Sunday, November 3, 2013

அல் நாசர் என்ற பெயர் கொண்டாய்..

அல் நாசர் என்ற பெயர் கொண்டாய்
Sūrat al-Naṣr என்ற இறைவனது வேதத்தில் வரும் சூராவை நினைவு படுத்தினாய்
உனக்கு இறைவனது இறக்கமும் ஆதரவும் மருலோகத்தில் கிடைக்கும்
இறப்பை நீ வேண்டி நிற்க வில்லை
இறப்பு இறைவனின் நாட்டத்தால் உனக்கு வந்தது
இருக்கும் வரை உயர்வான இறைவன் நாடியபடி வாழ்ந்தாய்
இறப்பை கொடுத்த இறைவன் உன்னை உயர்ந்த இடத்தில சுவனத்தை கொடுத்தருளவான்
இதுவே நாங்கள் உனக்காக இறைவனிடம் வேண்டும் பிரார்த்தனை

உன்னை இவ்வுலகில் இழந்து வாடும் எங்களுக்கும் உன் குடுமபத்தருக்கும் இறைவன் அமைதியை தந்தருளட்டும் .ஆமீன்.
====================
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
Surat An-Naşr குர்ஆன்-110:3
-----------------------------------------------


பூம்பூகார் கடலுக்கு குளிக்க சென்ற நீடூர்-நெய்வாசல் ஜின்னாத் தெரு PAM மாலிக் அவர்களின் மூத்தமகன்
அல் நாசர் மன்னம்பந்தல் avc கல்லூரியில் பாலிடெக்னிக் முடித்து அதே கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம்ஆண்டு படித்து வருபவர் தன் நண்பர்களுடன் பூம்புகார் கடலில் குளித்து கொண்டுயிருக்கும் போது அலை அடித்து சென்றது(தீபாவளி அன்று 2-11-2013)
அவரை தீவிரமாக காவல்துறை மற்றும் கடலோர காவல்துறையும் சேர்ந்து மாலை நான்கு மணியிலிருந்து தீவிரமாக உடலை தேடிவருகின்றனர்.விரைவாக மீட்க துஆ செய்வோம்.
உடன் சென்றவர்கள் பத்து பேர் இருக்கும் .மூன்று பேர் அலையில் மாட்ட இருவரை காப்பாற்ற முடிந்திருகின்றது .இறைவன் நாட்டம் இவரை காப்பாற்ற முடியவில்லை .

எங்கள் தெருவில் உள்ளவர் . மிகவும் தெரிந்தவரின் மகன் .என் வீட்டை கடந்து கல்லூரிக்கு செல்வார் .அழகிய நடை சிறந்த தோற்றம் ,அமைதி ,படிப்பிலும் சிறப்பு .நல்ல பையன் .செய்தி கேட்டு என் மனமும் மிகவும் பாதிக்கப் பட்டது .

அவருக்காக அதிகம் பிரார்த்திப்போம்....யாஅல்லாஹ்..அந்த சகோதரனை நல்லப்படியாக உயிருடன் மீட்டுத் தருவாயாக...

விரைவாக கிடைக்க இறைவனிடம் இருகரம் ஏந்துவோம்.. இந்த இளைஞனை பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாக கீழ்காணும் எண்ணுடன் தொடர்புகொள்ளவும்

04365 242999
04364 270900
04364 260442
94454 94303
94892 59080
75027 61110

 இறைவனின் நாட்டத்தால் சகோதரர் அல் நாசரின் உடல் இன்று04/11/2013காலை தரங்கம்பாடியை அடுத்த வானகிரியில் கரை ஒதுங்கியது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸாவை பொறையார் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டு இன்றே இன்ஷாஅல்லாஹ் பிரேத பரிசோதனக்கு பின் இரண்டு மணிக்கு நீடூர்-நெய்வாசலில் நல்லடக்கம் செய்யப்படும் .
அல் நாசர் என்ற அன்புத் தம்பியின் மண்ணறை வாழ்வும் மறுமை வாழ்வும் சுவன வாழ்வாக அமைய அல்லாஹ் அருளட்டும்.!ஆமீன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails