Friday, July 11, 2014

யா அல்லாஹ் ...!


கருணை உள்ளமாய் என்னை படைத்தாய்
யா அல்லாஹ்
நன்றி செலுத்திடல் வேண்டும்
என் மனமாற உன்னை நினைத்து தொழுது

பிறப்பிலே தந்திட்டாய் முஸ்லிம் நாமம்
மார்க்கத்திலோ பற்றுள்ள மனசு

அருள் மறை திரு மறையில் உலகின் அத்தாட்(ச்)சி
தஜ்விதாய் ஓதிட அவை மனதில்
நிச்சயம் கிடைக்கும் பயன் (பலன் )
உலகம் உள்ளவரையில்

உள்ளத்தில் வஞ்சகமில்லா அன்பு
ரத்த நாளங்களிலே பாசத் துடிப்பு
மெல்லிய் இதயமென என் உள்ளத்து உணர்வு
குறை யேது மின்றியே பொழியுது
நபி வழியே சுவாசிக்கும் மூச்சு

கருணை உள்ளமாய் என்னை படைத்தாய்
யா அல்லாஹ்....!
நன்றி செலுத்திடல் வேண்டும்
என் மனமாற உன்னை நினைத்து


கலைமகள் ஹிதாயா ரிஸ்வி Kalaimahel Hidaya Risvi

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails