Sunday, March 2, 2014

" தூதுபுறா" கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.

தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் பெண் கவிஞர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் ! இப்படிப்பட்ட சூழ்நிலையில் குமரிமாவட்டம் தக்களையைச் சேர்ந்த ஷர்மிளா சித்தீக் என்ற பெண் எழுதிய " தூதுபுறா"
என்ற கவிதைத் தொகுப்பு இன்று மாலை நாகர்கோயிலில் வெளியிடப்பட்டது.
ஷர்மிளா ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சிறந்த சிந்தனாவாதி. சமுதாய சீர்திருத்த கொள்கைகளில் பற்றுள்ளவர்.
முதிர் கன்னி, வரதட்சணை கொடுமை போன்றவற்றை தன் கவிதை வரிகளில் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மிக அருமையான இந்த கவிதை நூலை ஒளிவெள்ளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
இன்று நடைபெற்ற வெளியீட்டு விழாவுக்கு கவிஞர் தமிழ்க்குழவி தலைமை தாங்கினார். பதிப்பாளர் பிதலிஸ் வரவேற்றார்.
நான் ( அபு ஹாஷிமா ) நூலை வெளியிட
வழக்கறிஞர் உதுமான் மைதீன் பெற்றுக் கொண்டார்.
கல்வியாளர்கள் ... எம்.எஸ்.அலிகான் , தக்கலை முஹம்மது காசிம் , உதுமான் மைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கவிஞர் வானம்பாடி சிறப்புரையாற்றினார் .
ஷர்மிளா ஏற்புரை வழங்க அவரது கணவர் சித்தீக் நன்றி கூறினார்.
தக்கலை ஹாமீம் முஸ்தபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவின் சில காட்சிகள்



 Abu Haashima Vaver
  கவிஞர் அபூ ஹாஷிமா வாவர் அவர்களுக்கு வாழ்த்துகள்
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails