Thursday, May 15, 2014

நீ கொடுப்பது யாருக்கென்றாலும் நாட்டுக்கே அதனால் நலம் கொடு !

இறைவா...
தலைஎழுத்தை
எழுதக் கூடியவன்
நீ !
எழுதிய எழுத்தை
உன்
அடியானின்
பிரார்த்தனையால்
மாற்றி எழுதும்
வல்லமை உள்ளோனும்
நீ !

எங்கள்
பிரார்த்தனைகளை
எப்போதோ
உன்னிடம்
அனுப்பி விட்டோம் !

நீ
திருத்தி எழுதும்
தீர்ப்பின் மீது
நம்பிக்கை உள்ளவர்களாக
விடியலை
எதிர்நோக்கி
நாங்கள் !

உதயத்திற்கு
உயிர் கொடுப்பவனே ..
இறைவா
எங்கள் இதயத்திற்கு
இதம் கொடு !

நல்லவர்களுக்கே
ஆட்சி செய்ய
வரம் கொடு !
நீ
கொடுப்பது
யாருக்கென்றாலும்
நாட்டுக்கே
அதனால்
நலம் கொடு !

தவக்கல்து அலல்லாஹ் !
Abu Haashima Vaver

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails