Sunday, November 25, 2012

மத்திய உளவுத் துறைக்கு புதிய இயக்குனர்!

மத்திய உளவுத் துறையின் புதிய இயக்குனராக 1977 ஆம் வருட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஆசிப் இப்ராஹீம் நியமிக்கப் பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய உளவுத் துறையின் இயக்குனராக பொறுப்பு வகித்து வரும்  நேசால் சந்து வரும் டிசம்பர் 31 அன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து மத்திய உளவுத் துறையின்  புதிய இயக்குனர் பொறுப்புக்கு  ஆசிப் இப்ராஹீமை பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழு தேர்வு செய்துள்ளது.

மத்திய உளவுத் துறையில் சிறப்பு இயக்குனராகப் பொறுப்பு வகிக்கும் ஆசிப் இப்ராஹீம், கடந்த 20 வருடங்களாக உளவுத் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails