Tuesday, September 25, 2012

படித்தேன் பிடித்தேன் (பகுதி-3)



                                                        படித்தேன் பிடித்தேன் 007
குர-ஆன்
முகம்மது நபி வழியே இறங்கிய இறை வசனங்கள்

ஹதீத்
முகம்மது நபியின் வாழ்க்கைக் குறிப்புகள் உபதேசங்கள்


குர்-ஆன்
எல்லா காலத்துக்கும் ஏற்புடையவை என சில வசனங்கள், நபி வாழ்ந்த காலத்துக்கு என்று சில வசனங்கள், நபிக்கு முன் வாழ்ந்தவர்களின் வரலாறு என்று சில வசனங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.

ஹதீத்
முகம்மது நபி சொன்னதாக பத்துத் தலைமுறைகளாக செவி வழியாகவும் ஏடுகள் வழியாகவும் சொல்லப்பட்டு முகம்மது நபி இறந்து இருநூறு வருடங்கள் கழித்து தவறானவற்றை நீக்கி அன்றைய நாள் சுன்னத் ஜமாத் ஆய்வுக் குழுவினருக்கு ஏற்புடையவற்றை மட்டும் தொகுத்த குறிப்புகள்

குர்-ஆன்
பெரும்பாலும் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவை

ஹதீத்
பெரும்பாலும் நபி வாழ்ந்த காலகட்டத்திற்குப் பொருத்தமானவை



படித்தேன் பிடித்தேன் 008

நம்பிக்கையே காமதேனு - பாரதியார்

பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது.

நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது.

சிஷ்யன் பயந்து போய், "இனி என்ன செய்வது?" என்று தயங்கினான். அப்போது நபி, " அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை." என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை.

குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்

 
படித்தேன் பிடித்தேன் 009

இணைவைத்தல் கூடவே கூடாது என்பது
இஸ்லாத்தின் அடிப்படை

அந்த ஏகத்துவக் கொள்கையில்
தடம் புரளாத அனைவரும் இஸ்லாமியர்கள்

உலக வாழ்க்கைப் பயணத்தில்
ஏனைய செயல் முறைகளில் கருத்து வேறுபாடு கொள்வதும்
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதும்
தீர்வு காண்பதும் தவறானதல்ல

ஆனால், எக்காரணம் கொண்டும் எந்த ஒரு சிறு முரண்பாடும்
இஸ்லாமியர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடாத
அக்கறையும் கவனமும் எப்போதும் இருப்பது
எல்லோருக்கும் கடமையாக வேண்டும்

Source : http://anbudanislam
படித்தேன் பிடித்தேன் (பகுதி-2)
படித்தேன் பிடித்தேன்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails