் கட்ட வேண்டும்...
அப்புறம் கிட்னியில் கல்லடைப்பு கொண்ட சகோதர சமுதாய,தாய் தந்தை இல்லாத மாணவர், ஒருவருக்கு ஆப்பரேசன் செய்ய பணம் கட்ட வேண்டியதுள்ளது....)
 
                                    Lks Meeran Mohideen

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails