Thursday, January 24, 2013

இஸ்லாமிய தீவிரவாதம்' என்று போடுவது ஏன்?

இஸ்லாமிய தீவிரவாதம்' என்று போடுவது ஏன்? தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. தனி மனிதன் செய்யும் தவறுக்கு ஒரு மார்க்கத்தை சார்ந்த மக்களை குறிப்பிட்டு பேசுவது அல்லது படம் எடுப்பது முறையா!
அடுத்து வாழும் மக்கள் உணர்வை அறிந்துக் கொள்ளாமல் பிரிவு உண்டாக்கும் முயற்சி ஏன்! சினிமா பொழுது போக்கும் இடமாகவோ அறிவைத் தருமிடமாக இருக்க முயலுங்கள் .சாராயம் விற்று பொருள் ஈட்டுவதுபோல் தீங்கான கருத்துகளை புகுத்தி படமெடுத்து மனிதர்களை கெடுக்க முயலாதீர்கள். புதிதாக படம் எடுப்பவர்கள் அருமையாக படமமெடுக்க கோடிக் கணக்கில் பணம் போட்டு படமெடுத்து மக்களுக்குள் பிரிவு உண்டாக்காதீர்கள் . விஸ்வரூபம் தமிழ் பெயரே அல்ல . ஒரு நலம் விரும்பும் தமிழன் குழப்பதை உருவாக்க முயல்வது முறையா? கமல் நல்ல மனிதனாக இருக்கலாம். அவர் சரித்திர படம் எடுப்பதுபோல் இத்தனை கோடி பணம் போட்டு ஒரு சமூகததையே வருந்த வைப்பது நன்மையாக இருக்க முடியாது.அவர் அடுத்தவருக்கு தவறான பாதையை காட்டிவிடக் கூடாது.
----------------------------------------------------------------------------------------------------------------------
இங்கு விமர்சனம் செய்பவர்கள் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும் எங்களுக்கு கமலஹாசன் என்ற தனிப்பட்ட கலைஞன் மீது எந்த கோபமும் இல்லை அரங்கேற்றம் என்ற திரைப்படத்தில் மிக ஆச்சார்யமான பிராமண குடும்பத்தில் பிறந்த பெண் தனது குடும்பத்தை விபசாரம் செய்து காப்பாற்றுவதாக இயக்குனர் காட்டி இருப்பார் இதை காரணம் காட்டி இன்று உள்ள அத்தனை பிராமணர்களும் அப்படி தான் என்று சொல்வது எந்த அளவுக்கு அபத்தமோ அந்த அளவுக்கு அபத்தம் இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது. தீவிரவாதி எந்த மதத்தில் இல்லை ,அதுவும் அல்லாமல் திரை படம் என்பது ஒரு சக்தி மிகுந்த மீடியா. நூறு பேனாக்கள் செய்ய முடியாததை ஒரே ஒரு காட்சி செய்து விடும் இந்த திரைப்படம் அனுமதிக்கப்பட்டால் அதை பார்க்கும் குறிப்பாக பிஞ்சுகளின் மனதில் முஸ்லிம் என்றால் இப்படி தான் என்று ஆழமாக பதிந்து விடும்

தான் செலவு செய்திருக்கும் சில கோடிகளை மட்டுமே அவர் மனதில் நினைக்கிறாரே தவிர அந்த திரைப்படம் வெளியானால் அதன் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்கள் விலை மதிப்பற்ற பல உயிர்களை பலி வாங்கி விடும் அபாயம் இருக்கிறது அதுவும் அல்லாமல் இப்படி ஒரு சம்பவத்திற்காக காத்திருக்கும் ரத்த வெறி பிடித்த ஓநாய்கள் தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடித்து கொண்டு இருக்கிறார்கள் வேண்டாம் விபரீதம்

அமைதியை விரும்பும் தமிழர்கள் இஸ்லாமியர்களுக்கு தோள் கொடுப்பது இந்த நேரத்தில் நல்லது
by Riaz Ahamed to yuva//

1 comment:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

VERY NICE VALUABLE ARTICLE THANKS

SALAM,

முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

LinkWithin

Related Posts with Thumbnails