Friday, August 24, 2012

உனக்கு உரிமை இல்லை

உனக்கு உரிமை இல்லை:

உன்னையே அழித்துக்கொள்ள
உயிர்தந்த அன்னை தந்தை
உனக்கு தந்தனரோ அனுமதி?

காதலில் தோல்வியா?
இந்த மலர் இல்லையேல்
இன்னொரு மலர் உண்டு
இந்த வண்டு இல்லையேல்
இன்னொரு வண்டு உண்டு
காதலர்களே!
இந்த உயிர் இல்லையேல்
இன்னொரு உயிர் உண்டா?

வாழ்க்கையில் விரக்தியா?
வள்ளுவரின் குறளை
வாசித்துப்பாரு தினமும்
வந்து சேரும் எல்லா வளமும்

கொள்கை தீக்குளிப்பா?
கொடுமையான உயிரிழப்பு
தேவை நீ இந்த நாட்டுக்கு
தீர்வு தருமா உன் தீக்குளிப்பு?

தேர்வில் தோல்வியா?
உன் அறிவை சோதிக்க
உண்டோ தகுதி எவருக்கும்?
உன்னையே அறிவாய் நீ
உலகம் உன்னை அறியும் 

ஒரு நிமிடம் நிதானித்தால் 
உலகம் உன் உள்ளங்கையில்
உன்னையே அழித்துக்கொள்ள
உனக்கு உரிமை இல்லை

பரிதி.முத்துராசன் கவிதைகள்

Source : http://parithimuthurasan.blogspot.in/


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails