Saturday, March 30, 2013

சொல்ல வேண்டியதை சொல்லு தவிர்க்க வேண்டியதை தவிர்!


  ஒரு முறை நாயகம் அருகில் ஒரு பெண் வந்து 'நான் கற்புக்கு களங்ம் வர தவறு செய்து விட்டேன்.அதனை நினைத்து இறைவனிடம் மன்னிப்பு தேடுகின்றேன்.இறைவன் மன்னிப்பானா' என்று மனமுருகி கேட்க நாயகம் மறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள் .அப்பக்கமும் சென்று அப்பெண்  அதையே தொடர நாயகமும் வேறொரு பக்கம் திரும்ப அந்த பெண் விடுவதாக இல்லாமல் தன் கவலையை வெளிப்படுத்த விரும்ப நாயகம் '  இறைவன் மறைத்து வைக்க  நீ ஏன் வெளிப் படுத்துகின்றாய்' என்றார்கள் .
பின்பு மார்க்க சட்டப்படி அவளுக்கு உரிய தண்டனை கொடுக்கப் பட்டபோது கூடி நின்ற மக்கள் எள்ளி நகைத்தனர் . நாயகம் நகைக்காதீர்கள் அப்பெண் இறைவனது மன்னிப்பை பெற்று விட்டார் அதனால் அவருக்கு சுவனம் கிடைக்கும்' என்று மற்றவர்களை கண்டித்தார்கள்
 சுவனம் கிடைக்கும்' என்று மற்றவர்களை கண்டித்தார்கள்

Wednesday, March 27, 2013

யாஹூ வுடன் இணைந்து கோடீஸ்வரன் ஆன 17 வயது சிறுவன்!

லண்டன்: தனது முயற்சியால் உலகின் மிக இள வயது கோடீஸ்வரன் என்ற பட்டியலில் லண்டனை சேர்ந்த 17 வயது சிறுவன் பெற்றுள்ளார்.

நிக் டி அலிஸ்யோ என்ற சிறுவன் செல்போனில் செய்தி வாசிக்கும் முறையை( summly mobile-phone application)  கண்டுபிடித்துள்ளார்.

இச்சிறுவன் கண்டுபிடித்த இந்த புதிய அப்ளிகேசனை யாஹூ செய்தி நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக ரூ.165 கோடி முதல் ரூ.330 கோடி வரை வழங்க யாஹூ நிறுவனம் தயாராக உள்ளது. மேலும் இச்சிறுவனுக்கு யாஹுவில் வேலையும் வழங்கப் பட்டுள்ளது.
Source : http://www.inneram.com/

கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களுக்கு 'காயிதே மில்லத் பிறை' விருது!


                                  ஆளூர் ஷாநவாஸ்— with Thalaivar Thiruma and Thol.thirumaavalavan.
கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களுக்கு 'காயிதே மில்லத் பிறை' விருது!
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாள் அன்று
விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள், தமிழகத்தின் அரசியல், சமூக, கலை, இலக்கியத் தளத்தில் சேவையாற்றி வரும் சான்றோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

காயிதே மில்லத் பிறை விருது 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. 2008 இல் கோவை சிறையில் வாடிக் கொண்டிருந்த அப்துல் நாசர் மதானி அவர்களுக்கும்,
2009 இல் சென்னை சிறையில் வாடிக் கொண்டிருந்த குணங்குடி ஹனீபா அவர்களுக்கும்,
2010 இல் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும்,
2011 இல் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுக்கும்,
2012 இல் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

அந்த வரிசையில் இந்த ஆண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
60 ஆண்டுகால பொதுவாழ்வு சேவைக்கு உரியவர் கொடிக்கால். தெற்கெல்லை விடுதலைப் போராட்டம், பொதுவுடைமை இயக்கம், தலித் விடுதலை, அரசியல் களப்பணி, இதழியல், இஸ்லாமிய அழைப்பியல் என
பல்வேறு தளங்களில் பயணப்பட்டவர்.

Friday, March 22, 2013

ஊர் பெயரில் பயனுள்ள தளங்கள்

ஊர் பெயரில் இயங்கும் இணையதளங்கள்

பிற ஊர் இணையதளங்கள்

Wednesday, March 20, 2013

முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் சென்ற வருடம் முஸ்லிம் அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று.

இதற்கான பதில் -
ஆம் - 80%

முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.

காலப் நிறுவனத்தின் முஸ்லிம் அமெரிக்கர்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....

1. இனப் பின்னணி:

முஸ்லிம் அமெரிக்கர்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில், ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.

28% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

கடைசியாக, சுமார் 1% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..

2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு முஸ்லிம் அமெரிக்கர்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.

Sunday, March 17, 2013

உயர்சாதி பிடியில் ஊடகங்கள் : ப.சிதம்பரம்

ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் பிடியில் இருக்கின்றன என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குறிப்பிட்டார். காரைக்குடியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச வந்த ப.சிதம்பரம் வெறுமே சட்டம் போடாமல் சட்டங்களை  எல்லாம் திட்டங்களாக மத்திய அரசு ஆக்கிவருகிறது என்றும் கூறினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல நல்ல திட்டங்களை,  குறிப்பாக கல்வி உரிமை, வேலைவாய்ப்பு,தகவல் அறியும் உரிமை உணவுக்கு உறுதி என்று நடைமுறைப்படுத்தி வருவதாகச் சிலாகித்த சிதம்பரம் ஊடகங்கள் இதனையெல்லாம் செய்தியாக்குவதில்லை என்று குறைப்பட்டார்.

Friday, March 15, 2013

இனியொரு நாள் வருமோ...

" முஸ்லிம் " என்ற ஒற்றை வார்த்தை

இன்று எத்தனையோ வார்த்தைகளாய்

வெடித்துச் சிதறி

சின்னா பின்னமாய்

சிதறிக் கிடக்கிறதே ...

அடையாளத்தைத் தொலைத்து விட்டு

அகங்காரத்தை அணிந்து கொண்டு

அலங்கோலம்

அரங்கேறி விட்டதே...

நேற்று வரை உன் வீட்டில் நானும்

என் வீட்டில் நீயும்

ஒரே தட்டில்

உண்டு மகிழ்ந்த உணவெல்லாம்

இன்று

வாந்தியாக

வெளியேறி விட்டதே...

ஒரு கொடியே கூடாதென்று

கூறி விட்டு

ஓராயிரம் கொடிகளுக்காக

கிழிந்து போனோமே...

இனியொரு நாள் வருமோ...

பகையினை

பகை கொள்ளும் பலம் வருமோ...
 Abu Haashima Vaver


நன்றி - Bro Abu Haashima Vaver


Thursday, March 14, 2013

ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்,..

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumu'ah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew.- Quran. 62:9

உம்மத்தில் கருத்து வேறுபாடுகள் களைய என்ன வழி?

உம்மத்தில் கருத்து வேறுபாடுகள் களைய என்ன வழி?
-------------------------------------------------------------------------
“இந்தச் சமுதாயத்தின் அவல நிலையைக் கண்டு மனம் அழுதது. அதற்கானகாரணங்களைத் தேடி என் மனம் அலை பாய்ந்தது. நான் மால்டா சிறையிலிருக்கும் பொழுது இது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்”. – இப்படிக் கூறியது ஷேகுல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் உல் ஹஸன். 1920ல் தனது 69 வயதில் இதைக் கூறிய அவர்கள், அக்காலத்தில் சிறந்த மார்க்க அறிஞராக திகழ்ந்தது மட்டுமல்லாமல் ஆங்கிலேய காலணி ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடியவர்கள்.

ஆலிம்கள் நிறைந்திருந்த அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பொழுது அவர்கள் இதைக் குறிப்பிட்டார்கள். சமுதாயத்தின் அவல நிலைக்கு என்ன காரணம் கூறப்போகிறார்கள் என்று கூட்டம் அவர்களை ஆவலுடன் நோக்கியது.

அவர்கள் கூறினார்கள் : “நமது பிரச்சனைகளுக்கு இரண்டே இரண்டு காரணங்கள் தாம் உள்ளன. அவை,

1. நாம் குர்ஆனைக் கைவிட்டது.
2. நமக்கிடையே நடக்கும் உள்சண்டைகள்”.

இப்படிக் கூறிய மௌலானா அவர்கள். அதன்பிறகு சொற்ப காலமே உயிர் வாழ்ந்தார்கள். அந்தச் சொற்ப காலமும் இந்த காரணங்களைக் களைந்து, முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்கு கடுமையாக உழைத்தார்கள்.

இந்தக் காரணங்கள் எவ்வளவு உண்மை நிறைந்தவை என்பது நமக்கெல்லாம் புலப்படும். இந்த இரண்டு காரணங்களும் ஒன்றுக் கொன்று சம்பந்தமுடையவை. இரண்டாவது காரணம் முதல் காரணத்தாலேயே உருவாகிறது.

திருக்குர்ஆன் முஸ்லிம்களை சகோதரப் பாசமுள்ள ஒரே சமுதாயம் எனப் பிரகடணப்படுத்துகிறது. உள் சண்டைகளைப் பற்றி அது கடுமையாக எச்சரிக்கிறது. நாம் திருக்குர்ஆன் விடுத்த பிரகடனத்தையும் எச்சரிக்கையையும் மறந்துவிட்டோம். இன்று அகிலமெங்கும் பரவி வாழும் 130 கோடி முஸ்லிம்களும் பல கூறுகளாக பிரிந்து கிடக்கின்றோம். சில குறுகிய மனப்போக்குள்ள சுய நல காரணங்களுக்காகவே நமக்குள் பெரும்பாலான சண்டைகள் நடக்கின்றன.

Tuesday, March 12, 2013

பெற்றோருடன் அப்துல் நாஸர் மஃதனி சந்திப்பு! பிரார்த்தனையின் போது கண்ணீர் விட்டு அழுதார்!

கொல்லம்:5 நாள் ஜாமீனில் வெளிவந்துள்ள அப்துல் நாஸர் மஃதனி அன்வாருச் சேரியில் தனது பெற்றோர்களை சந்தித்தார்.நோய்வாய்ப்பட்டுள்ள தந்தை அப்துல் ஸமது மாஸ்டர் மற்றும் தாயார் அஸ்மாபீவி ஆகியோரை சந்தித்த மஃதனி அவர்களுடன் மதிய உணவை சாப்பிட்டார்.

     மதிய தொழுகையான லுஹரில் தலைமை வகித்த அப்துல் நாஸர் மஃதனி தொழுகைக்கு பிறகு நடந்த பிரார்த்தனையின் போது கண்ணீர் விட்டு அழுதார். “நான் குற்றவாளி என்றால் என்னை தண்டித்துவிடு. நான் நிரபராதி. தேசத் துரோகம் குற்றம் சாட்டி அடக்கி ஒடுக்க முயற்சிக்கின்றார்கள்.பிறந்த மண்ணை நேசிப்பவர்கள் நாங்கள். நீதிக்காக மரணிக்கவும் தயார்” என்று மஃதனி பிரார்த்தனையின்போது கூறினார்.
 

     பின்னர் அவர் அங்கிருந்தவர்களுடன் நலம் விசாரித்துவிட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். இன்று அவர் சிறைக்கு திரும்புவார் என்று பி.டி.பி வட்டாரங்கள் தெரிவித்தன.
Source : http://adiraithunder.blogspot.in

கல்வியின் சிறப்பு -காண வேண்டிய காணொளி

கல்வியின் சிறப்பு -காண வேண்டிய காணொளி

துபாய் சாதனை: ஒரு கோடி சுற்றுலா பயணிகள்

கடந்த 2012 ஆண்டு துபாய் மாநகருக்கு ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதால் துபாய் சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு அது இன்னும் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளதால் கடந்த ஆண்டு தங்கும் விடுதிகளின் மட்டும் 18.82 பில்லியனுக்கு வருமானம் பெற்றுள்ளதாகசுற்றுலாத் துறையின் பொது இயக்குநர் ஹிலால் அல்மர்ரி தெரிவித்துள்ளார்.

நகர நிர்வாகத்தில் காணப்படும் ஒருமித்த திறமைகள், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள், கிழக்கத்திய நாடுகளுக்கும்,மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அமைந்திருக்கும் தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய வகையில் அத்துறையினரின் இடைவிடா முயற்சிகளும், அதனால் பயணிகளுக்கு கிடைக்கும் பலன்களும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : http://www.inneram.com/
-----------------------------------------------------

Monday, March 11, 2013

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்...

எதிர்காலத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள்
- பௌத்த அச்சம் - நன்றி காலச்சுவடு

                                                    எம். ரிஷான் ஷெரீப்
இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக்கூடிய பிரிவினைவாதச் சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறிவைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருகிறது. இந்நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்தங்களுக்குள் முஸ்லிம்கள் இலங்கையில் பெரும்பான்மையினராக ஆகிவிடுவார்கள் என்னும் அச்சம் இனவாதச் சக்தி களைப் பெருமளவில் அச்சுறுத்தி யிருக்கிறது. இந்நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முஸ்லிம்களை அடக்கிவைக்கவும் பல்வேறு விதமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேஷத்தைக் கிளப்பும் பற்பல நடவடிக்கைகள் காலங்காலமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த போதிலும், அண்மையில் பங்களாதேஷில் பௌத்தர்களுக்கு எதிராக நிகழ்ந்த சில வன்முறைகள், இலங்கையிலுள்ள முஸ்லிம்களையும் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு ஏதுவாக அமைந்தன. பங்களாதேஷ் வன் முறைகளுக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் ‘பொது பல சேனா இயக்கம்’ எனும் பௌத்த அடிப் படைவாத அமைப்பால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டன. இந்த இயக்கத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் அதிகளவில் பௌத்த பிக்குகளே உள்ளனர்.

ஒவ்வொரு மாதத்தினதும் பௌர்ணமி தினமானது, போயா எனப்படும் பௌத்தர்களின் புனித தினமாகும். இத்தினத்தில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆண்களும் பெண்களுமாகப் பௌத்த விகாரைகளில் நடைபெறும் மதப் போதனை நிகழ்வுகளில் வெண்ணிற ஆடையுடன் கலந்துகொள்வர். பௌத்த பிக்குகளால் நிகழ்த்தப்படும் போதனைகளுக்குள் முஸ்லிம் இன வெறுப்பை ஏற்படுத்தும் பல விடயங்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே சிறிது சிறிதாக ஊட்டப்படுகின்றன. இவ்வாறு விதைக்கப்படும் நச்சு விதைகள் எதிர்காலத்தில் பெருவிருட்சங்களாக மாறி வெகுவிரைவில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக் கலவரங்கள் ஏற்படக் காரணமாக அமையும்.

Thursday, March 7, 2013

இறைவா..!

உங்கருணையில துளியளவு
தூவிவிட்டா புவிசெழிச்சு
பூந்தோட்ட மாகுமப்பா

மலையளவு எம்மடியிலநீ
போட்டுபுட்ட மனமெல்லாம்
உங்கீர்த்தி பாடுதப்பா

நல்லதுநாலு செஞ்சு
தரணியில வொருகூட்டம்
உன்வழியில வாழுதப்பா

எம்போல் பாவியொருத்தன்
படியேற உம்வேதம்
ஒர்வழிய காட்டுதப்பா

என்னிதயத்துல குடியிருக்கு
மன்பர்பலர் பார்வையில
இவ்வுலகமழகாய் தெரியுதப்பா

எனக்கிட்ட பிச்சபோல
வொருபுடிய உங்கருணையால
அவர்மடியில போடுமப்பா

இத்தனநாள் நாஞ்செய்யு
தீமையெல்லாம் என்னத்தீண்டாம
தீக்கிறை யாக்குமப்பா

வருநாளெல்லாம் உம்புகழ்
பாடியுனக்கோர் நல்லடிமை
இவனென் றாக்குமப்பா...

rafeeqspoem.
இவன் சக்தி..!
Source : http://rafeeqspoem.blogspot.in/

Wednesday, March 6, 2013

போப் செய்தி உண்மையல்ல, ஆனால் இது உண்மை



அஸ்ஸலாமு அலைக்கும்,

போப் குறித்த வதந்திகள் ஒரு முக்கிய உண்மை செய்தியை மறைத்து விட்டன. சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு கிரீட் வில்டர்ஸ் (Greet Wilders) என்ற பெயர் நன்கு அறிமுகமாகி இருக்கும். டென்மார்க்கின் தீவிர வலது சாரி

                                                                  (    “I have all faith in Allah to support me and to guide me through these moments," Doorn said.
 Image source)

 இப்போது வெளியாகி இருக்கும் அந்த முக்கிய செய்தி என்னவென்றால், இந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான Arnoud Van Doorn இஸ்லாமை ஏற்று பெரும் பரபரப்பை ஐரோப்பாவில் ஏற்படுத்தியுள்ளார். "பெரும் பரபரப்பு" என்பது நிச்சயம் சாதாரண வார்த்தையாகவே இருக்க முடியும். இஸ்லாம் மீதான தன் கட்சியின் வெறுப்புணர்வு இஸ்லாம் குறித்து ஆராய தூண்டியதாகவும், ஒரு வருட ஆய்வுக்கு பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அல்-ஜசீரா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் Arnoud Van Doorn.

தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ள இவர், தான் மிகப்பெரும் சவாலை சந்திக்கவிருப்பதை உணர்ந்துள்ளதாகவும், இவற்றில் இருந்து விடுபட இறைவன் உதவுவான் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய உலகில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி குறித்து முழுமையாக படிக்க.. http://www.onislam.net/english/news/3341/461645.html




வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Saturday, March 2, 2013

நமக்காக அங்கே ஒன்று இருக்க துயரம் ஏன்? துவளல் ஏன்!




நமக்காக அங்கே ஒன்று இருக்க துயரம் ஏன்? துவளல் ஏன்!

மிகவும் அலுப்பாக உள்ளது
சென்னையே மிகவும் மக்கள் நெருசலான நகரமாக உள்ளது
சென்னைக்கு போக நான் விரும்பவில்லை

செய்தி வந்தது மகனிடமிருந்து சென்னைக்கு பணமும் பொருளும் சென்னை வாழ்வோர் கொண்டு வந்திருப்பதாக

அலுப்பும் மறைந்தது ,உத்வேகமும் வந்தது போன வேகம் தெரியவில்லை பொருளையும் பணத்தையும் பெறுவதற்கு சென்னை சென்றதில் .
உள்ளத்தின் வேகம் வயதைக் கடந்தது . இறுதிவரை இயன்றவரை ஏதோ நமக்காக காத்திருக்கின்றது என்ற நினைப்பில் செயல்படுங்கள் அது இறுதி பிரயாணமாகவும் இருக்கலாம்

LinkWithin

Related Posts with Thumbnails