Friday, March 14, 2014

ஒரு படம் இரு நண்பர்களின் சிறந்த கவிதைகள்

இத்தனை சோகம் ஏன்,
புறக்கணிப்பைப் புறக்கணித்து
அன்பின் நற்சுவாசத்தில் கலந்து கரைந்திடு...!


by  Nisha Mansur-
 







--------------------------------------------------------------


இதயக் கீறல்களை
ஆற்ற வழியின்றியே
தடுமாறிபோகிறேன்

அன்பின் வழி
ஆறுதல் படுத்த
நீ
வந்த போதும்

மொழி புரியாதவளாய்
உள்ளக்குமுறலை
கண்ணீரில்
கரைக்க
எத்தனிக்கும்
நான்!


படத்துக்காக தேங்க்ஸ்
Mansur Nisha அண்ணா!


by GJ Thamilselvi

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails