Sunday, June 29, 2014

தேவையா இந்த கேள்வி !

தேவையா இந்த கேள்வி !

நீங்க நோன்பு வைத்திருக்கீங்களா !
ஏன் இதனை இப்பொழுது கேட்குறீங்க

நோன்பு காலமாச்சே அதனால் கேட்டேன்
கேட்பதனால் உங்களுக்கு நன்மை வரப்போகுதா !
சும்மா கேட்டேன்.வருத்தப் படாதீங்க

என்னைப் பார்த்தா அப்படி கேட்கும் அளவுக்கு அவசியமென்ன?

உங்களைப் பார்த்தா நோம்பு வைத்திருப்பவர் போல் இருக்கு.
அதோட போக வேண்டியது தானே .
தேவை இல்லாமல் என்னை ஒரு பொய்யை சொல்லும் அளவுக்கு பாவாமான ஒரு பொய் பேச வைப்பது ஏன் ?
நோன்பு வைப்பது எனக்கும் ஆண்டவனுக்கும் உள்ளது .நோன்பு சில காரணங்களால் நான் வைக்காமல் இருக்கலாம் ஆனால் நோன்பு காலத்திற்கு மரியாதை கொடுத்து வருகின்றேன்.
மற்றவர் அறிய நோன்பு வைக்காதவனாக காட்டிக் கொண்டு ,பொய்யும் பேசி பொய்யையும் சுமந்துக் கொண்டு திரிய நான் விரும்பவில்லை .


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails