Wednesday, December 31, 2014

பெருமானாரின் பேரன்புக்கு உரிய மகளாக இருந்தாலும் வாழ்க்கை என்னவோ வறுமையில்தான் !

எங்கள் கண்மணி நாயகம் நபிகள் ( ஸல் ) அவர்களின் அருமை மகளார் ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் !
பெருமானாரின் பேரன்புக்கு உரிய மகளாக இருந்தாலும் வாழ்க்கை என்னவோ வறுமையில்தான் !
அன்புக்கணவர் அலீ ( ரலி ) , பிள்ளைகள் ஹசன் ஹுசைனோடு இனிய வாழ்வு வாழ்ந்த பிராட்டிக்கு வீட்டு வேலைகள் செய்ய இயலவில்லை.
காரணம்...
உடலில் வலுவில்லை !

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்....!


உடலுழைப்பு தினமும் வேண்டும்
உழைத்துண்டு வாழ வேண்டும்
பகிர்ந்துண்டு இன்பம்காண வேண்டும்
உறுதியான உடலுரம் வேண்டும்

உண்மையான அன்பு வேண்டும்
தற்பெருமையில்லா எண்ணம் வேண்டும்
சோர்வில்லா செயலாற்றல் வேண்டும்
உரிமையான உறவுகள் வேண்டும்

கூடிவாழும் சமூகம் வேண்டும்
தன்னலமற்ற தலைமை வேண்டும்
உரிமைக்கு குரல்கொடுக்க வேண்டும்
மாற்றங்கள் மலர வேண்டும்

உறுதியான இறைநம்பிக்கை வேண்டும்
இயற்கையான உலகம் வேண்டும்
செயற்கையை மறுக்க வேண்டும்
எல்லோரும் இன்புற்றிருக்க
வேண்டும்
ராஜா வாவுபிள்ளை

குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல அது அறிவியலை மெய்ப்பிக்கும் நூல்..!!



ஒரு முஸ்லிம்,

நோன்பிருப்பதன் அருமையை அறிவியல்ரீதியாக
அறிந்ததால் நோன்பிருப்பதில்லை,

தொழுகையால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய பலன்களுக்காக தொழுவதுமில்லை,

இன்னும் ஹஜ்ஜை,
அறுக்கப்பட்ட பிராணிகளை மட்டுமே உண்பதை,
ஒழு செய்வதை,
அமர்ந்து நீர் அருந்துவதை,
தாடி வைத்துக் கொள்வதை,
மதுவின் பக்கம் நெருங்காமலிருப்பதை,

இன்னும் இன்னும்
எல்லா நற்செயல்களையும்
அவன் செய்வது,
இறைவனுக்கு அடிபணிவதற்காகவும்
இறைத்தூதர் சொல்
அடிபிறழாமல் நடப்பதற்காகவும்தான்

அவற்றை அறிவியல் நிரூபிப்பது கண்டு
மகிழ்கிறானே அன்றி
அறிவியல் அவனுக்கு ஒரு பொருட்டல்ல

மேலும் குர்ஆன் ஒரு அறிவியல் நூல் அல்ல
அது அறிவியலை மெய்ப்பிக்கும் நூல்..!!

-நிஷா மன்சூர்
*******************************************************

Monday, December 29, 2014

இஸ்லாமிய திருமணம் ஒப்பந்தம் எளிமையானது

மணமகன் மணமகள் -ஒப்புதல்
இரண்டு சாட்சிகள் - அவசியம்
அவ்வளவுதான் திருமணம் முடிந்தது
இதுதான் இஸ்லாமிய திருமணம்
மொழி எந்த மொழியாகவும் இருக்கலாம்
மொழி- மணமகன் மணமகள் ,சாட்சிகள் அறிந்தவையாக இருந்தால்தானே ஒப்புதலும் சாட்சிகளும் கொடுக்க முடியும்.
ஊர் முறைபடி  தற்காலங்களில் மணமகன் மணமகள் ஒப்புதலுக்கு அடையாளமாக அவர்களது கையெழுத்தும் சாட்சிகள் கையெழுத்துகளும் வாங்கிக் கொள்கின்றார்கள்
இது ஒப்பந்த பத்திரமாக பாதுகாக்கப் படும்
நபி (ஸல்)அவர்கள் மணமக்களை வாழ்த்தியது (துவா)
நபி வழியில் திருமண வாழ்த்து.

 ”பார(க்)கல்லாஹூ ல(க்)க வபார(க்)க அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.
      பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) பெறச்செய்வானாக. நன்மையான விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.  அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி).  நூல் : அஹ்மத், அபூதாவுத்.

மணமக்களை வாழ்துவது
நபிமார்கள் வாழ்ந்தபடி வாழுங்கள் என்று அரபியில் யாரோ எழுதிவைத்ததை மனனம் செய்து வாழ்த்துவதும் வழக்கமாக இருந்து வருகின்றது .ஆனால் அதனை இப்பொழுது தமிழில் அதனை மொழிபெயர்த்தும் மார்க்க அறிஞர்கள் சொல்லத் தொடக்கி விட்டது பாராட்டுக்குரியது.
மற்றும் பலர் இனிய தமிழில் வாழ்த்துவதும் நடைமுறையில் உள்ளது

எது நபிவழி ..?


போராட்டங்கள் ,தியாகங்கள்,இழப்புகள்,உங்கள் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காத பிற இயக்கங்களால் கைவிடப்படல் இப்படியாக பல தடைகளையும் தாண்டி இன்று ஓங்கிய ஆலமரங்காய் பல இஸ்லாமிய
இயக்கங்கள் நம் சமுதாயத்திற்கு நிழல் தந்து கொண்டிருப்பதாக
நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நடுநிலைப் போக்கை எம்போன்றோர்களுக்கு சில விளக்கங்களைத் தர இவ்வொட்டு மொத்த இயக்கங்களும் கடமைப்பட்டுள்ளன

நடுநிலை என்றவுடன் இங்கொரு கால் அங்கொரு கால் வைத்திருப்பவர்கள்
என்று கருதவேண்டாம் நல்லதை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்கள் . இறைவாக்கினையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸுகளையும் ஆதாரமாகக்கொண்டு
எல்லாவற்றுக்கும் விளக்கம் தரும் நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக களமிறங்கும்போது மட்டும் அதே இறைவேதமும் ஹதீஸுகளும் உங்களுக்கு மட்டும் விதிவிலக்காகிப் போனதா என்று நினைக்கும் அளவிற்கு உங்களின் உயர்ந்த கொள்கையினை விட்டு சற்று சருகுவதாகவே எண்ணத்தோன்றுகிறது.

Sunday, December 28, 2014

இஸ்லாத்தை தழுவ விரும்பிய சர் வின்ஸ்டன் சர்ச்சில்!

(நடுவில் அமர்ந்திருப்பது சர் வின்ஸ்டன் சர்ச்சில், இடது பக்கம் அமர்ந்திருப்பவர் மகன் ரோன்டால்ஃப், வலது பக்கம் அமர்ந்துள்ளவர் சகொதரர் ஜான் சர்ச்சில், மேலே அமர்ந்திருப்பது மருமகன்)

பிரிட்டனை ஆண்ட பிரதமர்களில் வின்ஸ்டன் சர்ச்சில் மிக முக்கிய இடத்தைப் பெற்றவர். இவரது ஆட்சியில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. 1940 லிருந்து 1945 வரையும் பிறகு 1951 முதல் 1955 வரையும் பிரிட்டிஷ் பிரதமராக பதவி வகித்தவர்.

காயிதே மில்லத்தின் அரசியலும், இன்றைய முஸ்லிம் அரசியலும்!

காயிதேமில்லத் மரணித்தபோது புதுக்கல்லூரி வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கே இறுதி மரியாதை செலுத்த வந்த தந்தைப் பெரியார், 'தம்பி போயிட்டீங்களா..' என குலுங்கினார். 'நான் போயி இந்தத் தம்பி வாழ்ந்திருக்கக்கூடாதா' என விசும்பினார். 'இனி இந்தச் சமுதாயத்தை யார் காப்பாற்றுவார்' என குமுறினார். 'இனி முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர் போல ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்' என கருத்துரைத்தார்.

பெரியாரின் வலி மிகுந்த அந்த வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை, இன்றைய முஸ்லிம்களின் அவல நிலையிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

Friday, December 26, 2014

நபிகளாரின் வழிகாட்டுதலைக் கண்டு பிரமிக்கின்றேன்: ஊடகவியலாளர் மதன்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலத்தின் சார்பாக டிசம்பர் 25 முதல் 28 வரை சென்னை புரசைவாக்கத்தில் வாழ்வியல் கண்காட்சி நடைபெறுகிறது. அமைதியை நோக்கி எனும் மையக்கருத்தில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமது அவர்களின் தலைமையில் ஊடகவியலாளர் மதன் திறந்து வைத்து உரையாற்றினார்.

அமைதியை நோக்கி எனும் வாழ்வியல் கண்காட்சியை முழுமையாக பார்வையிட்டேன். காட்சி அமைப்புகளும், சிறுவர்களின் விளக்கமும் எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகின்றது. ஏனென்றால் இன்றைய சமுதாயம் வாசிப்பைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். அவர்கள் நிறைய படிக்க வேண்டும்.

Thursday, December 25, 2014

ஒரு சொல்.- நிஷா மன்சூர்


ஒருசொல் உருவாக்கும் விளைவுகள் பாரதூரமனவை
உதாரணமாக மதுபோதையிலிருக்கும் ஒருவன் நம்மீது மோதிவிடுகிறான்,மோதியது மட்டுமல்லாமல்
"ஏய்,பாத்து வாய்யா....ங்கொ....."
என்று கடுமையாக வைதுவிடுகிறான்.
நம் மனோநிலை எப்படி இருக்கும்...??
ராங்கா வந்ததுமில்லாம எம்மேல மோதிட்டு என்னையே பாத்துவான்னு சொல்றியா...அதுவும் தாய் தொடர்பான அசிங்கமான வசவு வார்த்தையோட.
நம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள் வரை ரெளத்ரம் தாண்டவமாடுகிறது,நம் சிந்தனை உணர்வு எல்லாம் கோபத்தின்
அதீத உச்சத்தினால் தடுமாறிவிடுகிறது,
அவனை அடிக்கப் பாய்கிறோம்,
அவனை கடுமையாக தண்டிக்கத் துடிக்கிறோம்,
நம் அறிவுகூட திகைத்து நிற்க..உணர்ச்சி வேகத்தில் உடல் நடுங்க
மிகுந்த வெறியோடு அவனை அணுகுகிறோம்.

Tuesday, December 23, 2014

ஏகனே இறையோனே....! - ராஜா வாவுபிள்ளை

ஏகனே இறையோனே....!

தன்னிகரில்லா தனித்தோனின் காவலில் இருந்தே
அவனருள் வேண்டியே நிதமும் - தவறாது
போற்றி ஐவேளையும் வணங்கியே வாழ்ந்திட
பணித்தோனே ஏகனே இறையோனே!!

உண்மையாய் உணர்ந்து உள்ளத்தில் நிறுத்தி
அளவற்ற அருளாளனின் அனுக்கிரகம் பெற்றிடவே
அனுதினமும் அக்கறையாய் அனுஷ்டிக்கும் பழக்கத்தை - தவறாது
தந்திடுவாய் ஏகனே இறையோனே!!

பேறும் பிறப்பும் இறப்பும் இல்லாத
அகிலத்தை ஆளுகின்ற நிகரற்ற அன்புடையோன்
உன்னிடத்தே உளமார வேண்டுகின்றேன் - தவறாது
தருவாயே ஏகனே இறையோனே!!

Monday, December 15, 2014

பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கிறேன் அவ்வப்போது



பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கிறேன் அவ்வப்போது

அங்கு....

ஆசைகள் இல்லை
திருப்தி உண்டு

தேவைகள் எதுவும் இல்லை
அனைத்தும் அடங்கி இருக்கும்

மொழிகள் இல்லை
அர்த்ததங்கள் ஆயிரம் உண்டு

ஆரவாரம் எதுவும் இல்லை
நிசப்தம் நிறைந்து இருக்கும்

கவலைகள் எதுவும் இல்லை
நிம்மதி நிறைந்திருக்கும்

சிறகுகள் இல்லாமலே
மனம் சிறகடித்து பரந்திருக்கும்

தொடக்கமும் முடிவும்
திறந்தே இருக்கும்

ராஜா வாவுபிள்ளை

"இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்"


அஸ்ஸலாமு அலைக்கும்,

"இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்" என்ற தலைப்பிலான கட்டுரையின் முதல் பகுதி சகோக்களின் உதவியோடு இணைய கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் பதிவேற்றப்பட்டுள்ளது. விக்கியில் பங்களிக்க அதன் நிர்வாகம் ஊக்கப்படுத்தி வரும் நிலையில், நம் பக்கத்திலான சிறு பங்களிப்பே இக்கட்டுரை. பார்க்க https://ta.wikipedia.org/s/46rl

இதற்கு முன்பு, 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்ற பதம் குறித்த ஆய்வுக்கட்டுரை பதிவேற்றப்பட்டுள்ளது. அதனை படிக்க https://ta.wikipedia.org/s/2pcz


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

மறக்கக் கூடாத நினைவுகள் ...- அபூ ஹாஷிமா வாவர்

வரலாற்று சிறப்புமிக்க பாபர் மசூதியை 1992 டிசம்பர் 6ம் நாள் இடித்தார்கள்.
அப்போதே சங் பரிவாரக் கும்பல்...." இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கோயில்களை இடித்து பள்ளியும் தர்காவும் கட்டி இருக்கிறார்கள். அவற்றையும் இடித்து கோயில் கட்டுவோம் " என்று சொன்னார்கள்.

இப்போது தாஜ்மகாலை கோயில் என்று சொல்ல அரம்பித்திருக்கிறார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது முஸ்லிம் அறிஞர்கள்
பத்திரிகையாளர்கள்
மாற்று மத சமூக ஆர்வலர்கள்
ஒரு விஷயம் குறித்து வெகுவாக ஆதங்கப்பட்டார்கள். அது...

முஸ்லிம்களிடமும் அவர்களின் ஜமாத்துகளிடமும் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன.
ஆனால் அவற்றை உரியமுறையில் ஆவணப்படுத்த் தவறியதால் அந்த சொத்துக்களை யார்யாரெல்லாமோ அனுபவிக்கிறார்கள்.
வக்ப் வாரியமும் அவற்றை சரியான முறையில் பாதுகாக்கவில்லை என்று சொன்னார்கள்.

இந்திய முஸ்லிம்களின் வரலாறையோ தமிழ் முஸ்லிம்களின் வரலாறுகளையோ இன்னும் முழுமையாக யாரும் ஆவணப்படுத்தவில்லை என்ற குறையும் இருந்தது.

அப்போதுதான் தமிழ் முஸ்லிம்களின் அரலாறுகளை ஆய்ந்து பார்க்கும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
ரிபாயி சாஹிப் அவர்கள்
எஸ்.எ.கமால் அவர்கள்
எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் அவர்கள் போன்ற ஒரு சிலரே கொஞ்சம் வரலாறுகளை செதுக்கிவைத்துவிட்டு சென்றிருந்தார்கள்.

Saturday, December 13, 2014

எது வளர்ச்சி ... !


பாலினத்தின் தன்மைக்கு
உகந்த பொறுப்புகளில்

சீர்பெற்று வலிமைபெற்று
வளமாவதே பரிபூரண வளர்ச்சி ... !

பெண் பாலினம் சார்ந்த
பொறுப்புகள் ஏராளம்,

ஆண் பாலினம் சார்ந்த
பொறுப்புகள் ஏராளம்,

ஒன்றை ஒன்று மீறுவதல்ல வளர்ச்சி
ஒன்றை ஒன்று வலுப்படுத்துவதே வளர்ச்சி

Thursday, December 11, 2014

யாஅல்லாஹ்....! நல்வழி காட்டிடுவாயே யாஅல்லாஹ் - ராஜா வாவுபிள்ளை



பழிபாவம் அறியா
பவித்திர பாலகனாய்
பிறப்பித்து வாழ்ந்திடவே
வழி செய்தாய் யா அல்லாஹ்

வளர்ந்து ஆளாகி
பாவங்கள் பலசெய்து
சுமைகளாய் தோளில்
ஏற்றியதை இறக்கிடுவாய் யாஅல்லாஹ்

பழிக்கு அஞ்சாத
பாவிகள் மத்தியில்
உந்தன் பாதம் பார்த்து
நடந்திட அருள்வாயே யாஅல்லாஹ்

புண்ணியங்கள் இருக்க
பாவத்தை கையேந்தாமல்
புனிதமாய் வாழ்ந்திடவே
நல்வழி காட்டிடுவாயே யாஅல்லாஹ்

உனது கட்டளைளை
சிரமேற் கொண்டு
சிரத்தையாய் செய்திடவே சிந்தையை செப்பனிட்டு தருவாயே யாஅல்லாஹ்

வாழ்வு தந்தாய்
வாழும்கலை சொல்லித் தந்தாய்
நல்நெறி வழுவா
நடப்பினை தருவாயே யாஅல்லாஹ்

மரணத்தை எழுதிவிட்டாய்
எழுதியதை எதிர்கொண்டு
எம்பெருமான் வழிசென்று
உன்னடி சேர்ந்திடவே ஏகனே கருணை கட்டிடுவாயே யாஅல்லாஹ்

Wednesday, December 10, 2014

காதெலென்பது யாதெனில்…- யாசர் அரபாத்

என் பக்கம்'s photo.
சண்டையெனும் போது
மல்லுக்கு நிற்பாய்;
சமாதானத்திற்கு நீயேதான்
முன்னுக்கு நிற்பாய்;

கோபமாக இருந்தாலும்
தோசை சுடுவாய்;
இன்னொன்று வேண்டுமாயென
பேச்சைத் துவங்குவாய்;

பொறையேறும் போது
தண்ணீயோடு ஓடி வருவாய்;
கோபத்தோடு தலையில் நாலுபோட்டு
நானிருக்கும்போது எவர்
நினைக்கிறாரென வம்பிழுப்பாய்;

உண்மையைச் சொன்னா கோபம்
வருதாயென குத்திகாட்டுவாய்;
பதிலுக்கு பதில் பேசினால்
நீங்க மட்டுந்தான் சரி..
போதுமாயென வாயடைப்பாய்;

புரியாத காதலில் வகுத்தெடுப்பாய்;
புன்னகையால் அன்பை பெருக்கெடுப்பாய்;
புண்பட்டத் தருணத்தைக் கழித்தெடுப்பாய்;
புத்தி வேண்டுமென நக்கலோடு கூட்டி முடிப்பாய்!!

Yasar Arafat

விமர்சனமும் நட்பும்

விமர்சனங்கள் இனியவைகளாக இல்லையென்றாலும், விமர்சனங்களே பிழைகளறியும் அளவுகோல், விமர்சனங்களே பிழைகலர கருவி, விமர்சனங்களே நம்மை தாக்கும், விமர்சனங்களே நம்மை பக்குவபடுத்தும், விமர்சனத்திற்கு பயந்தவர்கள் வளர்வதற்கு வாய்ப்பில்லை, விமர்சனவளையம் நுழையதோர் வளர்ந்ததாக பொருளில்லை.

ts not necessary to answer all the question that has been asked to us... Most of the time silent is the salient answer even if they don't understand..
i stopped looking at others mistake when i begun to notice mine...

Rafeequl Islam T


இருள் சேர் நேரங்கள்
தன் நிழலையும் கொல்லும்
முற்றிலும் இருண்டாலும்
வாழ்வில் பொருள் சேர்க்க
உடன் நட்பு நில்லும்..
நன்றி : http://rafeeqspoem.blogspot.in

Tuesday, December 9, 2014

குர்ஆன் ஓதப்படுகிறது. அதனைச் செவியுறும் நீங்கள் யாரை நினைவு கூர்வீர்கள்?”


குர்ஆன் ஓதப்படுகிறது. அதனைச் செவியுறும் நீங்கள் யாரை நினைவு கூர்வீர்கள்?” என்று கேட்டார் சூஃபி.

இதற்கென்ன கேள்வி? என்பது போல் எண்ணினேன். ”அல்லாஹ்வைத்தான் நினைவு கூர்வோம்” என்று எங்களில் சிலர் பதில் சொன்னோம். மௌனமாக இருந்தவர்களின் பதிலும் அதுதான். அவர்கள் ஆமோதித்துத் தலையாட்டினார்கள்.

“அதாவது, குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வேதம். அவனின் பேச்சு – கலாம். எனவே அதனைச் செவியுறும்போது அவனின் நினைவு வருகிறது. சரி. மற்ற ஒலிகளில் ஓசைகளில் அவனை நீங்கள் நினைவு கூர்வதில்லை அல்லவா? ஆனால், ஒலிகளுக்கெல்லாம் ஆதாரமாக இருப்பதே அவனின் சிஃபத்தெ கலாம் என்னும் தெய்விகப் பண்புதான் அல்லவா? ஒலிகளுக்குள் அவனின் குரலைக் கேட்க வேண்டும் எனில் வேறு இரு செவிகள் வேண்டும்.

Monday, December 8, 2014

ஒரு முறையேனும்.. ! -அதிரை மெய்சா

[ ஒரு முறையேனும்.. அதிரை மெய்சாவின் கவிதை  லண்டன் வானொலியில் வாசகரின் பாராட்டை பெற்ற கவிதை ! ]

ஒருமுறையேனும்
திருமுகம் பார்த்து
திருமணம் செய்தல்
உறவுக்கு நலமே

பலமுறை பார்த்தும்
ஒருமுறையேனும்
பாராது போனால்
நட்புக்குக் கேடே

சில முறையேனும்
உதவிகள் செய்தால்
சினம் கொண்ட பகையும்
சேர்ந்திடும் இனிதே

Sunday, December 7, 2014

தேன் இனிக்க காரணம் என்ன தெரியுமா?

மெய்சிலிர்க்க வைக்கும்
அர்ப்புதக்காரணம்..?
*********************************************

தேனிக்கும் நபிகளாருக்கும்
இடையேயான அந்த அற்புதமான
நிகழ்வு
நபி (ஸல்); தேனியே! நீ
எப்படி தேனை உற்பத்தி செய்கிறாய்..?
தேனீ ; நாங்கள்
பூஞ்சோலைகளுக்கு
சென்று அங்குள்ள மலர்களின்
மகரந்தத்துகள்களையும்,
அமுதினையும் எங்கள் வாய்களால்
உறிஞ்சி சேகரித்து வைத்துக்கொள்வோம
்.
சேகரிக்கப்பட்டதை எங்கள்
கூட்டிலே உமிழ்ந்து(துப்பி)
விடுவோம்.
நபி (ஸல்) ; சரி. பூக்கள்
பலவகையுண்டு. சில பூக்களின்
மகரந்தம் இனிக்கும். இன்னும் சில
பூக்களின் மகரந்தம் கசக்கும்.
இன்னும் சில புளிக்கும்.
ஆனால் எல்லாவற்றையும்
கலந்து சாப்பிட்ட ஓர்
தேனி அதை எப்படி மிகுந்த
சுவையானதாகவும்,
அமுதமாகவும் மாற்றுகிறது........?
தேனீ சொன்னதாம்............,,, ?
தேனீ ; நபியே தாங்கள்
சொல்வது சரிதான்.
பல இனிப்பு, கசப்பு,
புளிப்பு போன்வற்றை சாப்பிட்டுவரும்
எங்களுக்கு அல்லாஹ் தங்களின்
மீது ஸலவாத் ஓத கற்றுக்கொடுத்தான்.
எங்கள் கூட்டை அடையும்
வரை விடாது தங்கள் மீது ஸலவாத்
ஓதிக்கொண்டே வருவோம்.
கூட்டை அடைந்ததும் நாங்கள்
சேகரித்தவைகளை உமிழும்போது,
ஸலவாத்தின் பரக்கத்தினால்
அது சுவைமிகு அமுதமாய்
மாறிவிடுகிறது.
கூறுங்கள் ஸலவாத்தை:
ﺍﻟﻠﻬﻢ ﺻﻠﻲ ﻋﻠﻲ
ﻣﺤﻤﺪ ﻭﻋﻠﻲ ﺍﺑﻮﻳﻪ ﻭﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺑﺎﺭﻙ ﻭﺳﻠﻢ
நூல்; மஸ்னவி ஷரீஃப



Friday, December 5, 2014

ஆயத்துல் குர்ஸி - அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை.

ஆயத்துல் குர்ஸியின் தமிழாக்கம் :

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை.

அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;,

அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா,

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன,

அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?

(படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;.

அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது.

அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது.

அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்சியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை. (அறிவிப்பவர் : அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு. நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா 9585)

Ayatul kursi - ஆயத்துல் குர்ஸி -Sheiklh Sa'ad Al Ghamdi 



Monday, December 1, 2014

இளமையை சாகடிக்கும் ரியால்களும்,தீனார்களும்!

  
 (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

இளமை இருபதில் பாலைதேசம் நோக்கிய பயணங்கள் பல எதிர்பார்ப்புகளோடு?

வருடங்கள் பல உருண்டோடியும் வறுமை நீங்கா குடும்பங்கள் அதிகமுண்டு.

வெளிநாட்டு மாப்பிள்ளை என்னும் மோகத்தில் பெண் கொடுத்தவர் பலர்.

கொடுப்பது ஆயிரமென்றாலும் அரபு நாட்டு பணமென்னும் வரட்டு கவுரவம் பார்ப்பவர் சிலர்.

அதனால் பலரின் இளமை வாழ்க்கை அரபு மண்ணிற்குள் புதைக்கப்பட்டு விட்டன.

Sunday, November 30, 2014

"உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."

Surat Al-Kāfirūn (The Disbelievers) - سورة الكافرون

بسم الله الرحمن الرحيم

109:1 Say, "O disbelievers,

(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!( 'இறை மறுப்பாளர்')
109:2 I do not worship what you worship.

நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

109:3 Nor are you worshippers of what I worship.

இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

109:4 Nor will I be a worshipper of what you worship.

அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

109:5 Nor will you be worshippers of what I worship.

மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

109:6 For you is your religion, and for me is my religion."

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."




---------------------------------
'காஃபிர்' விளக்கம்
'குஃப்ர்' என்ற மூலச் சொலிலிருந்து பிறந்ததே 'காஃபிர்' என்ற வார்த்தை. அதற்கு நேரிடையான தமிழ் மொழி பெயர்ப்பு 'இறை மறுப்பாளர்'
ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை 'காஃபிர்கள்' என்று அழைக்கப் படுவதுண்டு
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது திரு மூலரின் திருமந்திரம்.
நமது முன்னோர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்துள்ளனர்.
இந்த பல தெய்வ வணக்கம் என்பதே இடைக்காலத்தில் கலாசார மாற்றங்களினால் புகுத்தப்பட்டது.

Thursday, November 27, 2014

அடிமைத்தனமல்ல… அருட்கொடை!


திறந்து கிடப்பதுதான் சிறந்தது என்றால்

அந்தச் சிறப்பு என் தாய்க்குத் தேவையில்லை

கணவன் காண வேண்டியதைகண்டவனும் காண்பதுதான் சுதந்திரம் என்றால்

என் மனைவி அடிமையாகவே இருக்கட்டும்

வரைமுறையற்று வாழ்வதுதான் பெண்ணியம் என்றால்

என் சகோதரி எதிர்பெண்ணியவாதி என்பதில் பெருமையடைகிறேன்

உடலைக் கடைவிரித்துதான் உலகை வெல்ல வேண்டுமா

இல்லை என்பதற்கு அன்னை தெரசா அற்புதச்சான்று

Wednesday, November 26, 2014

இறைத்தூதரைக் கடவுளாகவிடக் கூடாது.

சமீபத்தில் மறைந்த நவீன இலக்கிய மேதை
யு.ஆர்.அனந்தமூர்த்தி பேசுகிறார்:

-------------------------------------------
முஸ்லிம்கள்
தங்கள் இறைத்தூதரைக் கடவுள் எனப்
புரிந்துகொள்ளக் கூடாது என்னும் காரணத்துக்காக
இறைத்தூதரின் பெயரைச் சொன்னவுடன்
கடவுளின்
கருணை சொன்னவர்மேல் இருக்கட்டும் என்கிறார்கள்.
அது அற்புதம்.
ஏனென்றால், இறைத்தூதரைக்
கடவுளாகவிடக் கூடாது.
தங்கள் குருவைக் கடவுளாகவிடக் கூடாது என்னும்
இந்தப் பிடிவாதம் உள்ள வேறொரு மதம்
உலகத்தில் இல்லை.

காந்தியைப் பொறுத்த அளவிலும் இது உண்மை.
தான் வெறுமனே ஒரு மனிதன்
என்னும் புரிதலோடு இறுதிவரை அவர் வாழ்ந்தார்.
வெறும் மனிதனாக இருந்துகொண்டே
அவர் மகாத்மாவானார்.
மகாத்மா என்றவுடனே
அவர் வெறும் மனிதர்தான் என்பதை
மறந்துவிடக் கூடாது.

*
குறிப்பு:
பிரபல கண்ணட எழுத்தாளர் யு. ஆர். அனந்தமூர்த்தி,
2007ஆம் ஆண்டு ஜூலை மாதம்
கர்நாடகாவின் உடுப்பியிலுள்ள MGM கல்லூரியில்
காந்தி ஆய்வு மையத்தைத் தொடங்கிவைத்து
ஆற்றிய உரையின் தமிழாக்கம் இது.
மொழிபெயர்ப்பு- திரு நஞ்சுண்டான்.

*
நன்றி: காலச்சுவடு

தகவல் தந்த  Taj Deen அவர்களுக்கு நன்றி 

ஜனாஸா தொழுகையின் போது ஓதுவது...

அஸ்ஸலாமு அலைக்கும்….

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது மறந்திருக்கலாம்....

அவர்களுக்காக இந்தப்பதிவு.....

1.முதல் தக்பீருக்குப் பின்,
_____________________________
முதல் தக்பீர் கூறிய பின் ....

அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.

ஆதாரம்:- புகாரி, 1335
*****************************************
2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________
இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்.

”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

ஆதார நூல்:- பைஹகி ,4/39
**********************************************
3, 4. மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________
இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

அல்லாஹும்ம ஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்.

அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)

முஸ்லிம்: 1601.

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் செம்மொழி இதழ்

 செம்மொழி – சமூக இலக்கிய இதழ்

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் செம்மொழி இதழை வாசிக்க ...............
  1. செம்மொழி இதழ் ( July – September 2014 )
  2. செம்மொழி – சமூக இலக்கிய இதழ்

http://mudukulathur.com/?p=14335

Thursday, November 20, 2014

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் - 5

திப்புவின் கட்டளை உண்மையில் உயர்ஜாதி மடாதிபதிகளின் கோட்டையையே உலுக்கிப் போட்டது. ஜாதியின் பேரில் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த உயர்ஜாதித் தம்புரான்களுக்கு, தங்களின் கட்டுப்பாடற்ற சுதந்திரமான சுகவாழ்வு நீடிக்க அவர்களின் ஜாதிச் சடங்கு, சம்பிரதாயங்களை நிலைநிறுத்த வேண்டியது கட்டாயமாக இருந்தது. அதன் காரணமாக, ஆங்கிலேயர்களுடன் இணைந்து திப்புவிற்கு எதிராகப் பரவலான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தனர்.

உயர்ஜாதித் தீண்டாமை மற்றும் அடக்குமுறைக்கு எதிரானத் திப்புவின் சமூக சீர்த்திருத்த முயற்சிகள் அனைத்தும் இந்து மதத்துக்கு எதிரான செயல்பாடுகளாகத் திரிக்கப்பட்டதோடு, திப்பு ஒரு இந்து மதவிரோதி என்று பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவைத் தங்களின் காலனி நாடாக வென்றெடுப்பதற்குப் பெரும் சவாலாக விளங்கிய திப்புவை அழிக்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயர்களுக்கு. அதே நேரத்தில், உள்நாட்டு மக்களிடையே உயர்ஜாதி மடாதிபதிகளால் திப்புவுக்கு எதிராகப் பரப்பப்பட்ட இந்தப் பொய் செய்தி, ஆங்கிலேயருக்கு எதிரான திப்புவின் போராட்டத்தில் ஒரு பெரும் பகுதி மக்கள் ஆங்கிலேயர்களுக்குத் துணை செல்லும் நிலையை ஏற்படுத்தியது இந்திய வரலாற்றின் இருண்டபகுதி என்றே வர்ணிக்கலாம்.

Monday, November 17, 2014

'பெருநாள் காலை' - தாஜ்:

ஆனாலும் பாரு.. என் சின்னப் பொண்ணு மும்தாஜுக்கு, வீட்டோடு மாப்பிளையா பார்த்து கட்டிக் கொடுத்ததுக்கு பொறவு ஆண்டவனா கண்பார்த்து இவனை கொடுத்தான். எம் பேரன் இவனப் பாக்கிறப்ப, எம் மெவனப் பாக்குற மாதிரியே இருக்கு! அவனோட ஜாடை, நடை, அதே பேச்சு, புத்தியெல்லாம்கூட அப்படியப்படியே இருக்குதுன்னா பாத்துகியேன்!

*
சமயங்கல நினைச்சுப்பார்த்தா திக்குங்குது. இந்த துனியாவுல எல்லாம் ஹொதரத்தாதான் இருக்கு போயேன்! அல்லாதான் இவனுக்காவது நல்லப் புத்திய கொடுத்து நீடித்த ஆயுசயும் நிறைஞ்ஜ பரக்கத்தையும் கொடுத்து காவந்துப்பண்ணித் தரணும்."

Saturday, November 15, 2014

பாங்கோசை / - கவிஞர் அப்துல் கையூம்

 பாங்கோசை

நான் முதன் முறையாக மதினா சென்றபோது நள்ளிரவு மணி ஒன்றாகி விட்டது. “பைத்துன் நபவி” பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள இருப்பிடம் இதுவென்று சொல்லி எங்களை ஒரு ஹோட்டலில் இறக்கி விட்டார்கள். விடியற்காலை தொழுகைக்கு கிளம்பினோம். பள்ளிவாசலுக்கு எப்படி போவது? வழி தெரியாதே என்ற கவலை எனக்கு. ரிசப்ஷனில் வீற்றிருந்த எகிப்து நாட்டு பேர்வழியிடம் அப்பாவித்தனமாக “பள்ளிவாசலுக்கு எப்படி போக வேண்டும்?” என்று விசாரித்தேன். என்னை  அவர் ஒருமாதிரியாக ஏற இறங்க பார்த்தார். “விளங்காதவானாக இருப்பான் போலும்” என்று மனதிற்குள் அவர் என்னைப் பற்றி. நினைத்திருக்கலாம். “எல்லோரும் எப்படி போகிறார்களோ அப்படி போனால் போதும் பள்ளிவாசல் வந்து விடும்” என்றார். ஹோட்டலை விட்டு வெளியே வந்து பார்த்தபின்தான்  நான் இந்த கேள்வியைக் கேட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை உணர்ந்தேன். காரணம், சாரை சாரையாக செல்லும் ஊர்வனங்கள் போல  ஆயிரக் கணக்கில் அன்பர்கள் பள்ளிவாசலை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நானும் என் குடும்பத்தாரும் நேராக பள்ளிவாசல் சென்றடைந்தோம். அந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டபோது என் மனதில் உதித்த கவிதை இது:

Friday, November 14, 2014

தந்தையின் காலம் / தாஜ்

என் பிள்ளைகள்
படிக்கிறார்கள்
சுமக்க இயலா
சுமக்கப் படிக்கிறார்கள்.

வீட்டிலென்
அசைவுகளிலும்
பார்வை அகலா
சிரத்தையோடு படிக்கிறார்கள்.

மண்ணிலென்
பாதம் பதியும்
இதம் வேண்டி
காலணிகளை விட்டுச் செல்ல
படிப்பாய் தெளிந்தறிகிறார்கள்.

குறுக்கீடு தவிர்க்க
நித்தமும் சப்தமற
காலடிகளை அளந்து
பாதை ஒற்றியே
நடக்க வேண்டியிருக்கிறது.

என் உடுப்புகளில்
கறைபட்ட எச்சங்கள்
இன்னும் அவர்களுக்கு
புலப்படாதது ஆச்சரியம்.

அவர்களது புத்தகக்
குவியலுக்குப் பக்கத்தில்
என்னைக் கண்டு நான் நகலெடுத்த
என் கவிதைத் தொகுப்பொன்று
விரிந்து கிடக்கிறது
இன்னொரு புத்தகமாக.

காலம் காலமாக
எல்லோரும்
கவிதைகளை
விரும்புவதில்லை என்பதும்தான்
எத்தனை சந்தோஷமாக இருக்கிறது.

*
கவிதை காலம்: 1993
 Taj Deen ஆக்கம் தாஜ் தீன் அவர்கள்

வீரம் ....! / ராஜா வாவுபிள்ளை

 
வெட்டிச் சாய்ப்பது அல்ல விவேகமாய் செயல்பட்டு
வெற்றி வாகை சூடுவது யார் அந்த வீரன் !

வில்லங்கம் பண்ணாமல்
விரோதியை விரட்டி அடிப்பது வீரம்

தங்கு தடைகளை நீக்கி
தெளிவான பாதையில்
இலக்கை நோக்கி
வீறு நடை போட்டு அடைதல் வீரம்

சமூக அவலம் கண்டு
கொதித்தெழுந்து குரல் கொடுப்பது வீரம்

கோபமாய் இருக்கும் போது அமைதி கொண்டு பொறுமையை கையாளுதலே வீரம்

தன்னுடைய நிலைமையில், சக்தியில், பொருளாதாரத்தில் தாழ்ந்து இருப்பவர்களை
அரவணைத்து செல்வதே
வீரம்

போருக்கு தயாராக இருந்தாலும்
அமைதிக்கு முதல் தூதுவ னாய் இருப்பதுவே வீரம்

படைப்பினங்களுக்கு
அஞ்சாமல்
படைத்தவனை அஞ்சி
வாழ்வது வீரம்

 
ஆக்கம் ராஜா வாவுபிள்ளை அவர்கள்
 

Wednesday, November 12, 2014

எண்ணங்களும், நிய்யத்துக்களும் வெறுமை எண்ணங்களாக, மனதில் பதியாத நிய்யத்துக்களாகவேதான் நம்மில் பெரும்பான்மையினருக்கு !

பாவம், சோற்றுக்கு முழிக்கும் ஒரு பூனையும், வயிற்றுக்கு பிழைக்கும் ஒரு விறகு வெட்டியும் !
இன்று காலை, ஆஃபீஸுக்கு புறப்படும் நேரம், கடைசி ஏணிப்படிகளில் நடந்து கீழ் தளத்தை அடைந்து, அங்கிருந்து வெளியே புறப்படும் நேரம், எதிர்த்தாற்போல், இடது பக்கத்தில் பெரிய குப்பை பக்கட்டை காலி செய்து விட்டு அதை தோளில் சுமந்து கொண்டு வரும் குப்பைக்காரன், வலது பக்கத்தில், அப்படியே அடுப்புக்கரி கொண்டு தேய்த்து விட்டது போல், அத்தனை கருப்பாக ஒரு கரும்பூனை, சொல்லி வைத்தது போல், கொஞ்சம் சைடு எடுத்து கரெக்ட்டா நேர் குறுக்காக பாய்ந்து போகிறது, எப்படி இருந்திருக்கும் என் மனநிலை, எப்படியும் இருந்திருக்கவில்லை என்பதுதான் எந்த வியாதியும் பிடிக்காத என் புத்தி !

Sunday, November 9, 2014

"முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும்"- தங்கப் பதக்கம் வென்ற மாணவி!

விமான நுட்பப் பொறியியல் என்று வழங்கப் படும் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரீங் படிப்பில் அண்ணா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார் ஷஃபீரா அனீக்கா என்ற மாணவி. தமிழகத்தின் நாகூரைச் சேர்ந்த அவருக்கு வாழ்த்துகள் கூறி ஒரு சிறு நேர்காணல் செய்தோம்.

ஷஃபீரா அனீக்கா, தமிழக முஸ்லிம் உலகின் கண்ணதாசன் என்று கருதப்படும் மறைந்த கவிஞர் நாகூர் சலீம்தம் பேத்தியாவார் என்பது சிறப்புக் குறிப்பு.

சிங்கையிலிருந்து கணிப்பேசி வழியாக தனது சிறிய தகப்பனார் ஜாஃபர் சாதிக் முன்னிலையில் அவர் கூறிய கருத்துக்களின் தொகுப்பு:

வாழ்த்துகள் சகோதரி ஷஃபீரா!  இந்தப் படிப்பு (ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரீங்) பற்றி சொல்லுங்களேன்

Thursday, November 6, 2014

ஏஞ்சலினா ஜோலியின் முயற்சியில் மனிதம் வெல்லட்டும். வாழ்த்துவோம்.

உலகில் வாழும் மனிதர்கள் விஞ்ஞானத்தின் வியத்தகு வளர்ச்சியில் தனது எல்லாத் தேவைகளையும் இலகுவாக அனுபவித்து நாகரிகத்தின் உச்சியைத் தொட்டுவிட்டதாக நினைத்து வாழ்ந்துவரும் இதேக் காலத்தில்தான் கிட்டத்தட்ட 15 மில்லியன் எண்ணிக்கையில் உலகின் பல் பாகங்களில்
தனி மனித அடிப்படை உரிமைகளைக் கூட பெறமுடியாமல் நாடற்ற அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு எந்த நாட்டின் குடியுரிமையும் கிடையாது. இவர்களுக்கு கடவுச்சீட்டும் கிடையாது. ஓட்டுரிமையும் இல்லை.
இவர்கள் இருக்குமிடத்திலிருந்து வேறு நாடுகளுக்குப் பயணிக்கும் வாய்ப்பும் கிடையாது, எனவே இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் என்பதே எண்ணமுடியாப் பெருங்கனவே.

Monday, November 3, 2014

அரபு நாடுகளின் அரியாசனங்களில் ஜனங்களை அமர வைக்கும் வரை-அபு ஹசீமா வாவர்

மாமனிதர்களால்
மண்ணே மணக்கிறது
மண்ணே சிறக்கிறது !

பெருமானார் விட்ட
மூச்சால்
மதினா
மணக்கிறது !

அவர்களின்
பேரப்பிள்ளை
ஹுசைனார் விட்ட
மூச்சால்
கர்பலா
சிவக்கிறது !

ஒட்டுத்துணி அரசர்


யார் இவர்?

சுட்டெரிக்கும் சூரியன் – அவர்
பட்டு மேனியைச்
சுட்டுவிடுமோ என்று

நடைபயின்ற நாயகத்தை
குடைபிடித்த மேகத்தை
இடை மறித்து கேளுங்கள்
விடையைக் கூறும் !

     *     *     *

யார் இவர்?

வானில் உலாவரும்
வண்ண நிலாவை
வழிமறித்துக் கேளுங்கள்

தன்
தேகத்தையே இருகூறாய்
வகிர்ந்துக் காட்டும் ..

பிளந்துக் காட்டியதே – அந்த
பெருமான்தான் என
பெருமை கொள்ளும் !

வேண்டியவை....! வேண்டும் .

வேண்டியவை....!

உயிரும் உரமும்
உடலில் வேண்டும்
ஈகையும் ஈரமும்
உள்ளத்தில் வேண்டும்

கனிவும் கண்ணியமும்
பார்வையில் வேண்டும்
கூ ர்மையும் நேர்மையும்
கணிப்பில் வேண்டும்

Friday, October 31, 2014

"இறைவன் உனக்கு அளித்த அருட்கொடைகளை நீ பகிரங்கப்படுத்து"

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி ,வ பரக்காதுஹு
அல்ஹம்துலில்லாஹ்.
கால் நூற்றாண்டினைக் கடந்து இருபத்துஆறாம்ஆண்டில் எம் நிறுவனம்.
-------------------------------------------------------------------------------------
நவம்பர் 1ந் தேதி என் வாழ்நாளின் மறக்க முடியாத ஒரு நாள். அல்லாஹ் நாடினால் ஒரு மனிதரின் வாழ்க்கையை திசை மாற்றி அவனை மேலோங்க செய்ய முடியும் என்பதை எனக்கு உணர்த்திய நாள். ஆம். இன்று தான் புரபஷனல் கூரியர் என்ற நிறுவனத்தின் முகவராக பத்துக்கு பத்து சதுர அடி அறையில் அலுவலகம் திறந்தேன். அன்றைய நாளில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்தேன். பதினைந்து ஆண்டு காலம் அரபி மதரஸாக்களில் ஆசிரியராக பணியாற்றினேன். மதரசாவில் ஆசிரியராக பணியாற்றியதில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் மதரஸா வாழ்க்கையில் இருந்து வெளியேறிய நான் வெளிநாடு செல்லலாம் என்று எண்ணிய பொழுது உங்கள் தகுதிக்கு ஏற்ற பணிகளுக்கான விசா இப்பொழுது இல்லை என்றும் எனவே நீங்கள் ஊரிலேயே தொழில் செய்யுங்கள் நாங்கள் அதற்கு உதவி செய்கின்றோம் என்றும் என் நண்பர்கள் எனக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
அது தொடர்பாக என் மீது பற்று கொண்டு என்னுடைய எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் பாராட்டியும் விமர்சனம் செய்தும் எனக்கு ஊக்க படுத்திய நீடூர் சிந்தனை சித்தர் அல்ஹாஜ்.ஏ.எம்.சயீது அண்ணன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். நீங்கள் தொழில் செய்வதாக இருந்தால் one time investment செய்து service oriental தொழிலை செய்வது தான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.நீங்கள் எழுதிய நூலை பதிப்பித்து வெளியிடுவது அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து அடுத்த நூல் வெளியிடுவது போன்ற பதிப்பக தொழிலில் நீங்கள் ஈடுபடலாம் என்று சொன்னார்.
நான் டிராவல்ஸ் ஆரம்பிக்கலாமா? என்று கேட்டேன். அதுவும் நல்ல தொழில்தான் எனினும் மிகவும் கவனமுடன் செய்ய வேண்டிய தொழில் என்று சொன்னார்.

Wednesday, October 29, 2014

என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.

இன்றைக்கு நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த பக்கீர்மார்கள் பாடல் காணொளி என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.

பள்ளிக்கூட நாட்களில் எங்கள் ஊரில் பொழுதுபோக்கு என்பதே நண்பர்களோடுக் கூடிப் பேசுவது, விளையாடுவது, எப்போதாவது சேர்ந்துப் படிப்பது அவ்வளவுதான். விவசாயம் சார்ந்த ஒரு கிராமத்தில் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.
இதைத் தாண்டி இன்னொரு விஷயம் எங்களை ஒன்றிணைத்தது என்றால் அது முஹப்பத்துல் முஸ்லிம் சங்கம்.

Saturday, October 25, 2014

சலீம் படத்தில் ஆரம்பத்தில் அரபியில் ஓதும் ஹதீஸ்


சலீம் படத்தில் ஆரம்பத்தில் அரபியில் ஓதும் ஹதீஸ்

1 அல்லாஹ்வை நம்புவது 2. வானவர்களை நம்புவது 3. வேதங்களை நம்புவது 4. நபிமார்களை நம்புவது 5. மறுமையை நம்புவது 6. விதியை நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது …(ஹதீஸின் கருத்து)
உமர் (ரலி)
நூல்:புகாரி.

சலீம் படத்தில் துவக்கத்தில் ஹதீஸ் அரபியில் ஓதுகிறது.
 ****************

Thursday, October 23, 2014

“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள்..."

  பாகிஸ்தான் பாரதி
- அப்துல் கையூம் 
“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள். ஏனெனில் நாளை என்பது விதியின் கைப்பிடிக்குள்” - அல்லாமா இக்பால்

இவ்வாரம் இக்பாலைப் பற்றி எழுதப் போகிறேன் என்று என் நண்பரிடம் தெரிவித்தேன். மின்னல் வேகத்தில் அவர் முகத்தில் ஒரு அதிருப்தி ரேகை. அவர் வீசியதோ ஒருவிதமான ‘குறுகுறு’ பார்வை. தேசத்துரோகம் ஏதாவது புரிகின்றோமோ என்ற ஐயம் எனக்குள்.

இக்பால் எனும் இலக்கியவாதியை நான் காதலிக்கத் தொடங்கி ஆண்டுகள் பலவாகி விட்டன. அப்போது எனக்கு 12 வயது. இக்பாலை எனக்கு அறிய வைத்தது எங்கள் பிறைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் அவுரங்கசேப் கான். முன்பு பட்டாளத்தில் பணி புரிந்தவர். பள்ளி ஆண்டு விழாவின்போது நானும் என் இரண்டு நண்பர்களும் அந்தப் பாடலை பாடவேண்டும்.

“சாரே ஜஹான் சே அச்சாஹ், ஹிந்துஸிதான் ஹமாரா

ஹம் புல்புல்ஹேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா”

Tuesday, October 21, 2014

துக்ளக் சோவும் சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமதின் ஞானமும்

சோவின் துக்ளக்
இதழ் தொடங்கிய காலக்கட்டத்தில்
தமிழகத்தின்
பிரபலமான அரசியல் புள்ளிகள் பலரிடம்
அவரே நேர்காணல் நடத்தினார்.

பிராமணர்களுக்கும்
பிராமணர் அல்லாதோருக்குமான
மறைமுக யுத்தம்
நடந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது!.

சோ, வக்கீலுக்குப் படித்தவர்.
தொழில் முறையில் அவர் படித்த
திறமை / தர்க்கம் மொத்ததையும்
பத்திரிகை வழியே
பிராமண அல்லாதோரின்
சமூக சிந்தனைகளையும்
அவர்களது அரசியலையும்
மிகத் துணிவாகவே கிண்டலடித்து
பந்தாடப் பயன்படுத்தினார்!

குறிப்பாய்...
அவரது அந்த நேர்காணல்
அதற்கு ஓர் சான்று.
அவரது புகழை அது கூட்டிய சங்கதியும் கூட.

கம்யூனிஸ்ட்...
இடது / வலது தலைவர்கள் முதலாக
திராவிடக் கட்சியின் செயலாளராக இருந்த
ஆசிரியர் வீரமணி வரை
அந்த நேர்காணலில்
சோவின் தர்க்கத்தில் மீண்டுவர முடியவில்லை.

அந்த வரிசையில்...
முஸ்லிம் லீக தலைவரான
சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமத் அவர்களையும்
சோ நேர்காணல் நடத்தினார்.
அந்த நேர்காணல் துக்ளக் இதழிலும் வந்தது.

பிற தலைவர்களை மிகச் சுலபமாக
தன் வாதத் திறமையால் / தர்க்கத்தால்
உருட்டிவிட்ட மாதிரி
அப்துல் சமதிடம் நடக்கவில்லை!

பேட்டி நடந்தக் காலக் கட்டத்தில்
பசுவதையை எதிர்த்து
ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது.
(இப்போது அதனை
அவர்கள் மறந்து போனார்கள் என்பது வேறுகதை)

பசுவதையொட்டிய ஒரு கேள்வியாக
துக்ளக் சோ, அப்துல் சமதிடம் கேட்டார்:

"முஸ்லிம்கள் ஏன் பசு மாமிசத்தை சாப்பிடுகிறார்கள்?"

"பசு மாமிசத்தை...
முஸ்லிம் அல்லாதோர்களும்தான் சாப்பிடுகிறார்கள்.
சொல்லப் போனால் பொதுவில்
முஸ்லிம்கள் விரும்பி சாப்பிடுவது குறைவு.
வட இந்தியாவில் சில இடங்களில்
ஏழைகள் சாப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்"

"அப்போ விலை குறைவு என்பதற்காக
முஸ்லிம்கள் எது வேன்டுமானாலும் சாப்பிடுவார்களா?"

"மிஸ்டர் சோ, விலை மலிவு என்பதற்காக
உங்கள் மதத்தில்
உங்கள் மக்கள் எதுவேன்டுமாலும்
சாப்பிடுவார்களோ... என்று எனக்கு தெரியாது.
ஆனால்,
எங்கள் மதத்தில்
நாங்கள் எதையெல்லாம் சாப்பிடலாம்..
எதனையெல்லாம் சாப்பிடக் கூடாது என்று
மதக் கட்டளையே இருக்கிறது!
அதனை நீங்கள் அறியவர மாட்டீர்கள்.
அதனால்தான் இப்படி கேட்டுவிட்டீர்கள்!"

- அந்த நேர்காணலில் சோவின்
வாதத்திறமையையும் / லாஜிக் திறமையையும்
சிராஜுமில்லத் அல்ஹாஜ் அப்துல் சமத் அவர்கள்
இப்படி உடைத்தெறிந்ததை
என்னால் இன்னும் மறக்க முடியவில்லை!

// நான் அறிந்து சோவை இப்படி மடக்கிய
இன்னொருவரை
இன்றுவரை இன்னும் நான் கண்டதில்லை.
 

 கட்டுரை ஆக்கம்   Taj Deen - தாஜ்

Monday, October 20, 2014

கேள்வியின் நாயகன்....

நாகூர் ,கவிஞர் இசட்.ஜபருல்லா
அண்ணன்அவர்கள், என் மீதும் என் குடும்பத்தின் மீதும் குறிப்பாக என் வாப்பாவின் மீதும் மாறாத அன்பும் பாசமும் கொண்டவர்கள்.
“ஜபருல்லா பிறந்த செய்தியை நான் தான் கொழும்பில் இருந்த அவரது தந்தை நண்பர் ஜக்கரியாவிடம் சொன்னேன்” என்பார் இசை முரசு நாகூர் ஹனீபா.

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று,பீ.ஜி.எல்.வரை போய்,என்ன காரணத்தினாலோ சட்டம் முடிக்காமல் இருந்துவிட்டார்.

அவர் எழுதிய கவிதைகள், அதுவும் சாட்டியடிக் கவிதைகள் அமிழ்தையும் கொடுத்து,அமிலத்தையும் காட்டி,நக்கல் நையாண்டி பெருக்கெடுத்தோடும்.வகையில் இருக்கும்.
அவர் தனி ரகம்.தனி ராகம்.அவரது பாடல்கள் தமிழகம் முழுதும் அறிமுகமானவை.
அதில் "அண்ணல் பெருமான் என் இல்லம் வந்தால்", உவமை சொல்லமுடியாதது.

Friday, October 17, 2014

மனித நேயத்திற்கு இன்னொரு பெயர் தபஸ்ஸும்!

ஹெச்.ஐ.வி என்ற பெயரைக் கேட்டாலே, காத தூரம் தள்ளி நிற்போர் பெருகி விட்ட இந்த கால கட்டத்தில் எயிட்ஸ் நோயாளிகளை அருகிலிருந்து பரிவுடன் கவனிப்பது ஒரு சவாலான விஷயம் தான்.

சவாலுக்குச் சொந்தமான பெண்ணின் பெயர், தபஸ்ஸும்!

அந்த சம்பவம் நடந்து ஏறத்தாழ பத்து வருடங்கள் ஆகி விட்டன. தபஸ்ஸுமுடைய நெருங்கிய தோழி ஒருத்தி திடீரென எயிட்ஸ் நோய் பாதிப்பினால் இறந்து போனார். அதுவும் டாக்டர்கள் ஹெ.ஐ.வி  பாஸிட்டிவ் என அறிவித்த இரு நாட்களுக்குள்ளேயே...

Thursday, October 16, 2014

நாகூர் மண்வாசனை (The Aroma of Nagore soil) 100 கட்டுரைகள்






மேடையில் சிவசிதம்பரத்துடன் எம்.ஜி.ஆர்., நெடுஞ்செழியன், மா.பொ.சி. அரிய புகைப்படம் சீர்காழி கோவிந்தராஜன்
View

viinaradai murthy தூயவன், நாகூர் தூயவன்
View

நாகூர் மண்வாசனை ரவீந்தர் - 2, கலைமாமணி ரவீந்தர், நாகூர் ரவீந்தர், Nagore Raveendar
View

நாகூர் மண்வாசனை ரவீந்தர் - 1, நாகூர் மண்வாசனை, நாகூர் ரவீந்தர்
View

ரவீந்தர் கலைமாமணி ரவீந்தர், நாகூர் ரவீந்தர்
View

வலது பக்கத்திலிருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் நாகூர் ஹனிபா நாகூர் ஹனீபா
View

logo நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, E.M.Haniffa, Isaimurasu E.M.Haniffa, Nagore E.M.Haniffa
View

260477_242766582415927_100000477613498_1029367_3391478_n சாரு நிவேதிதா, நாகூர் நினைவுகள், நாகூர், Charu Nivedita
View

wraper singapore assn இயற்றமிழ் வளர்த்த நாகூர், Uncategorized, நாகூர், நாகூர் என்ற பெயர் ஏன் வந்தது?, நாகூர் பெயர்க் காரணம்
View

இடமிருந்து நாலாவதாக நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், ஜஸ்டிஸ் இஸ்மாயில்
View

stalin நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, M.K.Stalin, Nagore E.M.Haniffa
View

சாரு நிவேதிதா இயற்றமிழ் வளர்த்த நாகூர், நாகூர் எழுத்தாளர்கள், புலவர் சண்முகவடிவேல்
View

chidambaram நீதிபதி இஸ்மாயீல், கம்பன் அவன் காதலன்
View

ஜெயமோகன் அகடம் பகடம் (Misc.), தமிழில் சிறுபான்மை இலக்கியம்
View

Vikatan 5 இசைக் கலைஞர்கள், இயற்றமிழ் வளர்த்த நாகூர், சாரு நிவேதிதா
View

நாகூர் முஸ்லிம் சங்கம் அகடம் பகடம் (Misc.), நாகூர் முஸ்லிம் சங்கம்
View

nagoori நாகூர் ஹனீபா
View

Gulam Kadir Navalar இயற்றமிழ் வளர்த்த நாகூர், குலாம் காதிறு நாவலர், நாகூர் புலவர்கள்
View

Image சிங்கையில் தமிழ், சிங்கையில் தமிழ் மொழியின் வளர்ச்சி, Tamil Language in Singapore
View

Image குலாம் காதிறு நாவலர், நான்காவது நக்கீரர் குலாம் காதிர்
View

EMH 3 நாகூர் ஹனீபா, Nagore Hanifa, Nagore Haniffa
View

இசைமுரசு அவர்களின் இளமைக் கால புகைப்படம் நாகூர் ஹனீபா, E.M.Hanifa, Nagore Haniffa
View

Image கவி.கா.மு.ஷெரீப், கலைமாமணி கா.மு.செரிப், வீரபாண்டியன்
View

IMG_0013 கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் அரிய புகைப்படங்கள், அரிய புகைப்படங்கள், Justice M.M.Ismail Rare photos, Unpublished photos of Justice M.M.Ismail
View

Nagore Haniffa நாகூர் ஹனீபா, Nagore Haniffa
View

Nasar daughter marriage நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, Nagore Hanifa, Nagore Haniffa Photos
View

IMG_0004 கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், ஜஸ்டிஸ் இஸ்மாயில், நாகூர், நாகூர் எழுத்தாளர்கள், நாகூர் பிரபலங்கள், நீதிபதி மு.மு.இஸ்மாயீல்
View

Image விஸ்வரூபம் தந்த பாடம், விச்வரூபம்
View

Image அகடம் பகடம் (Misc.), கான் பகதூர் ஸர் அஹ்மது தம்பி மரைக்காயர், நாகூர் பிரபலங்கள்
View

nagoori அகடம் பகடம் (Misc.)
View

karunaanidhi நாகூர் ஹனீபா, கலைஞருக்கு நாகூர் ஹனிபா கொடுத்த அல்வா, நாகூர் மண் வாசனை, நாகூர் ஹனிபா, பத்திரிக்கைத் துறையில் முஸ்லீம்கள், by Abdul Qaiyum, Nagore Mann Vasanai
View

405559_3254758335544_2116604764_n நாகூர் ஹனீபா, நாகூர் அனிபா, நாகூர் மண்வாசனை, நாகூர் ஹனிபா, by Abdul Qaiyum
View

Nagore Haniffa at present நாகூர் ஹனீபா, நாகூர் மண்வாசனை, நாகூர் ஹனிபா, by Abdul Qaiyum, Nagore Haniffa, Nagore Mann Vasanai
View

haniffa-in-malaysia1 நாகூர் ஹனீபா, நாகூர் மண் வாசனை, நாகூர் ஹனிபா, by Abdul Qaiyum, Nagore Haniffa Photos
View

Kalaingar with Haniffa நாகூர் ஹனீபா
View

பணமாலை அணியும் கருணாநிதி நாகூர் ஹனீபா, நாகூர் மண் வாசனை, ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம் 2), by Abdul Qaiyum, Isaimurasu E.M.Haniffa, Nagore, Nagore Haniffa, Nagore Mann Vasanai
View

Photo 1 நாகூர் ஹனீபா, நாகூர் ஹனிபா, ஹனிபாவுக்கு கலைஞர் கொடுத்த அல்வா, Nagore Haniffa
View

நாசமத்துப் போ அகடம் பகடம் (Misc.), அறம் பாடிய புலவர்கள், நாகூர் மண்வாசனை, by Abdul Qaiyum
View

zafarullah-kavi கவிஞர் ஜபருல்லா, நாகூர் மண்வாசனை, by Abdul Qaiyum, Nagore Mann Vasanai
View

Chidhambaram Accident (2) அகடம் பகடம் (Misc.), வைகோவின் மனித நேயம், by Abdul Qaiyum
View

kandana kOOttam என் கவிதைகள், கவிஞர் கையூம் கவிதைகள், by Abdul Qaiyum
View

charu-3 சாரு நிவேதிதா, ஊர்ப்பாசம், நாகூர் மண் வசனை, by Abdul Qaiyum, Charu Nivedita
View

மதுரை ஆதீனம் நாகூர் ஹனீபா, நாகூர் மண்வாசனை, நாகூர் ஹனிபா, மதுரை ஆதீனம், by Abdul Qaiyum
View

ஞாநி நாகூர் ரூமி, எச்.ஜி.ரசூல், ஞாநி, நாகூர் மண்வாசனை, புதிய தலைமுறை, by Abdul Qaiyum
View

sarana-bhaskaran1 7-ஆம் பாகம், கம்பன் அவன் காதலன், Justice M.M.Ismail
View

நாகூர் ஹனீபா நாகூர் ஹனீபா, இறைவனிடம் கையேந்துங்கள், காலத்தால் அழியாத பாடல், சிறந்த இஸ்லாமியப் பாடல், by Abdul Qaiyum
View

Kader oli new இயற்றமிழ் வளர்த்த நாகூர், கவிஞர் காதர் ஒலி, நூல் ஆய்வு, Nagore, நாகூர் கவிஞர்கள், வைரத்தூறல், by Abdul Qaiyum
View

பாரதிதாசன் கவிஞர் காதர் ஒலி, நாகூர் ஹனீபா, நாகூர் அனிபா, நாகூர் மண்வாசனை, பாரதிதாசன், பாவேந்தர், by Abdul Qaiyum
View

Kader oli கவிஞர் காதர் ஒலி, நாகூர் ஹனிபா
View

vaada 4 வாடா, நாகூர், நாகூர் உணவுமுறை, நாகூர் கலாச்சாரம், நாகூர் வாடா, by Abdul Qaiyum
View

jamalan எழுத்தாளர் ஆபிதீன், தமிழ் எழுத்தாளர்கள், நாகூர் எழுத்தாளர்கள், அஸ்ரப் ஷிஹாப்புத்தீன், ஜமாலன், நாகூர் ஆபிதீன், நாகூர் ரூமி, by Abdul Qaiyum, Nagore, Nagore celebrities, Nagore Rumi on Abedeen, Nagore Writers
View

nagoori நாகூர் ரூமி, அப்துல் கையூம், நீயா நானா, by Abdul Qaiyum
View

நாகூர் ரூமி நாகூர் ரூமி, இஸ்லாமும் கவிதையும், நாகூர், நாகூர் எழுத்தாளர்கள், நாகூர் மண் வாசனை, by Abdul Qaiyum
View

Nagore Sathick - 2 இயற்றமிழ் வளர்த்த நாகூர், கவிஞர் நாகூர் சாதிக், இமாஜான், நாகூர் சாதிக், நாகூர் ஹனிபா, நாகூர்க் கவிஞர்கள், பாடகர் ஜெய்னுலாபுத்தீன், by Abdul Qaiyum
View

ஆபிதீன் நாகூர் எழுத்தாளர்கள், புலவர் ஆபிதீன், அப்துல் கையூம், ஆபிதீன், கவிஞர் ஜபருல்லா, நாகூர் கவிஞர்கள், நாகூர் சலீம், by Abdul Qaiyum, Nagore celebrities, Nagore Writers
View

Noushath Ali நாகூர் ஹனீபா, பாடகர் நெளசாத் அலி, நாகூர் பாடகர்கள், நாகூர் ஹனிபா, நாகூர் ஹனிபாவைப் பற்றிய ஒர் அலசல், நெளசாத் அலி
View

Paraatta urundai பறாட்டா உருண்டை, by Abdul Qaiyum, Nagore Food Items, Nagore Food Specialities, Parotta Urundai
View

நவுஷாத் நாகூர் ஹனீபா, பாடகர் நெளசாத் அலி, இசைமுரசு ஈ.எம்.ஹனிபா, நாகூர் பாடகர்கள், நெளசாத் அலி, E.M.Haniffa, Nagore celebrities, Nagore E.M.Haniffa
View

சித்தி ஜுனைதா பேகம் இயற்றமிழ் வளர்த்த நாகூர், சித்தி ஜுனைதா, சித்தி ஜுனைதா பேகம், நாவலாசிரியை, முதல் இஸ்லாமியப் பெண்மணி, by Abdul Qaiyum, Literary Essays
View

Cashewnut நாகூர் வட்டார மொழியாய்வு, வேடிக்கை உலகம், லெவ்வைக்கி மிஞ்சிய ஹராம்ஜாதா, by Abdul Qaiyum
View

அப்பளம் பப்படம்
View

பைக்காரா திண்ணையில் நான், நகைச்சுவை கட்டுரை, திண்ணை கட்டுரை, by Abdul Qaiyum
View

LKS meeran கவிஞர் ஜபருல்லா, கவிஞர் இஜட் ஜபருல்லா, நாகூர் கவிஞர், Z.Zafarullah
View

insaf salah நாகூர் ஹனீபா, இசைமுரசு ஈ.எம்.ஹனிபா, நாகூர் ஹனிபா
View

Buddha Cry என் கவிதைகள், பர்மாவில் முஸ்லீம்கள் படுகொலை, புத்தன் அழுகின்றான், Muslims massacred in Burma
View

கண்ணதாசனும் பெரியாரும் 6-ஆம் பாகம், கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயில், நீதிபதி இஸ்மாயீல் வாழ்க்கைக் குறிப்பு, நீதிபதி மு.மு.இஸ்மாயில், by Abdul Qaiyum, Justice M.M.Ismail, Nagore Writers
View

En Vikatan Page 3 இயற்றமிழ் வளர்த்த நாகூர், நாகூர் ரூமி, என் ஊர், நாகூர், Nagore Writers
View

parveensultana கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், கம்ப ராமாயணமும் கன்னித்தமிழ் முஸ்லீம்களும்
View

namaz கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல்
View

sellappan கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், சிலம்பொலி செல்லப்பன், நாகூர் பிரபலங்கள், Nagore celebrities
View

maha_periyavaa கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், காஞ்சி பெரியவர், நீதிபதி இஸ்மாயில்
View

டாக்டர் சுதா சேஷய்யன் கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல், டாக்டர் சுதா சேஷய்யன், நீதிபதி மு.மு.இஸ்மாயில்
View

R-M-Veerappan கம்பன் அவன் காதலன், நீதிபதி இஸ்மாயீல்
View

கவிஞர் வாலி நீதிபதி இஸ்மாயீல், கம்பன் என் காதலன், கவிஞர் வாலி, நீதிபதி இஸ்மாயீல் அவர்களைப் பற்றி
View

M.S.Subbulakshmi father இசைக் கலைஞர்கள், இசைமணி யூசுப், நீதிபதி இஸ்மாயீல், இசையரசியும் இலக்கியச் செல்வரும், கம்பன் அவன் காதலன், நாகூர் இசை விற்பன்னர்கள், நீதி பதி இஸ்மாயீலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியும்
View

kannadasan TODAY நீதிபதி இஸ்மாயீல், அப்துல் கையூம், கண்ணதாசனும் நீதிபதி இஸ்மாயீலும், கவியரசு கண்ணதாசன், நாகூர் எழுத்தாளர்கள், நீதிபதி இஸ்மாயில், by Abdul Qaiyum, Justice M.M.Ismail, kannadasan & M.M.Ismail, Nagore Writers, Tamil Literature, Tamil Muslims, Tamil writers
View

பெரியார் நீதிபதி இஸ்மாயீல், Justice M.M.Ismail On E.V.R.Periyar, Nagore Writers, Tamil writers
View

கம்பனடிப்பொடி சா. கணேசன் நீதிபதி இஸ்மாயீல், கம்பன் அவன் காதலன், by Abdul Qaiyum, Justice M.M.Ismail, Nagore celebrities, Nagore Writers
View

ஜெயமோகன் நீதிபதி இஸ்மாயீல், Justice M.M.Ismail
View

Parveen Sultana நீதிபதி இஸ்மாயீல், by Abdul Qaiyum, Justice M.M.Ismail
View

nagoori நீதிபதி இஸ்மாயீல், கம்பன் அவன் காதலன், நாகூர் மண் வாசணை, நீதிபதி இஸ்மாயில், நீதிபதி இஸ்மாயீல் வாழ்க்கைக் குறிப்பு, by Abdul Qaiyum, Justice M.M.Ismail, Nagore celebrities, Nagore Man Vasanai, Nagore Writers
View

வள்ளலின் வள்ளல் நீதிபதி இஸ்மாயீல்
View

M.M.Ismail நீதிபதி இஸ்மாயீல்
View

M.M.Ismail with Karunanidhi-1 நீதிபதி இஸ்மாயீல்
View

nagoori இயற்றமிழ் வளர்த்த நாகூர், ஹ.மு.நத்தர்சா
View

Syed Mohammed Hassan அபுல் அமீன், இயற்றமிழ் வளர்த்த நாகூர்
View

vada (17) டோனட் ஆன்ட்டி (சிறுகதை), by Abdul Qaiyum
View

sarana-bhaskaran-new-new1 சாரணபாஸ்கரன்
View

Haniffa & Kalanigar நாகூர் ஹனீபா
View

Haniffa நாகூர் ஹனீபா
View

Thiruvalluvar நாகூர் பாஷையில் திருக்குறள்
View

பீரோட்டம் ஹந்திரி
View

Stilt Walker அகடம் பகடம் (Misc.), சுள்ளானும் உல்லானும்
View

Panangizhangu அகடம் பகடம் (Misc.)
View

Image எழுத்தாளர் ஆபிதீன், ஆபிதீன்
View

Abedheen எழுத்தாளர் ஆபிதீன்
View

nagoori நாகூர் ஹனீபா
View

nagoori நாகூர் சலீம்
View

Arabs sailors Arabia & Mabar
View

nagoori இஸ்லாமும் தமிழிலக்கியமும்
View

LinkWithin

Related Posts with Thumbnails