Monday, October 29, 2012

தனது 189 வாரிசுகளுடன் பக்ரீத் கொண்டாடிய மூதாட்டி!

திருப்பூரைச் சேர்ந்த 107 வயது பாட்டி ஜெஹராவி, தனது 189 வாரிசுகளுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தார்.

திருப்பூரில் பனியன் தொழில் செய்து வரும் ஜெஹராவி பாட்டியின் குடும்பத்தினர்  1 மகன், 3 மகள்கள், பேரன், பேத்திகள் 39 பேர், கொள்ளுப் பேரன், பேத்திகள் 71 பேர் உள்ளிட்ட 189 பேர்  கூட்டுக் குடும்பமாக திருப்பூர் அருகேயுள்ள நல்லூர் பகுதியில் ஒரே காலனியில் வசித்து வருகின்றனர். பாட்டியின் கணவர் சையத் அப்துல் லத்தீப் 40 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

பத்திரிகை அடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து, ஜெஹராவி பாட்டி குடும்பத்தினர், இவ்வருட பக்ரீத் பண்டிகை விழாவை விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Source : http://www.inneram.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails