Monday, September 30, 2013

“ஹஜ்” என்னும் ஓர் அற்புதம்!


சாந்திச்  சரணா  லயமாம் – ஹஜ்ஜில்
............சாரும் புவியின்  முதலா லயமாம்
ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே—அருள்
…….......இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே

தந்தைஇப் றாஹிம்பாங் கோசை- இந்தத்
..........…தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம்
சிந்தையிட் சேருமிறை போதம்- ஆங்குச்
............…சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம்

அரபு நாட்    டுக்குள்ளோர்    நாடு - அங்கே
.......….அகிலமுஸ்     லிம்களின்  கூட்டுமா   நாடு
 மரபு  வழிகளில்  தேடல்  -புவி
........….மனித  நதிகளின்  சங்கமக் கூடல்

வெள்ளை யுடையில் மகிழ்ச்சி - மக்கள்
......வெள்ளத்தால் மக்கா நகரம் நெகிழ்ச்சி
உள்ளம் அழுக்கினைப் போக்கும் —அங்கே
......…உள்ஹிய்யா என்பதும் இந்தநல் நோக்கம்

நிலவதும்   நாணியே  கேட்கும் -  ஹாஜி
 … நிலவிடும்  பேரொளி  உன்னிப்பாய்ப்  பார்க்கும்
 உலவும்   சமத்துவம்  மெய்க்கும் — உண்மை
 …….உலகம்  தெளிந்திட  நாட்டியே வைக்கும்

  பாமுகம் வியாழன் கவிதை நேரம்; விருப்புத்தலைப்பு
 “ஹஜ்” என்னும் ஓர் அற்புதம்!

“கவியன்பன்” கலாம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails