Thursday, December 27, 2012

ஏதேதோ எழுத எண்ணி..!

உன்னப்பத்தி ஏதேதோ
எழுத எண்ணி ஒரு
வார்த்த சிக்காம ஒரு
வழியா எழுதப்போறேன்

ஓங்கி வளந்த மரமொன்னு
ஒருவழியும் புரியாம ஒத்தையில
நிக்கயில நட்பொன்ன தூக்கிட்டு
வழி காட்ட வந்தவளே

வந்தவழி போனவழி
யெல்லாம் முல்லு வழி
ஒத்தவழி காட்டிபுட்ட - அதுவும்
பட்டு விரிச்சப் புல்லுவெளி

வெட்டிபய நானும் ஊரச்சுத்திவந்தேன்
காட்டாறா என்ன மோட்டாரு
தண்ணியா வெளச்சளுக்கு பாச்சிவிட்ட
வெள்ளமைக்கும் உரியவனா மாத்திப்புட்ட

பணடமாற்று முறையிலையும்
மாத்தவொரு  பண்டம் வேணும்
உன் அன்பமாத்த  வெட்டிபய
அன்பத்தவிர வேறில்லையே


அகராதியா இருந்தவன அதிகாரியா
மாத்தயெண்ணி அரிதாரம் பூண்டவளே,
ஆண்டவன் அருளாசியோட கூட
உன் அன்போட உரியுடைக்கும்
கோலைப்போல வெச்சக்குறி அடிச்சு
குறிக்கோல அடயப்போறேன்..!
Source : http://rafeeqspoem.blogspot.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails