Friday, August 24, 2012

ஆசை

ஆசை:
பற்றற்றத் துறவியும்
பற்றறுக்கப் பிறக்கும்
ஈரெழுத்து மந்திரம்
ஈர்த்திடும் தந்திரம்

தன்னம்பிக்கை மரத்தின்
தகர்க்கவியலாத ஆணிவேர்

வாழ்க்கை வணிகத்தின்
வட்டியில்லா முதலீடு

தாம்பத்திய இசையில்
தார்மீகச் சுருதி

அளவுக்கு மிஞ்சினால்
அஃதே நஞ்சாகும்
அளவோடிருந்தால்
ஆசையுன்னிடம் தஞ்சமாகும்

கடவுள் பக்திக்கும் ஆசை
காதலைச் சொல்லிடும் ஆசை
படிப்பின் பிடிப்பிலும் ஆசை
பணத்தின் தேடலும் ஆசை

ஆசையின்றி அகிலமும் அசையாது
ஆசைப்படுதல் ஆக்கத்தின் விசையாகும்

“கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்,



ஆசை
ஒரு பக்கம் தனிமை வேணும்கிறார்  
ஒரு பக்கம் ஆசை வேணும்கிறார்

ஒன்னுமே புரியலையே....இப்பவே கண்ணைக் கட்டுதே.......


ஆசையே துன்பத்திற்குக் காரணம்
(அதிக) ஆசையே துன்பத்திற்குக் காரணம்
அது அனைவரின் மண்டையில் ஏறணும்

வசனத்தைப் பாருங்க..... என்ன அருமை இன்னிக்குத் தான் வௌங்குச்சு இதன் பெருமை

எனக்கு வௌங்குனது. 

யாருக்கு அல்லாஹ் அதிகமாத்தர்ரானோ அவனுக்கு பேராசை இருக்குங்கறான்

யாருக்கு அல்லாஹ் குறைவாத்தர்ரானோ அவனுக்கு போதுமென்ற மனசு இருக்குங்கறான்

ஆஹா என்ன அருமை.

அவன் அடியார்களின் தன்மையை அறிஞ்சு  தர்ரானாம்.
( முதுவையார் வலைத்தளப் பதிவு)
With best regards
Kamal

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails